கொல்கத்தா - செப்டெம்பர் 16, மத்தியில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தமது அமைச்சர்களை விலக்கிக்கொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி மம்தா இறுதி முடிவு எடுப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் கட்டுப்பாடு, அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். அது மட்டும் இன்றி விலைவாசி உயர்வையும் கட்டுபடுத்துமாறு ஆரம்பம் முதலே கூறி வருகிறார். இக்கோரிக்கைகளை ஏற்கத் தவறினால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்றும் அவர் அறிவித்தார். இது தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசுக்கு 72 மணிநேரக் கெடு விதித்துள்ளார். இந்தக் கெடு திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது.
கொல்கத்தா - செப்டெம்பர் 16, மத்தியில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தமது அமைச்சர்களை விலக்கிக்கொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி மம்தா இறுதி முடிவு எடுப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் கட்டுப்பாடு, அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். அது மட்டும் இன்றி விலைவாசி உயர்வையும் கட்டுபடுத்துமாறு ஆரம்பம் முதலே கூறி வருகிறார். இக்கோரிக்கைகளை ஏற்கத் தவறினால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்றும் அவர் அறிவித்தார். ஆனால் மத்திய அரசு மம்தா-வின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் என்பது சந்தேகமே . . !
|