மத்திய பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.,) மூலம் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கூடுதலாக இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள விதிமுறைப்படி, பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நான்கு முறையும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஏழு முறையும் தேர்வு எழுதலாம். தற்போது, இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இரண்டு பிரிவையும் சேர்ந்தவர்கள், மேலும் இரண்டு முறை, இனி, தேர்வு எழுதலாம். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு, இந்த கட்டுப்பாடுகள் இல்லை; எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.
|