இந்திய தூதரகம் உட்பட 38 வெளிநாட்டு தூதரகங்களை அமெரிக்க அரசு உளவு பார்த்ததாக லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ வின் முன்னாள் கணினி நிபுணர் எட்வர்டு ஸ்னோடென், பல புலனாய்வு ரகசியங்களை அம்பலப்படுத்தினார், இவர் ரஷ்யாவில் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது, அதில் அமெரிக்காவில் உள்ள 38 நாடுகளின் தூதரகங்களை அமெரிக்க உளவு பிரிவு, இன்டெர்நெட் ஓயார்களில் அதிநவீன ஆன்டெனாக்களை பயன்படுத்தி தகவல்களை திருடியாதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும் படி அமெரிக்காவை மற்ற நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
|