LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அமெரிக்க கப்பலில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் : கியூ பிரிவு போலீசார் விசாரணை !!!

இந்திய கடல் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த, அமெரிக்கா கப்பலில் இருந்த ஆயுதங்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அத்துமீறி நுழைந்த அமெரிக்கா கப்பல் :

 

இந்திய கடல் எல்லை பகுதிக்குள், கடந்த சில தினங்களுக்கு முன், அமெரிக்காவை சேர்ந்த "சீமென் கார்டு ஓகியா" என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து பிடித்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

 

அமெரிக்க கப்பலில் 10 மாலுமிகள், 25 வீரர்கள் என மொத்தமாக 35 பேர் இருந்தனர். இது தொடர்பாக கடலோர காவல் படையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, துப்பாக்கி தோட்டாக்களை அதிகமாக வைத்திருந்ததால் (ஆயுத சட்டம்), சட்ட விரோதமாக டீசல் பரிமாற்றம் மற்றும் அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தைவிடவும் கூடுதலாக பயண நேரம் எடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில், கப்பல் கேப்டன் உள்பட கப்பல் ஊழியர்கள் 35 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

மாவட்ட ஆட்சியர் பார்வை :

 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், நேற்று அமெரிக்கா கப்பலில் ஆய்வு மேற்கொண்டு, கப்பல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய பின்னர், இந்த வழக்கு கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

இதனை அடுத்து கியூ பிரிவு அதிகாரிகள், இன்று காலை கப்பலுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கப்பலி்ல் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான விரிவான அறிக்கையை, கியூ பிரிவு போலீசார் தமிழக அரசிடம் விரைவில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

by Swathi   on 16 Oct 2013  0 Comments
Tags: United States Ship   Ship Case   Q Branch   Q Branch Police   US Ship Issue   அமெரிக்க கப்பல்   கியூ பிரிவு போலீசார்  
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்க கப்பலில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் : கியூ பிரிவு போலீசார் விசாரணை !!! அமெரிக்க கப்பலில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் : கியூ பிரிவு போலீசார் விசாரணை !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.