|
||||||||
பார் போற்றும் தமிழ்நூல்களை கால வெள்ளத்தில் இருந்து கரையாமல் காத்த உ.வே.சா பிறந்த தினம் இன்று ! |
||||||||
தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் அவரை பற்றிய சில தகவல்களை பற்றி இங்கு காண்போம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சான்றோர்கள் உருவாக்கி வைத்த இலக்கியங்களை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டுவந்து கொடுத்த பெருமை உ.வே. சா அவர்களையே சாரும். அவரது சீரிய முயற்சி இல்லையெனில் மனித வாழ்வை பற்றி எடுத்து கூறிய எத்தனையோ இலக்கியங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போயிருக்கக்கூடும். வாழ்க்கை குறிப்பு :
உ.வே.சா பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் ஆகியோருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் ஐந்தாண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார். தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் அவர்களின் 159–வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் அவரை பற்றிய சில பயனுள்ள தகவல்களை பற்றி இங்கு காண்போம்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சான்றோர்கள் உருவாக்கி வைத்த இலக்கியங்களை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டுவந்து கொடுத்த பெருமை உ.வே. சா அவர்களையே சாரும். அவரது சீரிய முயற்சி இல்லையெனில் மனித வாழ்வை பற்றி எடுத்து கூறிய எத்தனையோ இலக்கியங்கள் கால வெள்ளத்தில் கரைந்து போயிருக்கக்கூடும். வாழ்க்கை குறிப்பு :உ.வே.சா பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் ஆகியோருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் ஐந்தாண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார். |
||||||||
by Swathi on 20 Feb 2013 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|