LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

உடல் நலக்குறைவின் உச்சக்கட்டம்

பெரும்பாலும் மனிதனிடம் பொருளிருந்தால் அறிவு இருப்பதில்லை . அறிவு இருந்தால் பொருள் இருப்பதில்லை . இதையே இருவேறு உலகத்துக்கு இயற்கை என்கிறார் வள்ளுவர் . அந்த வகையில் நல்ல சமுதாய வளர்ச்சியை எதிர்நோக்கும் பொதுத் தொண்டன் தனது சொந்த வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்பட மாட்டானோ ? அல்லது தன்னலமுடையவனிடம் பொதுநலன் இருக்காதோ ? பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்ற முதுமொழியை இவரது வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் .

பெரியவர் கக்கன் தமது உலக வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்ளப் பொருளாதாரம் மிகவும் அடிப்படையான ஒன்று என்ற சிந்தனையே இல்லாமல் இருந்து விட்டார் . அவசர நிலையில் தம்மைக் காத்துக் கொள்வதற்குப் பொருளில்லாததால் சரியான மருத்துவம் செய்து கொள்ள முடியவில்லை . அரசு வழங்கும் இலவச மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை . தனியார் மருத்துவமனை என்பது அவரது வாழ்நாளில் எட்டாத ஒன்றாகவே இருந்துவிட்டது . இதுதான் ஊழின் வலிமையோ ?

படிப்படியாக உடல் நலக்குறைவு அதிகரித்து 1981 அக்டோபர் மாதம் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . ஓரிரு நாள்களில் கக்ககன் சுயநினைவிழந்தார் . அன்றைய முதல்வர் எம் . ஜி . ஆர் அவர்களின் பார்வை கக்கனின் மீது இருந்தமையாலும் அவரால் வழங்கப்பட்ட உயர்வகுப்பு மருத்துவ வசதிக்கான அரசாணை நடைமுறையில் இருந்தமையாலும் மிகவும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது . ஆனால் , முதுமையின் காரணமாகச் சிகிச்சை பலனளிக்கவில்லை . இவருக்கென்று நவீன வசதி வாய்நத படுக்கை ஒன்றினைப் புதிதாக வாங்கி உடல்நலம் காக்க எம் . ஜி . ஆர் . ஆணையிட்டார் . அவ்வாறே பல லட்சம் பெறுமானமுள்ள படுக்கை ஒன்றினைக் கக்கனுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கத் தமிழக அரசு உதவியது . சுய நினைவு திரும்பவே இல்லை . கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நினைவு திரும்பாத நிலையில் இருந்தார் . 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ம் நாள் கக்கன் என்ற நேர்மை விளக்கு அணைந்தது .

ஓர் ஈ , எறும்புக்குக் கூட தீங்கை மனத்தாலும் நினைக்காத அந்தப் பயன் மரம் - பழமரம் சாவு என்னும் அரக்கனால் வெட்டி வீழ்த்தப்பட்டது .

அவர் மக்கள் மனங்களில் பதித்த தன்மானம் மிக்க அரசியல் ஒழுக்கம் என்ற காலத்தடத்தை எந்த இயற்கை அரக்கனாலும் வீழ்த்திவிட முடியாது அல்லவா !.

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.