LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

உழைப்பு தந்த உயர்வு

ஒரு வயலுக்கு நடுவே ஒரு குருவி கூடுகட்டி தன் குஞ்சுகளோடு வசித்து வந்தது . தாய்குருவி இரைதேடப்போய்விட்டது . இப்போது வயலின் சொந்தக்காரன்தன் மகனோடு வயலுக்கு வந்து பார்த்தான் .

தம்பி பயிர் முற்றி விட்டது . நாளைக்கே ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்து விடு என்று கூறினார் . மாலையில் தாய்க்குருவி கூடு திரும்பியதும் . அதனிடம் குஞ்சுகள் நடந்ததைக் கூறி வேறு இடம் பார்க்கச்சொல்லின . தாய்க்குருவி அவசரமில்லை என்றது .

இரண்டு நாட்கள் கழித்து வயலுக்குச் சொந்தக்காரனும் மகனும் வந்தார்கள் . அடடா தானியம் மிகவும் முற்றிவிட்டது நாளைக்கு எப்படியும் ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்தே ஆகவேண்டும் என்றான் .

அன்று மாலை வந்த தாயிடம் குஞ்சுகள் கேட்டதை சொல்லின . அவசரமில்லை என்றது தாய்க்குருவி .

ஒரு வாரம் சென்றது . மீண்டும் வயலுக்கு வந்த சொந்தக்காரன் வயலைப் பார்த்துவிட்டு தன் மகனிடம் மிகவும் முற்றிவிட்டது . இனி ஆட்கள் கிடைப்பார்களா என்று பார்ப்பது நல்லதல்ல . நாளைக்கு நானும் நீயும் அறுவடை செய்து விடுவோம் என்றான் .

இந்த விஷயத்தை குஞ்சுகள் தாய்க்குருவியிடம் கூறியதும் நேரம் வந்து விட்டது . வாருங்கள்வேறு இடம் போகலாம் என்றது .

பிறரை நம்பாமல் சுயமாகவே வேலை செய்பவர்களின் வாழ்க்கை முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை . பெருந்தலைவர் தனது சொந்த உழைப்பையே பெரிதும் நம்பினார் . அதுவே அவர் பல உயர்வுகளைப் பெறக் காரணம் .

1963 ம் ஆண்டு நவம்பர் மாதம் 3,4 ஆகிய தேதிகள் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் டி . சஞ்சீவய்யா தலைமையில் ஜெய்ப்பூர் காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் நடந்தது . இதில் காமராசர் திட்டம்செயல்படுத்தப்படும் விதமும் - விளைவுகளும் என்பது பற்றி 6 மணி நேரம் விவாதம் நடந்தது .

காமராசர் திட்டம் பல அதிசயிக்கத் தக்க நல்ல பலன்களை விளைவித்திருக்கிறது . புது வேகத்தையும் புத்துணர்ச்சியையும் உண்டாக்கி இருக்கிறது என்று கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது .

அப்போது நேரு , இந்தத் திட்டம் புதிய புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது . அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் காமராசர்தான் என்று குறிப்பிட்டார் .

முன்னதாக அக்டோபர் 9 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது . இதில் காமராசர் , லால்பகதூர் சாஸ்திரி , அதுல்யா கோஷ் ஆகியோர் பெயர்கள் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டன . ஆனால் நேரு பெருந்தலைவரை விரும்பியதால் காங்கிரஸ் கமிட்டி காமராசரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஒரு மனதாகத் தீர்மானித்தது .

ஜூலை மாதம் (1963) நேருஜியை காமராசர் சந்தித்துத் தனது காமராசர் திட்டம் பற்றிக் கூறியபோதே அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகப் பெருந்தலைவர் தான் வரவேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார் நேரு . தமிழ்நாட்டில் கட்சி வேலை பார்க்கவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் . எனவே தலைவராக விரும்பவில்லை என்று அப்போது நேருஜியிடம் பெருந்தலைவர் கூறினார் .;

ஆனால் நேருஜியின் ஆசை 3 மாதம் கழித்து நிறைவேறியது . அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பெருந்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.