|
||||||||
உழைப்பு தந்த உயர்வு |
||||||||
ஒரு வயலுக்கு நடுவே ஒரு குருவி கூடுகட்டி தன் குஞ்சுகளோடு வசித்து வந்தது . தாய்குருவி இரைதேடப்போய்விட்டது . இப்போது வயலின் சொந்தக்காரன்தன் மகனோடு வயலுக்கு வந்து பார்த்தான் . “ தம்பி பயிர் முற்றி விட்டது . நாளைக்கே ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்து விடு ” என்று கூறினார் . மாலையில் தாய்க்குருவி கூடு திரும்பியதும் . அதனிடம் குஞ்சுகள் நடந்ததைக் கூறி வேறு இடம் பார்க்கச்சொல்லின . தாய்க்குருவி “ அவசரமில்லை ” என்றது . இரண்டு நாட்கள் கழித்து வயலுக்குச் சொந்தக்காரனும் மகனும் வந்தார்கள் . அடடா தானியம் மிகவும் முற்றிவிட்டது நாளைக்கு எப்படியும் ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்தே ஆகவேண்டும் என்றான் . அன்று மாலை வந்த தாயிடம் குஞ்சுகள் கேட்டதை சொல்லின . “ அவசரமில்லை ” என்றது தாய்க்குருவி . ஒரு வாரம் சென்றது . மீண்டும் வயலுக்கு வந்த சொந்தக்காரன் வயலைப் பார்த்துவிட்டு தன் மகனிடம் “ மிகவும் முற்றிவிட்டது . இனி ஆட்கள் கிடைப்பார்களா என்று பார்ப்பது நல்லதல்ல . நாளைக்கு நானும் நீயும் அறுவடை செய்து விடுவோம் ” என்றான் . இந்த விஷயத்தை குஞ்சுகள் தாய்க்குருவியிடம் கூறியதும் “ நேரம் வந்து விட்டது . வாருங்கள்வேறு இடம் போகலாம் ” என்றது . பிறரை நம்பாமல் சுயமாகவே வேலை செய்பவர்களின் வாழ்க்கை முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை . பெருந்தலைவர் தனது சொந்த உழைப்பையே பெரிதும் நம்பினார் . அதுவே அவர் பல உயர்வுகளைப் பெறக் காரணம் . 1963 ம் ஆண்டு நவம்பர் மாதம் 3,4 ஆகிய தேதிகள் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் டி . சஞ்சீவய்யா தலைமையில் ஜெய்ப்பூர் காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் நடந்தது . இதில் காமராசர் திட்டம்செயல்படுத்தப்படும் விதமும் - விளைவுகளும் என்பது பற்றி 6 மணி நேரம் விவாதம் நடந்தது . காமராசர் திட்டம் பல அதிசயிக்கத் தக்க நல்ல பலன்களை விளைவித்திருக்கிறது . புது வேகத்தையும் புத்துணர்ச்சியையும் உண்டாக்கி இருக்கிறது என்று கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது . அப்போது நேரு , “ இந்தத் திட்டம் புதிய புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது . அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் காமராசர்தான் ” என்று குறிப்பிட்டார் . முன்னதாக அக்டோபர் 9 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது . இதில் காமராசர் , லால்பகதூர் சாஸ்திரி , அதுல்யா கோஷ் ஆகியோர் பெயர்கள் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டன . ஆனால் நேரு பெருந்தலைவரை விரும்பியதால் காங்கிரஸ் கமிட்டி காமராசரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஒரு மனதாகத் தீர்மானித்தது . ஜூலை மாதம் (1963) நேருஜியை காமராசர் சந்தித்துத் தனது காமராசர் திட்டம் பற்றிக் கூறியபோதே அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகப் பெருந்தலைவர் தான் வரவேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார் நேரு . “ தமிழ்நாட்டில் கட்சி வேலை பார்க்கவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் . எனவே தலைவராக விரும்பவில்லை ” என்று அப்போது நேருஜியிடம் பெருந்தலைவர் கூறினார் .; ஆனால் நேருஜியின் ஆசை 3 மாதம் கழித்து நிறைவேறியது . அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பெருந்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|