LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!

கோவிலின் அமைதியைக் கொண்ட இதயங்களுக்கு
சாமியைப் புரியவில்லை,
சாஸ்திரம் சமயம் சகுனமெல்லாம் செய்ததன்
சூழ்சும தெளிவுயில்லை,

சக்கைமேல் சக்கைபோல் பாலினை
மறைத்ததாய் மூலத்தை மறைத்துவிட்டோம்
சின்னதாய் சின்னதாய் தெளிந்திட இடம்தர
மாற்றத்தை மறுத்துவைத்தோம்.,

சிலுவையோ சிவமோ சலீமோ நம்பினால்
யாதுமே தெய்வமன்றோ;
கடவுளும் கற்பிதமும் கற்பனையும்
தந்ததெல்லாம் திறவுகோல் ஒப்ப அன்றோ ?

அறிவது புரிவது அன்றைய வாழ்தலை
அடுக்கடுக்காய்க் கொண்டுபிள்ளாய்,
பிறகது புதியது உலகமே மாறிட
பழங்கதை சோதி பிள்ளாய்.,

புற்றோ மரமோ கல்லோ கைதொழு
உனக்குள் தெய்வமும் தானேயெழும்’
பற்றோ பகிரும்குணமோ ஒற்றை இடமமரும்
உறுதியோ யிருந்தால் வீட்டிலும் சக்தி தெரியும்,

நேர்த்தியாய் நின்றிட நேர்மை புரிந்திட
ஏற்றதே பக்தி ஆயின, பழகப் பாதையாயின;
முன்னவர் மூத்தவர் நேர்வழி வாழ்ந்ததே
பின்னவர் போற்றிடப் பொதுமறை யென்றுமாறின,

உம்மவர் எம்மவர் வேற்றுமை அறுபட
சிந்தனைச் சேர்த்துவைப்பீர், இனி
சன்னதி போவதும் சங்கரன் ஆவதும்
ஒன்றுதான் என்றுணர்வீர்!!

 

- வித்யாசாகர்


by Swathi   on 24 Aug 2015  0 Comments
Tags: Kovil   vidhyasagar   vidhyasagar Kavithai   vidhyasagar Poetry   உள்ளம்   மனம்   மனம் கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை) வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)
பேச்சாட்டன்.. - வித்யாசாகர் பேச்சாட்டன்.. - வித்யாசாகர்
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..  - வித்யாசாகர் நண்பா நீ நிழலினும் நெருக்கமடா.. - வித்யாசாகர்
யாதுமாகிய அவள்..  வித்யாசாகர்! யாதுமாகிய அவள்.. வித்யாசாகர்!
பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்த்த காதலும்.. - வித்யாசாகர் பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்த்த காதலும்.. - வித்யாசாகர்
உள்ளம் மலர்ந்திடுமே உள்ளம் மலர்ந்திடுமே
கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை - நிர்மலா ராகவன் கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை - நிர்மலா ராகவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.