திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது. (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.)
மணக்குடவர் உரை:
யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே, இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன். இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(காதலர் தெளிவித்த சொற்களையும் அவர் நற்றிறங்களையும் அறிதியாதலின் அவர் வரும்வரை ஆற்றியிரு என்ற தோழிக்குச் சொல்லியது.) . யான் மன் உள்ளுவன்- காதலர் சொற்களை யான் மிகுதியும் நினைப்பேன்; உரைப்பது அவர் திறம்-யாரிடத்திலும் சொல்லுவதும் அவர் நற்றிறங்களையே; பசப்புக் கள்ளம்-அங்ஙனமிருந்தும் எப்படியோ இப்பசலை கள்ளத்தனமாக வந்துள்ளது. முக்கரணங்களுள் மெய் ஏனையிரண்டின் வழிப்பட்டதாகலின், நினைவு சொல் வழியாக வராது நேரே மெய்வழியாக வந்தது மாயமாயுள்ளது என்பதாம்.'ஆல்,' 'பிற,' 'ஓ' அசைநிலைகள்.
கலைஞர் உரை:
யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?.
சாலமன் பாப்பையா உரை:
நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?.
Translation
I meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray.
Explanation
I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.