|
|||||
உளுந்து ஜாமுன் |
|||||
தேவையானவை : உளுந்து - 1/2 கப் சீனி - 1 கப் எண்ணெய் - தேவைக்கு சாஃப்ரான் - விரும்பினால் பின்ச். உப்பு - பின்ச். செய்முறை : 1.உளுந்தை தண்ணீரில் 5 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும் 2.வாணலியில் எண்ணெய் காய வைத்து மிதமான தீயில் சிறு உருண்டையாக உளுந்து மாவை உருட்டி போடவும்.சிவறாமல் கோல்டன் கலரில் பொரித்து எடுக்க வேண்டும். 3.சர்க்கரை பாகை ரெடி செய்து கொள்ளவும்.ஒரு கப் சர்க்கரைக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து பாகு தண்ணீர் போல் காய்ச்சவும். 4.பக்குவமாக பொரித்ததை சர்க்கரைப் பாகில் போடவும்.பாகில் சாஃப்ரான் ஒரு பின்ச் சேர்க்கலாம்.சர்க்கரைப்பாகில் போட்ட ஜாமுனை ஃபோர்க்கால் குத்தி விடவும்.சர்க்கரை இலகுவாக உறிஞ்ச ஏதுவாய் இருக்கும். சுவையான, சத்தான உளுந்து ஜாமுன் ரெடி. |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|