|
||||||||
உளுந்து சோறு(Ulunthu Rice) |
||||||||
தேவையானவை : தோல் நீக்கிய முழு உளுந்து - 1 கப் புழுங்கல் அரிசி - அரை கப் தேங்காய் பால் - 3 1/2 கப் இஞ்சி,பூண்டு விழுது - 2 டீஸ்பூன் வெண்ணெய் - 50 கி பட்டை - சிறிய துண்டு கிரம்பு - 3 ஏலக்காய் - 3 உப்பு - தேவைகேற்ப கறிவேப்பிலை - தேவைகேற்ப சின்ன வெங்காயம் - 10 பொடியாக அரிந்தது செய்முறை : 1ஒரு வாணலியை சூடானதும் வெண்ணெய் போட்டு கூடவே ஒரு ஸ்பூன் எண்ணெயும் ஊற்றவும்.பட்டை,கிராம்பு,ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி கறிவேப்பிலை சேர்த்து தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும் 2.பாலில் லேசாக நுரை வந்ததும், கழுவி வைத்துள்ள அரிசி, உளுந்தையும் உப்பையும் போட்டு சட்டியை மூடி விடவும்.இடையில் ஒரு முறை திறந்து கிளறி விடவும். இருபது நிமிடம் கழிந்து இறக்கி விடவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|