|
|||||
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் |
|||||
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்ததும், 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்றும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவித்தது. அதன்படி கடந்த 2014-15, 2015-16, 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் 13 எய்ம்ஸ்கள் அமைக்க அறிவிப்பு வெளியாகின. ஜம்மு, காஷ்மீர், பிஹார், தமிழகம், குஜராத் ஆகிய 5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் மதுரை மாவட்டம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "200 ஏக்கர் பரப்பளவில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக 100 இடங்கள் ஏற்படுத்தப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்" என்று தெரிவித்தார். இதனையடுத்து மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை குறித்து மதுரையைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு அளித்து இருந்தார். மதுரை மாவட்டம் தோப்பூரில் எம்ய்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு டெண்டர் எதுவும் விடப்படவில்லை என்றும் எப்போது இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் குறிப்பிடப்படவில்லை என கடந்த செப்டம்பர் மாதம் ஆர்டிஐ தகவல் தெரிவித்தது. இதனால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. இந்த நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். |
|||||
by Mani Bharathi on 18 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|