LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அமெரிக்காவிடம் இருந்து ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு!

அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. 

நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை சமாளிக்கும் வகையில் ‘ரோமியோ வகை ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவை எதிர்கொள்வதற்கு இத்தகையை நவீன ஆயுதங்கள், வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படைக்கு தேவையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவற்றை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. 

24 நவீன ஹெலிகாப்டரை உடனடியாக வழங்குமாறு கேட்டு இந்தியா தரப்பில் இருந்து அமெரிக்காவிற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் கையெழுத்து ஆகலாம் என்றும் வரும் 30 ஆம் தேதி அர்ஜெண்டினாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அமெரிக்காவிடம் இந்தியா வாங்க திட்டமிட்டுள்ள எம்எச் - 60 ரக ஹெலிகாப்டர்கள், ஸிகோர்ஸ்கி - லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றது. இந்த வகை ஹெலிகாப்டர்கள் எப்.எம்.எஸ். எனப்படும் வெளிநாட்டு ராணுவங்களுக்கான சிறப்பு திட்டம் மூலம் பிற நாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2007 முதல் 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த வகை ஹெலிகாப்டர்களை அமெரிக்கா பிற நாடுகளுக்கு விற்றுள்ளது. இதற்கு முன் சி - 130ஜே - சூப்பர் ஹெர்குலஸ் போர் விமானங்கள், எம் 777 அல்ட்ராலைட் போர் விமானங்கள் போன்றவற்றை, எப்.எம். எஸ்., முறையில், அமெரிக்காவிடம் இருந்து, இந்தியா வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

by Mani Bharathi   on 19 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.