|
|||||
அமெரிக்காவிடம் இருந்து ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு! |
|||||
அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை சமாளிக்கும் வகையில் ‘ரோமியோ வகை ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவை எதிர்கொள்வதற்கு இத்தகையை நவீன ஆயுதங்கள், வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படைக்கு தேவையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவற்றை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. 24 நவீன ஹெலிகாப்டரை உடனடியாக வழங்குமாறு கேட்டு இந்தியா தரப்பில் இருந்து அமெரிக்காவிற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் கையெழுத்து ஆகலாம் என்றும் வரும் 30 ஆம் தேதி அர்ஜெண்டினாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவிடம் இந்தியா வாங்க திட்டமிட்டுள்ள எம்எச் - 60 ரக ஹெலிகாப்டர்கள், ஸிகோர்ஸ்கி - லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றது. இந்த வகை ஹெலிகாப்டர்கள் எப்.எம்.எஸ். எனப்படும் வெளிநாட்டு ராணுவங்களுக்கான சிறப்பு திட்டம் மூலம் பிற நாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன. கடந்த 2007 முதல் 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த வகை ஹெலிகாப்டர்களை அமெரிக்கா பிற நாடுகளுக்கு விற்றுள்ளது. இதற்கு முன் சி - 130ஜே - சூப்பர் ஹெர்குலஸ் போர் விமானங்கள், எம் 777 அல்ட்ராலைட் போர் விமானங்கள் போன்றவற்றை, எப்.எம். எஸ்., முறையில், அமெரிக்காவிடம் இருந்து, இந்தியா வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். |
|||||
by Mani Bharathi on 19 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|