|
|||||
இசை மற்றும் கவின் கலைப்பல்கலைக்கழகம் துவங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு ! |
|||||
தமிழகத்தின் பழமையான இசை மற்றும் தமிழர்களின் கலைகளை பாதுகாத்து, அவற்றினை எதிர்கால இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தமிழக அரசு சார்பில் இசை மற்றும்
கவின் கலைப் பல்கலைக்கழகம் துவங்கப்படும் என சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு
ஆகிய இடங்களில் உள்ள அரசு இசைக் கல்லூரிகள், சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகள், மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலைக்
கல்லூரி, மற்றும் இத்துறைகளைச் சார்ந்த அனைத்து உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் கல்லூரிகள் மற்றும் இசை, நடனம், கவின் கலைகளை கற்பிக்கும் கல்லூரிகள் செயல்படும். இதர
பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் இசை சார்ந்த, கவின்கலைப் புலம் சார்ந்த, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளும் இப்பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் கொண்டு வரப்படும் என
அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தின் பழமையான இசை மற்றும் தமிழர்களின் கலைகளை பாதுகாத்து, அவற்றினை எதிர்கால இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தமிழக அரசு சார்பில் இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் துவங்கப்படும் என சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் உள்ள அரசு இசைக் கல்லூரிகள், சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகள், மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மற்றும் இத்துறைகளைச் சார்ந்த அனைத்து உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் கல்லூரிகள் மற்றும் இசை, நடனம், கவின் கலைகளை கற்பிக்கும் கல்லூரிகள் செயல்படும். இதர பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் இசை சார்ந்த, கவின்கலைப் புலம் சார்ந்த, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளும் இப்பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் கொண்டு வரப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
|
|||||
by Swathi on 11 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|