LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரத்து செய்யப்பட்டது துர்காவின் சஸ்பென்ட் !!!

பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காவின், பணி நீக்க உத்தரவை, ரத்து செய்வதாக, உத்திர பிரதேச மாநில அரசு நேற்று அறிவித்துள்ளது. 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கவுதம புத்தா நகர் மாவட்டத்தின் உதவி கலெக்டர் துர்கா, மணல் மாபியாக்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுத்ததால், மாநில அரசால் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதனை அடுத்து, நாடு முழுவதும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழிபாட்டு தலத்தை, விதிமுறைகளை மீறி, இடிக்க உத்தரவிட்டதன் காரணமாகவே, துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, உத்திர பிரதேச மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா, கடந்த மாதம், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவை நேரில் சந்தித்து, தன் நிலையை விளக்கினார். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், தன் கணவருடன் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். இந்நிலையில், துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெறுவதாக, உத்திர பிரதேச மாநில அரசு, நேற்று அறிவித்தது. 

by Swathi   on 22 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.