பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காவின், பணி நீக்க உத்தரவை, ரத்து செய்வதாக, உத்திர பிரதேச மாநில அரசு நேற்று அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கவுதம புத்தா நகர் மாவட்டத்தின் உதவி கலெக்டர் துர்கா, மணல் மாபியாக்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுத்ததால், மாநில அரசால் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதனை அடுத்து, நாடு முழுவதும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழிபாட்டு தலத்தை, விதிமுறைகளை மீறி, இடிக்க உத்தரவிட்டதன் காரணமாகவே, துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, உத்திர பிரதேச மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா, கடந்த மாதம், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவை நேரில் சந்தித்து, தன் நிலையை விளக்கினார். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், தன் கணவருடன் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். இந்நிலையில், துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெறுவதாக, உத்திர பிரதேச மாநில அரசு, நேற்று அறிவித்தது.
|