LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

உறவிற்கும் உதவிக்கும் ஓடி ஓடியே - வித்யாசாகர்

வழுக்கையானவர்கள் நாங்கள்;
வாட்சப்பில் காதலியையும்

மின்னஞ்சலில் அம்மா பெயரையும்
வங்கிக் கணக்கில் அப்பாவும்
கைப்பேசி முகப்பில் அக்காப் பிள்ளைகளையும் வைத்து
தனைமட்டும் முழுதாய் இழந்தவர்கள்..

பிரிவெனும் துயரில் நொந்து
பாதி இரவில் பலமுறை எழுந்தழுது
பேருக்கொருமுறை
மீண்டுமிறப்பவர்கள் நாங்கள்;
அம்மாவை தேடி மனைவியை தேடி
பிள்ளைகளைப் பிரிந்து
மௌனக் குழிக்குள் சோகமாய் சரிபவர்கள்..

கூலிக்கு வேலையின்றி
மேலே படிக்க வாய்ப்புமின்றி
திறமைதனை
அரபிகளுக்கு அடகுவைத்தவர்கள் நாங்கள்;
கூரைவீட்டிற்கு ஓலை முடையவும்
கிழிந்த கால்சட்டைக்கு சன்னலை மூடவும்
சாய்ந்த சவுக்குக் குளியலறைக்கு
ஒரு புதிய மூங்கில் கதவு போடவுமே
கடவுச்சீட்டோடு எங்களின் கனவுகளையும் விற்றவர்கள்..

ஆம்.......
நாங்கள் பாலைமண்ணின் சுடுமணலில்
எங்களின் வாழ்வையும் சுட்டவர்கள்..

by Swathi   on 07 Apr 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.