LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

உருவமும் அரூபமும்

 

புலன்களுக்கு எட்டுகின்ற ஒன்று சத்தியமாக நிலைக்கும் என்றால் அது ஆழ்ந்த மன நிலையைக்கடந்த சிவகளத்திலும் கூட நிலைத்திருக்க வேண்டும்.
எது எப்போதும் நிலைத்திருக்குமோ அதுவே தான் சத்தியம் என்று கொள்ளலாம். 
தோன்றி மறையும் எதுவும் சத்தியமாகாது.
கை கால்களை வைத்துக்கொண்டு புலன் சார்ந்த நிலையிலே தியானிக்கும் போது தெரிகின்ற உலகமும் உடலும், மனோ நிலையை கடக்கும் போது நிலைப்பதில்லையே... அப்படி எனில், அந்த உடல் சத்தியமானது அல்ல என்று ஆகிறது.
உடல் என்ற ஒன்றை மையமாகக்கொண்டே தான் நமக்குள் உலகமே சத்தியம் என்ற எண்ணம் வருகின்றது. எப்போது அந்த எண்ணத்தின் மூலமான மௌனத்தோடு ஒன்றுகிறோமோ அப்போதே தியானிப்பவருக்கு உடலும் உலகமும் இல்லாது போகிறது.
ஜீவன், பரமாத்மா,உலகம் என்ற பேதம் எல்லாம் அறவே விலகி விடுகின்றது மட்டுமில்லாமல் எப்போதும் நிலையாக நிலைத்து இருக்கும் ஆத்மாவாகிய இறை நிலையோடு கலந்து ஆத்மா ஒன்றே தனித்து ஜொலிக்கிறது.
நாம் காணும் உலகத்தை முழுமையாக நாம் ஒதுக்கி விடமுடியமல் இருப்பதற்க்குக் கூட,இறை நிலையிலே இருந்து தான் இந்த உலகம் என்ற எண்ணம் தோன்றுவதால் தான்.
எப்போது இறை நிலையோடு கலந்து நின்று ஆழ்ந்த கருணை நிலையை உணர்ந்து, அந்த இருப்பிலே இருந்து அசைகிறோமோ அப்போது தான், புறத்தோற்றத்திலும் கூட கருணையோடு வாழ்த்தும் பேரன்பு ஒருவருக்குக் கிட்டுகிறது.
புலன்களால் பெறப்படும் புறத்தோற்றத்திலே அலட்சியம் என்கிற எண்ணம் இல்லாமல் இருப்பதும், அகத்திலே உள்ள ஆன்ம நிலையை விட்டு விலகாது நிலைப்பதும் ஞானம் பெற்றிருப்பதற்குரிய தன்மையாக இருக்கிறது.
எதனை எப்படி புலன்களால் நோக்கினாலும், புலன்களால் ஏற்படும் அனுபவங்கள் எல்லாம் நிலைத்து நில்லாத ஒன்றாக போவதும், ஆன்மாவாகிய இறை நிலையிலே வேறெந்த எண்ணமும் நிலைக்க முடியாத நிலை உணர்வதும் அத்வைத நெறி ஆகும்.
முக்கியத்துவம் எதற்க்குத் தருகிறோம் என்பதே தான் முழு விசயமும்.
த்வைத நெறி என்பதை ஆமோதித்தவர்கள் எல்லாம், புலன்களால் காணும் உலகம் நிஜமே என்றும், உலகம் மாயை என்று சொல்லப்படுவதை ஏற்க மறுப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்...
ஆனால், எது நிலைக்காதோ அதை மாயை என்று விலக்கி, நிலையான ஒன்றோடு கலந்தது தான் அத்வைத நெறியாக இருக்கிறது. அத்வைத நெறி என்பதிலே அனைத்து நெறிகளும், இறைவனோடு கலத்தல் என்ற இடத்திலே பேதமற்று ஒன்றாகின்றது. அந்த இடமே மௌனம், அதுவே மோட்சம். அதுவே பிரம்மமும். அதுவே சிவம்.
குருவென்ற ஒரு எண்ணம்( என்பதை) இறை வெளியோடு தவமியற்றும் போது கொண்டு வந்தால்,குரு என்கிற உருவம் எடுப்பது எண்ணத்தினாலே என்பதும், குருவே என்றவுடன் எண்ணமற்று கலத்தலே என்று தியானிப்பவர் இறையோடு கலந்து ஒன்றாவதும் அனுபவம். எப்படி எண்ணம் நிலைக்காதோ அதே போல உருவமும் நிலைக்காது போய்விடுவதும், அரூபமான இறை நிலையோடு கலந்த நிலையிலே குருவும் அரூபத்திலே நிலைத்து நீடிப்பதும் தெளிவாகிறது..
குருவானவர் இயல்பூக்க நியதியின் படி, சிவ நிலையாம் அரூப நிலையோடு கலந்து நின்று அண்டுவோரை அந்த தன்மையில் இருந்தே ஆட்கொள்கிறார்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

புலன்களுக்கு எட்டுகின்ற ஒன்று சத்தியமாக நிலைக்கும் என்றால் அது ஆழ்ந்த மன நிலையைக்கடந்த சிவகளத்திலும் கூட நிலைத்திருக்க வேண்டும்.

 

எது எப்போதும் நிலைத்திருக்குமோ அதுவே தான் சத்தியம் என்று கொள்ளலாம். 

 

தோன்றி மறையும் எதுவும் சத்தியமாகாது.

 

கை கால்களை வைத்துக்கொண்டு புலன் சார்ந்த நிலையிலே தியானிக்கும் போது தெரிகின்ற உலகமும் உடலும், மனோ நிலையை கடக்கும் போது நிலைப்பதில்லையே... அப்படி எனில், அந்த உடல் சத்தியமானது அல்ல என்று ஆகிறது.

 

உடல் என்ற ஒன்றை மையமாகக்கொண்டே தான் நமக்குள் உலகமே சத்தியம் என்ற எண்ணம் வருகின்றது. எப்போது அந்த எண்ணத்தின் மூலமான மௌனத்தோடு ஒன்றுகிறோமோ அப்போதே தியானிப்பவருக்கு உடலும் உலகமும் இல்லாது போகிறது.

 

ஜீவன், பரமாத்மா,உலகம் என்ற பேதம் எல்லாம் அறவே விலகி விடுகின்றது மட்டுமில்லாமல் எப்போதும் நிலையாக நிலைத்து இருக்கும் ஆத்மாவாகிய இறை நிலையோடு கலந்து ஆத்மா ஒன்றே தனித்து ஜொலிக்கிறது.

 

நாம் காணும் உலகத்தை முழுமையாக நாம் ஒதுக்கி விடமுடியமல் இருப்பதற்க்குக் கூட,இறை நிலையிலே இருந்து தான் இந்த உலகம் என்ற எண்ணம் தோன்றுவதால் தான்.

 

எப்போது இறை நிலையோடு கலந்து நின்று ஆழ்ந்த கருணை நிலையை உணர்ந்து, அந்த இருப்பிலே இருந்து அசைகிறோமோ அப்போது தான், புறத்தோற்றத்திலும் கூட கருணையோடு வாழ்த்தும் பேரன்பு ஒருவருக்குக் கிட்டுகிறது.

 

புலன்களால் பெறப்படும் புறத்தோற்றத்திலே அலட்சியம் என்கிற எண்ணம் இல்லாமல் இருப்பதும், அகத்திலே உள்ள ஆன்ம நிலையை விட்டு விலகாது நிலைப்பதும் ஞானம் பெற்றிருப்பதற்குரிய தன்மையாக இருக்கிறது.

 

எதனை எப்படி புலன்களால் நோக்கினாலும், புலன்களால் ஏற்படும் அனுபவங்கள் எல்லாம் நிலைத்து நில்லாத ஒன்றாக போவதும், ஆன்மாவாகிய இறை நிலையிலே வேறெந்த எண்ணமும் நிலைக்க முடியாத நிலை உணர்வதும் அத்வைத நெறி ஆகும்.

 

முக்கியத்துவம் எதற்க்குத் தருகிறோம் என்பதே தான் முழு விசயமும்.

 

த்வைத நெறி என்பதை ஆமோதித்தவர்கள் எல்லாம், புலன்களால் காணும் உலகம் நிஜமே என்றும், உலகம் மாயை என்று சொல்லப்படுவதை ஏற்க மறுப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்...

 

ஆனால், எது நிலைக்காதோ அதை மாயை என்று விலக்கி, நிலையான ஒன்றோடு கலந்தது தான் அத்வைத நெறியாக இருக்கிறது. அத்வைத நெறி என்பதிலே அனைத்து நெறிகளும், இறைவனோடு கலத்தல் என்ற இடத்திலே பேதமற்று ஒன்றாகின்றது. அந்த இடமே மௌனம், அதுவே மோட்சம். அதுவே பிரம்மமும். அதுவே சிவம்.

 

குருவென்ற ஒரு எண்ணம்( என்பதை) இறை வெளியோடு தவமியற்றும் போது கொண்டு வந்தால்,குரு என்கிற உருவம் எடுப்பது எண்ணத்தினாலே என்பதும், குருவே என்றவுடன் எண்ணமற்று கலத்தலே என்று தியானிப்பவர் இறையோடு கலந்து ஒன்றாவதும் அனுபவம். எப்படி எண்ணம் நிலைக்காதோ அதே போல உருவமும் நிலைக்காது போய்விடுவதும், அரூபமான இறை நிலையோடு கலந்த நிலையிலே குருவும் அரூபத்திலே நிலைத்து நீடிப்பதும் தெளிவாகிறது..

 

குருவானவர் இயல்பூக்க நியதியின் படி, சிவ நிலையாம் அரூப நிலையோடு கலந்து நின்று அண்டுவோரை அந்த தன்மையில் இருந்தே ஆட்கொள்கிறார்.

 

 

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

 

by Swathi   on 18 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.