சிரியா மீதான தாக்குதலை. இரண்டு மாத காலத்திற்குள், முடிக்க, அமெரிக்க நாடாளமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிபர், பஷர்-அல்-ஆசாத் பதவி விலகக் கோரி, போராட்டக்காரர்கள், ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம், 21ம் தேதி, போராட்டகாரர்கள், மீது ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில், 1,300க்கும் மேற்பட்டோர், பலியாகினர். ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொன்ற சிரியா அரசு மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டு உள்ளார். இதற்காக, அமெரிக்க நாடாளமன்ற ஒப்புதலையும் அவர் கோரியுள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு, இஸ்ரேல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும் சிரியாவுக்கு ஆதரவாக செயல்பட, ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. இதற்காக, உளவு கப்பல் ஒன்றை, மத்திய தரைகடல் பகுதிக்கு, ரஷ்யா அனுப்பிவைத்துள்ளது. ஜெர்மனும், பிரிட்டனும், இந்த தாக்குதலில் ஈடுபடப் போவதில்லை என, தெரிவித்துவிட்டன. "சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம்' என, அரபு நாடுகளும், சீனாவும் கேட்டு கொண்டுள்ளன. இந்நிலையில், சண்டைக்கு முன்னோட்டமாக, அமெரிக்கா, போர் கப்பலை மத்திய தரைகடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்கா நாடாளமன்றத்தில், நேற்று, சிரியா மீது தாக்குதல் நடத்த அனுமதி கோரும் தீர்மானம், தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், சிரியா மீதான தாக்குதல் நடவடிக்கை, இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தாக்குதலில், அமெரிக்க வீரர்களின் காலடி அந்த நாட்டு மண்ணில் படக்கூடாது. (அதாவது விமான தாக்குதல் அல்லது கடற்படை தாக்குதல் நடத்தப்பட வேண்டும்) என, இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
|