LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் அரசு அங்கீகாரம் பெற்ற முதல் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாட வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் தயாராகி வருகிறார்கள்...

அமெரிக்காவில் தமிழர் திருநாள் பொங்கலுக்கு வர்ஜீனியா முதல் மாநிலமாக  அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரம் கிடைத்து முதல் பொங்கல் விழாவை வாசிங்டன் பகுதி தமிழர்கள் மிகப்பெரிய விழாவாக முழு நாள் விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார்கள் .. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், இந்த பகுதியில் இருக்கும் ஆறு தமிழ்ப்பள்ளிகளையும், தொண்டு அமைப்புகளையும்  ஒருங்கிணைத்து இந்த விழாவை வரும் சனவரி 20, 2018 –ல் நடத்த திட்டமிட்டு வருகிறது .

இந்த முழுநாள் நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து சினிமாத் துறையிலிருந்து இயக்குநர் திரு.பாக்யராஜ் மற்றும் திருமதி. பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் . தமிழ் சார்ந்து முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்துகொள்கிறார். வசந்த் வசீகரனின் இரண்டு மணி நேர இன்னிசை நிகழ்ச்சி தமிழ் மரபு மற்றும் உற்சாகம் ஊட்டும் வகையில் நடைபெறுகிறது . இதில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற செல்வி.ஜெசிக்கா ஜுட் கனடாவிலிருந்து கலந்துகொள்கிறார். தமிழகத்திலிருந்து இரண்டு ஆட்சிப்பணியில் உள்ளவர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

வர்ஜீனியா, மேரிலாந்து மாகாணங்களின் கல்வி அதிகாரிகள், செனட்டர்கள் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள்.  தமிழ்க்கச்சங்கத்தின் தென்றல்-முல்லை இதழ் பொங்கல் சிறப்பு  சிறப்பு இதழாக வெளிவர இருக்கிறது.

 

உலகின் பல தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அறிஞர்கள் இந்த விழாவிற்கு வாழ்த்து செய்தி அனுப்பிவருகிரார்கள் .. இது அமெரிக்கத் தமிழர்களுக்கு ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த பெருமைகொள்ளும் நிகழ்வு. கனடாவிற்கு அடுத்து அமெரிக்காவில் முதன் முறையாக அங்கீகாரம் பெற்றுள்ள முதல் விழாவை தமிழர் பெருமை போற்றிடும் வகையில் கொண்டாட ஒட்டுமொத்த தமிழர்களும் தன்னார்வலர்களாக 14 செயல்பாட்டு குழுக்களை ஏற்படுத்தி  இரவு பகலாக உழைத்துவருகிறார்கள் ..

 

உள்ளூர்  மக்கள் 250-க்கும் மேற்பட்டோர் இணைந்து  தமிழ் மரபு, தமிழர் திருவிழா கருப்பொருளில் மிக தரமான நிகழ்ச்சிகளை , நாடகங்களை, பட்டிமன்றங்களை வழங்க இருக்கிறார்கள் . வர்ஜீனியா போன்று அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் பொங்கலுக்கு அரசு அங்கீகாரம் வாங்க ஒரு அனுபவப் பகிர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிற தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு கேள்விகள் கேட்டு புறிந்து நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது ...

 

தமிழர் திருநாள் அமெரிக்காவின் வர்ஜினியா அரசு அங்கீகாரம்: 

ஏப்ரல் 8, 2017,  வர்ஜீனியா, அமெரிக்கா, மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவரையும் பெருமிதத்தில் ஆழ்த்திடும் வகையில், தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வர்ஜீனியாவில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வர்ஜீனியா பொதுச் சபை தற்போது அறிவித்துள்ளது. உலகத்தின் மிகப்பழமையான ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றும் தொடர்ந்து இயங்கி வரும் சட்டசபை என்ற பெருமை உடைய வர்ஜீனியா பொதுச்சபையில், பிரதிநிதி டேவிட் புலோவா (ஜனநாயகக்கட்சி - பேர்பாக்சு) அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் பிப்ரவரி 17 2017 அன்று நிறைவேறியது. இத்தீர்மானத்தின்படி, 2018 ஜனவரி 14 2018 முதல் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாளாக வர்ஜீனியா காமன்வெல்த்தால் அங்கீககரிக்கப்பட்டுள்ளது.

வர்ஜீனியா பொதுச்சபையில் இத்தீர்மானத்தினை முன்மொழிந்த பிரதிநிதி புலோவா, பொங்கல் திருநாளுக்கும் நன்றிநவிலல் திருநாளுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் குறிப்பிட்டுப் பேசினார். கோடிக்கணக்கான தமிழர்கள் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்களுக்கு இத்திருநாள் எத்துணை சிறப்பானது என்பதை எடுத்துரைத்தார். செனட் மற்றும் சபையின் பணிக்குழு உறுப்பினர்கள் புலோவா அவர்கள் விளக்கிய பழம்பெரும் தமிழ்ப் பண்பாட்டு மரபைப் பெரிதும் வியந்து, தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர்.

இத்தீர்மானம் நிறைவேறிட உழைத்த வள்ளுவன் தமிழ் மைய உறுப்பினர்கள் மற்றும் சட்ட ஆலோசகர் திரு.சிரீஸ்கந்தராஜா, இந்தத் தீர்மானத்துக்குப் பெரிதும் ஆதரவு அளித்து வர்ஜீனியா சபைக்குக் கொண்டு செல்ல உதவிய, பேர்பாக்சு நகர் மற்றும் பேர்பாக்சு கவுண்டி மக்கள் பிரதிநிதி திரு. புலோவா அவர்களின் சேவையைப் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் மனதாரப் பாராட்டி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

ஜனவரி 14ம் நாளைப் பொங்கல் திருநாளாக அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதை, தமிழ்-அமெரிக்க மக்கள் வர்ஜீனியாவுக்கும், அமெரிக்கத் திருநாட்டுக்கும் அளித்து வரும் சமுதாய, பொருளாதார, அரசியல் பங்களிப்புகளை, வர்ஜீனியா அரசாங்கம் அங்கீகரித்திருக்கும் ஒரு சிறப்பான தருணமாகக் கருதலாம். அதே நேரத்தில், நீண்ட நெடிய தமிழ் மரபை நினைவு கூர்ந்து, தமிழ் மொழியையும், பண்பாட்டையும் அமெரிக்காவில் கொண்டாடி, எதிர்வரும் தலைமுறைகளுக்கு அவற்றை முன்னெடுத்துச் செல்லக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பையும் இச்செய்தி வர்ஜீனியா/அமெரிக்கத் தமிழர்களுக்குக் கொடுத்துள்ளது.

 

Commonwealth of Virginia is the first state to recognize Pongal Day on every Jan 14th in the entire United States based on Valluvan Tamil Academy’s research studies. This is a historical moment for all Tamils in the United States. Now Pongal day is one of the official designated days that was enacted by the Virginia General Assembly on April 4th 2017. We posted the official copy of the resolution here.

Valluvan Tamil Academy likes to thank The Honorable Delegate David Bulova (37th District) for introducing and sponsoring the bill. Also we like to thank the following:

. The Honorable VA Governor Terry McAuliffe

. The Honorable VA Delegate Tim Hugo Timothy D. Hugo - House District 40
 . The Honorable VA Delegate Vivian E. Watts - House #39
. VA House of Delegates
• VA Senators
• SRIS Law Group

• Valluvan Tamil Academy members

HJ 573 Pongal Day was agreed to by the House of Delegates, January 24, 2017 and agreed to by the Senate, February 14, 2017.

http://virginiageneralassembly.gov/…/schedule/ddCalendar.php

https://lis.virginia.gov/cgi-bin/legp604.exe?171+ful+HJ573ER 
https://lis.virginia.gov/cgi-bin/legp604.exe?171+sum+HJ573 
https://www.richmondsunlight.com/bill/2017/hj573/

Tamils across Virginia and all around the world - Our beloved Pongal Tamil festival is now officially recognized as “Pongal Day” by the Virginia General Assembly. The Virginia General Assembly is the oldest continuous legislative body in the New World. A resolution introduced by Delegate David Bulova (D-Fairfax) was approved by the General Assembly on February 14, 2017. With the passage of the resolution, the Commonwealth of Virginia has designated January 14 in 2018 and in each succeeding year as Pongal Day in Virginia.

In his testimony to the General Assembly, Delegate Bulova explained to his fellow members that Pongal Day is similar to Thanksgiving Day. He then described the importance of the celebration to millions of Tamils. Committee members in both the House and Senate were deeply moved and inspired by our Tamil Heritage and the resolution was approved unanimously.

We thank and congratulate Delegate Bulova, who represents the City of Fairfax and parts of Fairfax County in the House of Delegates, for his continued and unwavering support and promoting this auspicious festival before is fellow members to pass this resolution. This will provide Tamils across the Commonwealth of Virginia an opportunity to celebrate and share our rich Tamil heritage, culture, language, and history.

By proclaiming January 14th as Pongal Day, both Virginia and our great nation will have the opportunity to recognize the myriad contributions that Tamil Americans provide to this great nation's social, economic, political and cultural fabric. Pongal Day will be an opportunity to remember, celebrate and educate future generations about the inspirational role that Tamil Americans have played and continue to play in communities across America.

The Valluvan Tamil Academy and its legal advisor Mr. Sriskandarajah has worked tirelessly to make this happen.

Congratulations to VA Tamils, Valluvan Tamil Academy and Thanks to Delegate Bulova!

by Swathi   on 28 Dec 2017  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
31-Dec-2017 05:08:57 மணி. வீ said : Report Abuse
இச் செய்தியைக் கேட்டு மனம் துள்ளிக்குதிக்கிறது. அநேக வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் நமது கலை பண்பாடு விஷயங்கள் தெரியவேண்டும் என்று நானும் விரும்புகிறேன். இதனை ஏற்பாடு செய்யும் அன்பு உள்ளங்களுக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
29-Dec-2017 01:20:04 அருட்பணி S .D .P .செல்வன் said : Report Abuse
எங்கள் உறவுகளே பொங்க வாருங்கள் பொங்கி வாருங்கள் பொங்கி எழுவதினால் எங்கும் மனிதமாளும்.
 
29-Dec-2017 01:19:15 அருட்பணி S .D .P .செல்வன் said : Report Abuse
எங்கள் உறவுகளே பொங்க வாருங்கள் பொங்கி வாருங்கள் பொங்கி எழுவதினால் எங்கும் மனிதமாளும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.