கடந்த 1984ம் ஆண்டு பாரத பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவரது பாதுகாவலர்களாக இருந்த சீக்கியர்கள் சுட்டுகொல்லப்பட்டார், டெல்லியில் அந்த சூழ்நிலையில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை இனப்படுகொலை சம்பவமாக அமெரிக்க அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரி, அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் இணையதளத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி ஒரு மனுவாக தயாரிக்கப்பட்டு, ஆன்லைனில் 30,517 பேர் வரை அதை ஆதரித்திருந்தனர். இந்நிலையில், அதிபர் பராக் ஒபாமா நிர்வாகம் முதல் முறையாக இதற்கு பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 1984ம் ஆண்டு சீக்கியருக்கு எதிரான கலவரத்தின்போது பெரிய அளவில் அந்த இனத்தினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதை அமெரிக்கா கவனித்துள்ளது. அரசியல் படுகொலைகள், திடீரென ஆட்கள் காணா மல் போகுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுப்பு, மதச் சுதந்திரத்துக்கு எதிரான நிலை ஆகியவை நடந்துள்ளன.இதற்காக நாங்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவிப்போம். மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையாகும். உலகம் முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை களுக்கு எதிராக அமெரிக்க கண்டனம் தெரிவித்து வருகிறது. சீக்கியருக்கு எதிரான அந்த கலவரத்தை இனப்படுகொலை என்று கூற முடியாது. அந்த கோரிக்கையை ஏற்க முடியாது.
|