LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

உஷ் ...சத்தம் போடாதீர்கள் !

குழந்தை உறங்குகிறது .உங்களின்

சத்தம் நித்திரையை   கலைத்து

விடும்


அது காணும் கனவை

அருகில் வந்து பாருங்கள் !.


காணும் கனவின் பிரதிபலிப்பாய்

முகத்தில் காட்டும் நவரசங்களை

மகிழ்ச்சியுடன் இரசியுங்கள் !.


தூக்கத்தில் சிரிக்கிறதே?எதையோ

பார்த்து மகிழ்ந்திருக்கும்.

அடடா ! முகத்தை சுருக்கி

அழுகிறதே?தீயதை பார்த்து

பயந்திருக்கும்.

கை, கால்களை ஆட்டுகிறதே?

ஆகாயத்தில் பறந்து  கொண்டிருக்கும்.

சிரித்துக்கொண்டே  அழுகிறதே?

அதிகமான மகிழ்ச்சி ஆனந்த

 கண்ணீராய் இருக்கும்.


குமிழும் சிரிப்பும்,முகத்தின்

புன்னகையும்,தலைமுடி இருளும்

அழ்கோ, அழகு !


சற்று தள்ளி வாருங்கள் !

தூங்கும் குழந்தையை இரசிப்பது

ஆகாது, இது குழந்தையை

பெற்றவள் கருத்து. மதித்து

நாமும் தள்ளி சென்றிடுவோம்

ush...keep silence
by Dhamotharan.S   on 24 May 2016  0 Comments
Tags: சத்தம் போடாதீர்கள்   Saththam                 
 தொடர்புடையவை-Related Articles
உஷ் ...சத்தம் போடாதீர்கள் ! உஷ் ...சத்தம் போடாதீர்கள் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.