உத்தரகாண்டில் மழையின் கோரதாண்டவத்தால் பல்லாயிரகணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் இந்திய ராணுவம் முனைப்புடன் செயல்பட்டு பல லட்சகனக்கண் மக்களை காப்பாற்றி வருகிறது. மழை சேதம் குறித்து பார்வையிட்ட உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, உத்தரகாண்ட் அரசு மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி உயிரிழந்தவர்களை கணக்கிட முடியவில்லை, இறந்தவர்களின் எண்ணிக்கை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். மேலும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன 3,000 பேரை கண்டுபிடிக்க ராணுவமும், மாநில அரசும் தீவிர முயற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
|