LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

உயிர் உணர்வு

 

உணர்ச்சிவயம் இல்லாத எண்ணங்களால் மனதின் இயக்க அலை நீளம் குறைகிறது. அதன் விளைவாக உயிரின் அதிர்வு வேகம் குறைகிறது. உடல் செயல்கள் எல்லாம் நல்ல ஒழுங்குக்கு வருகின்றன. நமது தவறு நமக்கே புலனாகிறது, திருத்தவும் முடிகிறது. நாமே தேடிக் கொண்ட அவசியமில்லாத பழக்கங்களிலிருந்து விடுபடவும் முடிகிறது. யோகத்தால் மனம் லயப்பட்ட பின்னரே இது நேர்கிறது. இந்த வல்லமை மனதுக்குக் கிட்டிய பின் மனிதர்கள் ஒவ்வொருவர் இடையில் உள்ள உறவும் சீர்படுகிறது.

உயிரைப் பற்றிய உணர்வு மறந்துள்ள நிலையை, பொருளுணர்வு என்கிறோம். (Material Consciousness) உயிரைப் பற்றிய தெளிவான அறிவும் அந்த விளக்கத்தை மறவாநிலையும் உயிருணர்வு [மெய்யுணர்வு அல்லது மெய்ப்பொருள் உணர்வு] எனப்படும் (Spiritual Consciousness). உயிருணர்வோடு செய்யப்படும் எச்செயலும் சிறக்கும். விளைவும் சிறக்கும். உயிருணர்வு பெறுவதற்காகவே எடுத்தது இந்தப் பிறவி. அவ்வுயிருணர்வின்படி மறவாது வாழ வேண்டும்; அதுவே ஆன்மீக வாழ்வு. ஒவ்வொருவரும் இப்படி வாழ்வோமாயின், உலகத்திலே அமைதி நிலவும். உண்மையில் இயற்கையில் ஒரு கோளாறும் இல்லை. பொருளுணர்வோடு மனிதர்கள் செயல்படுவதாலேயே வறுமையும், துன்பமும் தோன்றின; நிலவுகின்றன, வளர்கின்றன். இன்று உலகத்தில் இல்லாதது ஒன்றே ஒன்றுதான். மனிதனை மனிதன் மதித்து, புரிந்து கொண்டு ஒத்து, உதவி வாழும் உணர்வைத் தரும் உயிர் உணர்வு இல்லை. அதனாலேயே குழப்பங்கள், பஞ்சம் இன்று மேலிட்டிருக்கின்றன. உலகத்தில் பாதுகாப்புக்காக (Defence) உற்பத்தி செய்யப்படும் தளவாடங்களை நிறுத்தி, ஆக்கப்பூர்வமான உற்பத்தியாக மாற்றினால் வாழ்க்கைத் தேவைப் பொருட்கள் இரண்டு பங்காக உயரும்.
காலவெள்ளம் நம்மை அடித்துச் செல்கிறது. நாமும் இந்த வெள்ளத்தின் மத்தியில் தான் வாழ்கிறோம். வாழும் காலத்தில் செய்யும் எந்தச் செயலும் உயிரறிவு பெற்றாலன்றிச் சிறக்காது. விஞ்ஞானத்தின் மூலம் ஏற்பட்டுள்ள வளர்ச்சி வெற்றி பெற வேண்டுமானால் ஆன்மீகம் தழைக்க வேண்டும்.

உணர்ச்சிவயம் இல்லாத எண்ணங்களால் மனதின் இயக்க அலை நீளம் குறைகிறது. அதன் விளைவாக உயிரின் அதிர்வு வேகம் குறைகிறது. உடல் செயல்கள் எல்லாம் நல்ல ஒழுங்குக்கு வருகின்றன. நமது தவறு நமக்கே புலனாகிறது, திருத்தவும் முடிகிறது. நாமே தேடிக் கொண்ட அவசியமில்லாத பழக்கங்களிலிருந்து விடுபடவும் முடிகிறது. யோகத்தால் மனம் லயப்பட்ட பின்னரே இது நேர்கிறது. இந்த வல்லமை மனதுக்குக் கிட்டிய பின் மனிதர்கள் ஒவ்வொருவர் இடையில் உள்ள உறவும் சீர்படுகிறது.


உயிரைப் பற்றிய உணர்வு மறந்துள்ள நிலையை, பொருளுணர்வு என்கிறோம். (Material Consciousness) உயிரைப் பற்றிய தெளிவான அறிவும் அந்த விளக்கத்தை மறவாநிலையும் உயிருணர்வு [மெய்யுணர்வு அல்லது மெய்ப்பொருள் உணர்வு] எனப்படும் (Spiritual Consciousness). உயிருணர்வோடு செய்யப்படும் எச்செயலும் சிறக்கும். விளைவும் சிறக்கும். உயிருணர்வு பெறுவதற்காகவே எடுத்தது இந்தப் பிறவி. அவ்வுயிருணர்வின்படி மறவாது வாழ வேண்டும்; அதுவே ஆன்மீக வாழ்வு. ஒவ்வொருவரும் இப்படி வாழ்வோமாயின், உலகத்திலே அமைதி நிலவும். உண்மையில் இயற்கையில் ஒரு கோளாறும் இல்லை. பொருளுணர்வோடு மனிதர்கள் செயல்படுவதாலேயே வறுமையும், துன்பமும் தோன்றின; நிலவுகின்றன, வளர்கின்றன். இன்று உலகத்தில் இல்லாதது ஒன்றே ஒன்றுதான். மனிதனை மனிதன் மதித்து, புரிந்து கொண்டு ஒத்து, உதவி வாழும் உணர்வைத் தரும் உயிர் உணர்வு இல்லை. அதனாலேயே குழப்பங்கள், பஞ்சம் இன்று மேலிட்டிருக்கின்றன. உலகத்தில் பாதுகாப்புக்காக (Defence) உற்பத்தி செய்யப்படும் தளவாடங்களை நிறுத்தி, ஆக்கப்பூர்வமான உற்பத்தியாக மாற்றினால் வாழ்க்கைத் தேவைப் பொருட்கள் இரண்டு பங்காக உயரும்.


 

காலவெள்ளம் நம்மை அடித்துச் செல்கிறது. நாமும் இந்த வெள்ளத்தின் மத்தியில் தான் வாழ்கிறோம். வாழும் காலத்தில் செய்யும் எந்தச் செயலும் உயிரறிவு பெற்றாலன்றிச் சிறக்காது. விஞ்ஞானத்தின் மூலம் ஏற்பட்டுள்ள வளர்ச்சி வெற்றி பெற வேண்டுமானால் ஆன்மீகம் தழைக்க வேண்டும்.

 

by Swathi   on 17 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.