LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

உயிர் விளக்கு.. - வித்யாசாகர்!

ரணத்தை தொடும் 
வலியோ பயமோ தெரியுமா உங்களுக்கு..?

அந்த பயத்தின் நச்சு நிமிடங்களுள் 
எத்தனை முகத்தை 
நினைத்துக்கொள்ள முடியுமென்று எண்ணுகிறீர்கள் ?

செய்த நல்லதும் கெட்டதுமெல்லாம்
பயமுறுத்தும் தருணத்தைவிட
அந்நேரத்தில் 
உயிர்த்திருப்பது அப்படியொரு கொடிது

நிறையப்பேரைப் போல 
நானுமப்படி 
சில சமயங்களில் 
உயிர்த்துக் கிடக்கிறேன் 

அப்போது வலி' அப்படி வலிக்கிறது 
பயம்' ஓடும் ரத்தமெல்லாம் பரவுகிறது 
வலிக்க வலிக்க 
உடன் இருப்போரை நினைப்பேன் - அது
இன்னும் வலிக்கும் 

ச்ச என்ன இது வலியென்றுப் 
பிடுங்கி ஓரமெறிந்துவிட்டு 
உடனிருப்போருக்காய் அமர்ந்துக் கொள்கிறேன் 

இப்படி நான் பிடுங்கி பிடுங்கிப் போட்ட 
எனது வலிக்குள் இன்னும் 
ஆயிரம் உயிர் விளக்குகள் எரியும்

ஒரேயொரு எனது 
இருளும் பொழுதிற்குள் 
ஆயிரம் விடியல்கள் விடியும் 

விடியலில் எரியும் விளக்கொன்று 
அதன்பின் எனக்காகவும்தான் 
எரிந்துப் போகட்டுமே போ..

 

-  வித்யாசாகர்!

by Swathi   on 27 Feb 2016  0 Comments
Tags: Vilakku   Uyir Vilakku   உயிர் விளக்கு   விளக்கு   வித்யாசாகர்        
 தொடர்புடையவை-Related Articles
வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை) வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)
உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே.. வித்யாசாகர்! உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே.. வித்யாசாகர்!
நீ.. நீ மட்டுமே நீ.. என் நீ - வித்யாசாகர்! நீ.. நீ மட்டுமே நீ.. என் நீ - வித்யாசாகர்!
இப்படியும் அழுகிறது மனசு..  - வித்யாசாகர்! இப்படியும் அழுகிறது மனசு.. - வித்யாசாகர்!
விளக்கு.. - வித்யாசாகர் விளக்கு.. - வித்யாசாகர்
உயிர் விளக்கு..  - வித்யாசாகர்! உயிர் விளக்கு.. - வித்யாசாகர்!
அனாதை.. - வித்யாசாகர்! அனாதை.. - வித்யாசாகர்!
விளக்கு  - இல. பிரகாசம் விளக்கு - இல. பிரகாசம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.