|
||||||||
மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா |
||||||||
கடந்த சனிக்கிழமை(20-Nov-2016)அன்று உலகத் தமிழ் அறக்கட்டளை சார்பில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா மேரிலாந்தில் நடைபெற்றது. இதை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் புதல்வர்கள் திரு.தமிழ்மணிகண்டன் , திரு.ஆண்டவர் மேலும் வ.சுப. மாணிக்கனாரின் மகள் தென்றல் அழகப்பன் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இதில் இலக்கிய ஆர்வலர்களும் பல தமிழறிஞர்களும் கலந்துகொண்டனர். மேலும் வ.சுப. மாணிக்கனாரின் மாணவர்கள் முனைவர். பழனி .ஜி. பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வ.சுப.ம அவர்களுடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவர் குறிப்பிட்ட சில கருத்துகள்: * உண்மையையே பேசவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் * பேராசிரியர், தமிழ்த்துறை தலைவர், கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக துணைவேந்தர் என்று பல்வேறு பணிகளை செவ்வனே செய்தவர். * தமிழ் கலைச்சொற்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டு பல்வேறு கலைச்சொற்களை படைத்தவர். * தமிழ்வழிக் கல்விக்காக தொடர்ந்து குரல்கொடுத்தவர் * தன் வாழ்க்கையை மிகவும் திட்டமிட்டு அமைத்துக்கொண்டவர் * தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவர். * தொல்காப்பியத்திற்கு புத்துரை விளக்கம் கொடுத்தவர் * காரைக்குடி தமிழ்ச்சங்கம் நிறுவி வளர்த்தவர் * தில்லை அம்பலத்தில் நின்று திருமுறைகள் ஓதி தொடந்து தமிழில் பாட போராடியவர். இந்த நிகழ்ச்சி வ.சுப.மாணிக்கனாரைப் பற்றி படிக்கவும் , கேட்கவும், அவரது தமிழ்த்தொண்டை அறிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. ஏற்பாடு செய்த உலகத் தமிழ் அறக்கட்டளைக்கு வாழ்த்துகள்.. |
||||||||
by Swathi on 21 Nov 2016 3 Comments | ||||||||
Tags: Va Supa Manikkinar வ.சுப.மாணிக்கனார் உலகத் தமிழ் அறக்கட்டளை | ||||||||
|
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|