LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சி. அவர்களின் 146-வது பிறந்த நாள் விழா டெலவரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் திரு. வ. உ. சிதம்பரனார் அவர்களின் 146வது பிறந்த நாள் விழா செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில் முதன் முறையாக இனிதே கொண்டாடப்பட்டது. இது போன்ற விழாக்கள் தமிழ்ப் பெருந்தகைகளைப் பற்றிய செய்திகளை இளம் தலைமுறையினருக்கு கடத்துவதற்கான நோக்கத்தில் நடத்தப்படுவனவாகும். இந்த நோக்கத்தில் முதன் முதலாக கடந்த ஏப்ரல் மாதம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தற்போது வ.உ.சி. அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

வ. உ.சி அவர்களின் பிறந்த நாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. பிறகு குழந்தைகளுக்கான வ. உ.சி அவர்களின் வரலாறு குறித்த வினாடி வினா போட்டி, வ.உ.சி அவர்களின் மார்பளவு உருவப்படத்தை வரையும் போட்டி மற்றும் பெரியவர்களுக்கான பேச்சுப் போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. ந.க.இராஜ்குமார் வினாடிவினாப் போட்டியை சிறப்பாக வடிவமைத்து திறமையாக நடத்தினார். இப்போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற திரு. செல்வக்குமார் வேலு, திருமதி.ரமா ஆறுமுகம் மற்றும் திருமதி. பாரதி கண்ணன் ஆகியோர் "வ.உ.சி யை நாம் ஏன் போற்ற வேண்டும்" என்ற தலைப்பில் வ. உ.சி குறித்த சிறப்பான தகவலகளைப் பகிர்ந்து கொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் திரு.தங்கம் வையாபுரி அவர்கள் வரவேற்று பேசினார். உலகத் தமிழ்க்கழக மயிலாடுதுறை கிளைத்தலைவர் திரு.கோ.அரங்கநாதன் அவர்கள் தொடக்க உரை ஆற்றினார்.

இவ்வினிய விழாவில் பாரதியார் பாடலான "சிந்து நதியின் மிசை நிலவினிலே" என்கிற பாடலை ஒய்வுபெற்ற தமிழாசிரியை திருமதி.வசந்த கோகிலா அவர்கள் கணீர்க் குரலில் பாடி மகிழ்வித்தார். பிறகு நண்பர்கள் திரு.ந.க.ராஜ்குமாரும், திரு.சல்மான் அவர்களும் உரையாற்றினார்கள்.

இந்த மகத்தான விழாவின் விருத்தினராக சமூக ஆர்வலரும், கவிஞருமான  திரு.மகேந்திரன் பெரியசாமி வாசிங்டன் பகுதியிலிருந்து கலந்துகொண்டு வ.உ.சி யின் வரலாற்றை மிகத்தெளிவாக எடுத்துரைத்து அரங்கில் இருந்த அனைவரையும் கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் வசிக்கும் வ.உ.சி யின் உறவினர் திரு.முருகேசன் முத்துகிருஷ்ணன் அவர்கள் பேசி அனுப்பிய, வ.உ.சி பற்றிய அரிய செய்திகளைக் கொண்ட காணொளி பகிரப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அனைவர் முன்னிலையிலும் ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.பிரசாத் பாண்டியன் அவர்கள் தன் சொல்லாற்றலால் அரங்கைக் கட்டுக்குள் வைத்திருந்து இடையிடையே வ.உ.சி குறித்த பல அரிய தகவல்களைக் கூறி நிகழ்ச்சியைச் சுவைபட சிறப்பாகத் தொகுத்தளித்தார்.

இறுதியாக விழாவின் மற்றுமொரு ஒருங்கிணைப்பாளர் திரு.துரைக்கண்ணன் அவர்கள் நன்றியுரை கூற வரலாற்று நாயகன் வ.உ.சி.-க்கு எடுக்கப்பட்ட சிறப்புமிக்க இவ்விழா இனிதே நிறைவுற்றது. விழாவில் பங்கேற்றவர்கள் போற்றுதலுக்குரிய மாமனிதர் திரு.வ.உ.சி குறித்த பல செய்திகளை உள்வாங்கிக் கொண்ட நிறைவோடு விடைபெற்றனர்.

இந்த விழாவை டெலாவர் பகுதியைச் சார்ந்த திரு. துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன், திரு பிரசாத் பாண்டியன் மற்றும் திரு. ந.க. ராஜ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.


- ரமா ஆறுமுகம்

by Swathi   on 11 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.