LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

வால் மனிதர்கள்

 

வெடிக்கும்.
இன்னமும் குண்டுகள் வெடிக்கும்.
இங்கிருந்து சுடப்போகும் துப்பாக்கி ரவையினால்
வெள்ளிகள் மரணிக்கும்.
அதனால்,
பொத்தல் விழுந்து ஆகாயம்
தொங்கும்
நிலவு சில நேரம் நாளைக்கே...
இது விஞ்ஞானகாலம்.
விரல்சூப்பும்
குஞ்சு நோனியும் போர்க்கருவி தயாாிக்க
ஆற்றல் பெற்ற நேரம்.
நீ சொல்லு,
சாியா?
பிழையா?
அந்தக் 
காலம் போச்சு.
நாலு வெற்றிலையை
ஒரு அள்ளு
பாக்குச் சீவலை
போட்டு இடியுரலை மொக்கு மொக்கென
குத்தி ஆத்திரத்தை மூத்தப்பா தணித்த
அந்த....
காலம் போச்சு.
இன்றைக்கு யார்தான்
இடியுரலைத் தாக்குவது?
ஊரும்
கடியன் கடித்து தோற்சிவந்து விட்டாலும்
இருக்கிறது குண்டு.
எடுத்த எடுப்பினிலே ஒரு அந்தை கெழிக்க
இருக்கிறது துப்பாக்கி
இது
விஞ்ஞான காலம்,
தொட்டிலுக்குள் பிள்ளை பூப்பார்த்து மகிழாமல்
புதிதாக ஏதாச்சும் ஆயுதத்தைத் தயாாிக்க
என்ன வழியுண்டு
என்று ஆராயும் அளவுக்கு இரத்தவெறி
பாலருந்தும் போதே தலைக்கேறி ஆட்டும்
அநியாய யுகம்.
வாப்பாவே!
உன் இந்திாியத்தில் பிறந்த எனக்கே
ஆபத்து.
இரண்டுகை
இரண்டுகால்
மனிதர்களால்தான்,
மிகவும் அச்சுறுத்தல்.
ஆனபடியினால்....
என் இந்திாியத்தில் உயிர்ப்பிக்கும் சிசுவுக்கு
யுத்தப் பயிற்சியை கருப்பையுள் நடத்துவதே
கால்வாசித் தலைமுறைக்காவது
மிக்க
உசிதமாய் இருக்கும்
அல்லவா?

 

வெடிக்கும்.

இன்னமும் குண்டுகள் வெடிக்கும்.

இங்கிருந்து சுடப்போகும் துப்பாக்கி ரவையினால்

வெள்ளிகள் மரணிக்கும்.

அதனால்,

பொத்தல் விழுந்து ஆகாயம்

தொங்கும்

நிலவு சில நேரம் நாளைக்கே...

 

இது விஞ்ஞானகாலம்.

விரல்சூப்பும்

குஞ்சு நோனியும் போர்க்கருவி தயாாிக்க

ஆற்றல் பெற்ற நேரம்.

நீ சொல்லு,

சாியா?

பிழையா?

 

அந்தக் 

காலம் போச்சு.

நாலு வெற்றிலையை

ஒரு அள்ளு

பாக்குச் சீவலை

போட்டு இடியுரலை மொக்கு மொக்கென

குத்தி ஆத்திரத்தை மூத்தப்பா தணித்த

அந்த....

காலம் போச்சு.

 

இன்றைக்கு யார்தான்

இடியுரலைத் தாக்குவது?

ஊரும்

கடியன் கடித்து தோற்சிவந்து விட்டாலும்

இருக்கிறது குண்டு.

எடுத்த எடுப்பினிலே ஒரு அந்தை கெழிக்க

இருக்கிறது துப்பாக்கி

 

இது

விஞ்ஞான காலம்,

தொட்டிலுக்குள் பிள்ளை பூப்பார்த்து மகிழாமல்

புதிதாக ஏதாச்சும் ஆயுதத்தைத் தயாாிக்க

என்ன வழியுண்டு

என்று ஆராயும் அளவுக்கு இரத்தவெறி

பாலருந்தும் போதே தலைக்கேறி ஆட்டும்

அநியாய யுகம்.

 

வாப்பாவே!

உன் இந்திாியத்தில் பிறந்த எனக்கே

ஆபத்து.

இரண்டுகை

இரண்டுகால்

மனிதர்களால்தான்,

மிகவும் அச்சுறுத்தல்.

ஆனபடியினால்....

என் இந்திாியத்தில் உயிர்ப்பிக்கும் சிசுவுக்கு

யுத்தப் பயிற்சியை கருப்பையுள் நடத்துவதே

கால்வாசித் தலைமுறைக்காவது

மிக்க

உசிதமாய் இருக்கும்

அல்லவா?

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.