LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

வானம் உன் கைகளுக்குள்

பூந்தென்றல்    வீதியுலா

புறப்பட்டு    வருவதற்கே

ஏந்திவரும்   பல்லக்கை

எதிர்பார்த்தா    காத்துளது ?

 

காரிருளை    மாய்ப்பதற்குக்

கதிரவன்தான்    காலைவர

தேரினையா    எதிர்பார்த்துத்

தெருமுனையில்    காத்துளது ?

 

கண்களினைப்    பறிக்கின்ற

கார்மேக    மின்னல்தான்

மின்சாரம்    எதிர்பார்த்தா

மின்னுதற்குக்     காத்துளது ?

 

தானிறங்கி    வருவதற்குத்

தரையிருந்து    குழாய்இணைப்பு

வானிற்கு    வருமென்றா

வளமழையும்    காத்துளது ?

 

சாதனைகள்   புரிவதற்குச்

சந்தர்ப்பம்     வாய்க்குமென்று

சோதனைகள்    செய்யாமல்

சோம்பலுடன்   இருப்பதுவோ ?

 

வாய்ப்புகளோ    உனைத்தேடி

வரவேற்பு     கொடுக்காது

வாய்ப்புகளை    உருவாக்கு

வானம்உன்     கைகளுக்குள் !

 

பாவலர் கருமலைத்தமிழாழன்

by Swathi   on 18 Oct 2014  0 Comments
Tags: கருமலைத்தமிழாழன்   Karumalai Thamilaalan Kavithai   Karumalai Thamilaalan   Vaanam Kavithai   Sky Kavithai        
 தொடர்புடையவை-Related Articles
மூளியாக்கி வைத்தோம்!- பாவலர்  கருமலைத்தமிழாழன் மூளியாக்கி வைத்தோம்!- பாவலர் கருமலைத்தமிழாழன்
ஊனமாகி  வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன் ஊனமாகி வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன்
மகளின்  மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் மகளின் மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன்
வருமோ  இப்புதிய   உலகு.. வருமோ இப்புதிய உலகு..
உண்மைத் தமிழனாய் உயர்வானோ! உண்மைத் தமிழனாய் உயர்வானோ!
தமிழ்   ஒரு   பூக்காடு தமிழ் ஒரு பூக்காடு
எங்கே  போயிற்று   எங்கள்   கிராமம் எங்கே போயிற்று எங்கள் கிராமம்
இணையத்தில்   இன்பத்தமிழ் இணையத்தில் இன்பத்தமிழ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.