LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

வாரானைப்பருவம்

 

441 தேனளா வுங்குழற் சடையலங் காரத் திருப்பணியு மிருள்விழுங்கித் -
      திகழ்மணிப் பிறையுமொளி யுமிழ்மணித் தோடும்வளர் செஞ்ஞாயி றுதயஞ்செய,
மீனளா வுங்கடற் றரளமா லிகையுமொளி மிளிர்குமிழ் விராய முத்தும் -
      வெள்வயிர கடகசூ டகமதா ணியுமுவவு வெண்டிங்க ளுதயஞ்செயக்,
கானளா வுந்தாட் சிலம்புஞ் சதங்கையுங் கலகல வெனக்கலிப்பக் -
      கனகமணி மேகலை புலம்பமறை யோலிடக் கடவுளர்கள் வாழ்த்தெடுப்ப,
வானளா வும்பதண மதில்சூழ் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -
      மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (1)
442 கண்டோர் பவத்துன்பு காணார்க ளாய்ப்பெருங் களியார் கலிக்கண்மூழ்கிக் -
      கற்பகப் பனிமல ரிறைத்தெதி ரிறைஞ்சிவான் கடவுளர்க ளெதிர் நடப்பப்,
பண்டோர் மறைக்குழவி யுண்ணமெய்ஞ் ஞானவின் பாலருள் பிராட்டிவந்தாள் -
      பார்பெறச் சுவணரோ மற்குமா றஞ்சுவாட் படையருள்கல் யாணிவந்தாள்,
திண்டோள் வலிச்சிலம் பரசன் றவத்துவரு செல்வக் குமாரிவந்தாள் -
      செகமுழுது மீன்றதாய் வந்தா ளெனத்திருச் சின்னங்க ளார்ப்பெடுப்ப,
வண்டோ லிடும்பொழி லுடுத்தொளிர் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -
      மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (2)
443 ஒளியார் கருங்களச் செம்மேனி வெண்ணீ றுவந்தமா தேவனெம்மா -
      னூடலொழி யப்பணி தொறுஞ்சடிலம் வாழ்நில வொருங்கள வளாவலானுங்,
களியார் கருங்கணஞ் செய்யவாய் வெண்ணகைக் காமரர மாதர்பலருங் -
      கனிவினெண் ணியபெறப் பணிதோறு மவர்குழற் காரிரு ளளாவலானு,
மளியார் பெரும்பனி வரைப்பயிற லானுமோ ரணுவளவும் வாட்டமடையா -
      வம்டோ ருகத்துணை பெயர்த்துமறை வாழ்த்தொலி யளாவியெங் கும்பரப்ப,
வளியார் பெரும்புவன மேத்துங் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -
      மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (3)
444 பாடுவா ராணவம தென்னுமிரு கந்தபப் பாய்கின்ற புண்டரீகம் -
      பரவுவினை யாயவிரு காடுமுழு துந்தபப் பதிதருஞ் செய்யமுளரி,
நீடுவார் மாயையென நிகழ்கதிர் நிலாவிதழ் நிரம்பிய செழுந்தாமரை -
      நீங்காத சேறாய விம்முன்று மொழிதர நிலாவுமர விந்தமென்று,
கூடுவார் மறைபல வெடுத்தியம் புங்கனக கோகனக மலர்பெயர்த்துக் -
      கொண்டாடு மெம்மைவழி வழியடிமை கொண்டுகதி கூட்டுவது முண்மையென்னின்,
மாடுவார் கொடியாடு மாடக் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -
      மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (4)
445 விள்ளற் கருஞ்செயலி னுருகியுரு கித்துதிசெய் வித்தகத் தவரிம்மையே -
      மேலாய கல்வியுஞ் செல்வமு மொருங்குபெற விழைவிற் கொடுத்தல்கருதி,
யள்ளற் றலைப்படுங் கமலத் தலைப்பொலியு மந்நலா ரிருவர்கையு -
      மறங்கள்பல வுங்குடிகொ ளங்கையிற் பற்றலுற் றாங்கமை தரப்பற்றியே,
யெள்ளற் றிறஞ்சிறிது மில்லாத மறைமுடியு மெங்களுளமுங் குடிகொளு -
      மெழில்கனிந் தொழுகுசிற் றடிமலர் பெயர்த்துவகை யெண்ணில்புவ னத்துமேவ,
வள்ளற் பெருந்தகையர் பொலியுங் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -
      மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (5)
வேறு
446 ஊன்றோய் சுதரி சனப்படையா னொருமா வுருக்கொண் டும்பர்பிரா
      னுபய பதமுங் காண்பான்புக் கொன்றுங் காணா துழிதந்து
மீன்றோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி யிவள்சிற் றடிதொடரின்மேற்
      விழைந்து முயன்ற முடிகாணன் மேவு மேவா விடினுமிவ
டேன்றோய் மலர்த்தாட் டொடர்பொன்றே திருந்து மெனவுட் கொடுமலர்
      றிகழோ திமமென் னடைகற்பான் செறியோ திமங்க ளொடுந்தொடர
வான்றோ யிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே
      மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (6)
447 உதிக்கு முடம்பை யேயாமென் றுள்ளி வினைநா டொறுமுஞற்றி
      யோரைந் தவத்தை களினுழிதந் தொழியும் பொறியில் யாங்களுமெய்
பதிக்குங் கருணைப் பரவையிடைப் படிந்து துளையக் கடைக்கணித்த
      பரமா னந்தத் திருவுருவப் பாவாய் புகழ்ந்து பாடுநர்பால்
விதிக்கு மயனா தியரிடத்து விரவ விடுக்குங் கருணையினு
      மேலாங் கருணை விடுத்தளிக்கும் விமலாய் விண்ணோ ராதியருண்
மதிக்கு மிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே
      மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (7)
448 இழியுந் தொழிலிற் புகுத்துமல விருட்டும் விளர்க்குங் கருங்குழலு
      மெழில்கொப் புளிக்குந் திருமுகமு மிருகை யுதித்த பெருவெள்ளங்
கழியுந் திவலை யாயொடுங்கக் கச்ச மில்லா வருள்வெள்ளங்
      கதிக்கப் பொழியுங் கடைக்கண்ணுங் கருது ஞானம் பொழிதனமும்
பழியு மறமுங் கடந்தன்பர் பற்றத் தகுமோர் பற்றாய
      பாதாம் புயமு மிகப்பொலிந்து பரவப் பரவு வெள்ளருவி
வழியு மிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே
      மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (8)
449 அஞ்சார் புரங்க ளொருமூன்று மழலோ னுண்டு தேக்கெறிய
      வரும்பு சிறுவெண் ணகைபுரிந்த வமலற் குடலா திகளாவாய்
விஞ்சா ரனைய பெருமாற்கு மேவி யுடனீங் காதமர்ந்து
      விதித்த லாதி யைந்தொழிலும் விருப்பின் முடிக்குந் திறற்பாவாய
பஞ்சா ரடியிற் சிறுசிலம்பும் பாத சால மெனும்பிறவும்
      பற்றா வரையின் மேகலையும் பண்டை மறையாக் கொண்டணிவாய்
மஞ்சா ரிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே
      மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (9)
450 தானே தனக்குச் சரியாய தாயே வருக வுரைக்கவினை
      தடிவாய் வருக நினைக்கமுத்தி தருவாய் வருக மலர்பொதிந்த
கானே புரையுங் கருங்கூந்தற் கவுரி வருக மெய்ஞ்ஞானக்
      கரும்பே வருக வருள்பழுத்த கனியே வருக தெவிட்டாத
தேனே வருக வானந்தத் திருவே வருக பெருவேதச்
      செல்வீ வருக வெங்கள்குல தெய்வம் வருக வுருகுநருண்
மானே வருக விமயவரை வனிதாய் வருக வருகவே
      மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (10)

 

441 தேனளா வுங்குழற் சடையலங் காரத் திருப்பணியு மிருள்விழுங்கித் -

      திகழ்மணிப் பிறையுமொளி யுமிழ்மணித் தோடும்வளர் செஞ்ஞாயி றுதயஞ்செய,

மீனளா வுங்கடற் றரளமா லிகையுமொளி மிளிர்குமிழ் விராய முத்தும் -

      வெள்வயிர கடகசூ டகமதா ணியுமுவவு வெண்டிங்க ளுதயஞ்செயக்,

கானளா வுந்தாட் சிலம்புஞ் சதங்கையுங் கலகல வெனக்கலிப்பக் -

      கனகமணி மேகலை புலம்பமறை யோலிடக் கடவுளர்கள் வாழ்த்தெடுப்ப,

வானளா வும்பதண மதில்சூழ் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -

      மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (1)

 

442 கண்டோர் பவத்துன்பு காணார்க ளாய்ப்பெருங் களியார் கலிக்கண்மூழ்கிக் -

      கற்பகப் பனிமல ரிறைத்தெதி ரிறைஞ்சிவான் கடவுளர்க ளெதிர் நடப்பப்,

பண்டோர் மறைக்குழவி யுண்ணமெய்ஞ் ஞானவின் பாலருள் பிராட்டிவந்தாள் -

      பார்பெறச் சுவணரோ மற்குமா றஞ்சுவாட் படையருள்கல் யாணிவந்தாள்,

திண்டோள் வலிச்சிலம் பரசன் றவத்துவரு செல்வக் குமாரிவந்தாள் -

      செகமுழுது மீன்றதாய் வந்தா ளெனத்திருச் சின்னங்க ளார்ப்பெடுப்ப,

வண்டோ லிடும்பொழி லுடுத்தொளிர் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -

      மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (2)

 

443 ஒளியார் கருங்களச் செம்மேனி வெண்ணீ றுவந்தமா தேவனெம்மா -

      னூடலொழி யப்பணி தொறுஞ்சடிலம் வாழ்நில வொருங்கள வளாவலானுங்,

களியார் கருங்கணஞ் செய்யவாய் வெண்ணகைக் காமரர மாதர்பலருங் -

      கனிவினெண் ணியபெறப் பணிதோறு மவர்குழற் காரிரு ளளாவலானு,

மளியார் பெரும்பனி வரைப்பயிற லானுமோ ரணுவளவும் வாட்டமடையா -

      வம்டோ ருகத்துணை பெயர்த்துமறை வாழ்த்தொலி யளாவியெங் கும்பரப்ப,

வளியார் பெரும்புவன மேத்துங் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -

      மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (3)

 

444 பாடுவா ராணவம தென்னுமிரு கந்தபப் பாய்கின்ற புண்டரீகம் -

      பரவுவினை யாயவிரு காடுமுழு துந்தபப் பதிதருஞ் செய்யமுளரி,

நீடுவார் மாயையென நிகழ்கதிர் நிலாவிதழ் நிரம்பிய செழுந்தாமரை -

      நீங்காத சேறாய விம்முன்று மொழிதர நிலாவுமர விந்தமென்று,

கூடுவார் மறைபல வெடுத்தியம் புங்கனக கோகனக மலர்பெயர்த்துக் -

      கொண்டாடு மெம்மைவழி வழியடிமை கொண்டுகதி கூட்டுவது முண்மையென்னின்,

மாடுவார் கொடியாடு மாடக் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -

      மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (4)

 

445 விள்ளற் கருஞ்செயலி னுருகியுரு கித்துதிசெய் வித்தகத் தவரிம்மையே -

      மேலாய கல்வியுஞ் செல்வமு மொருங்குபெற விழைவிற் கொடுத்தல்கருதி,

யள்ளற் றலைப்படுங் கமலத் தலைப்பொலியு மந்நலா ரிருவர்கையு -

      மறங்கள்பல வுங்குடிகொ ளங்கையிற் பற்றலுற் றாங்கமை தரப்பற்றியே,

யெள்ளற் றிறஞ்சிறிது மில்லாத மறைமுடியு மெங்களுளமுங் குடிகொளு -

      மெழில்கனிந் தொழுகுசிற் றடிமலர் பெயர்த்துவகை யெண்ணில்புவ னத்துமேவ,

வள்ளற் பெருந்தகையர் பொலியுங் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -

      மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (5)

 

வேறு

446 ஊன்றோய் சுதரி சனப்படையா னொருமா வுருக்கொண் டும்பர்பிரா

      னுபய பதமுங் காண்பான்புக் கொன்றுங் காணா துழிதந்து

மீன்றோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி யிவள்சிற் றடிதொடரின்மேற்

      விழைந்து முயன்ற முடிகாணன் மேவு மேவா விடினுமிவ

டேன்றோய் மலர்த்தாட் டொடர்பொன்றே திருந்து மெனவுட் கொடுமலர்

      றிகழோ திமமென் னடைகற்பான் செறியோ திமங்க ளொடுந்தொடர

வான்றோ யிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே

      மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (6)

 

447 உதிக்கு முடம்பை யேயாமென் றுள்ளி வினைநா டொறுமுஞற்றி

      யோரைந் தவத்தை களினுழிதந் தொழியும் பொறியில் யாங்களுமெய்

பதிக்குங் கருணைப் பரவையிடைப் படிந்து துளையக் கடைக்கணித்த

      பரமா னந்தத் திருவுருவப் பாவாய் புகழ்ந்து பாடுநர்பால்

விதிக்கு மயனா தியரிடத்து விரவ விடுக்குங் கருணையினு

      மேலாங் கருணை விடுத்தளிக்கும் விமலாய் விண்ணோ ராதியருண்

மதிக்கு மிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே

      மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (7)

 

448 இழியுந் தொழிலிற் புகுத்துமல விருட்டும் விளர்க்குங் கருங்குழலு

      மெழில்கொப் புளிக்குந் திருமுகமு மிருகை யுதித்த பெருவெள்ளங்

கழியுந் திவலை யாயொடுங்கக் கச்ச மில்லா வருள்வெள்ளங்

      கதிக்கப் பொழியுங் கடைக்கண்ணுங் கருது ஞானம் பொழிதனமும்

பழியு மறமுங் கடந்தன்பர் பற்றத் தகுமோர் பற்றாய

      பாதாம் புயமு மிகப்பொலிந்து பரவப் பரவு வெள்ளருவி

வழியு மிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே

      மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (8)

 

449 அஞ்சார் புரங்க ளொருமூன்று மழலோ னுண்டு தேக்கெறிய

      வரும்பு சிறுவெண் ணகைபுரிந்த வமலற் குடலா திகளாவாய்

விஞ்சா ரனைய பெருமாற்கு மேவி யுடனீங் காதமர்ந்து

      விதித்த லாதி யைந்தொழிலும் விருப்பின் முடிக்குந் திறற்பாவாய

பஞ்சா ரடியிற் சிறுசிலம்பும் பாத சால மெனும்பிறவும்

      பற்றா வரையின் மேகலையும் பண்டை மறையாக் கொண்டணிவாய்

மஞ்சா ரிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே

      மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (9)

 

450 தானே தனக்குச் சரியாய தாயே வருக வுரைக்கவினை

      தடிவாய் வருக நினைக்கமுத்தி தருவாய் வருக மலர்பொதிந்த

கானே புரையுங் கருங்கூந்தற் கவுரி வருக மெய்ஞ்ஞானக்

      கரும்பே வருக வருள்பழுத்த கனியே வருக தெவிட்டாத

தேனே வருக வானந்தத் திருவே வருக பெருவேதச்

      செல்வீ வருக வெங்கள்குல தெய்வம் வருக வுருகுநருண்

மானே வருக விமயவரை வனிதாய் வருக வருகவே

      மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (10)

 

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.