|
||||||||
வாரானைப்பருவம் |
||||||||
441 தேனளா வுங்குழற் சடையலங் காரத் திருப்பணியு மிருள்விழுங்கித் -
திகழ்மணிப் பிறையுமொளி யுமிழ்மணித் தோடும்வளர் செஞ்ஞாயி றுதயஞ்செய,
மீனளா வுங்கடற் றரளமா லிகையுமொளி மிளிர்குமிழ் விராய முத்தும் -
வெள்வயிர கடகசூ டகமதா ணியுமுவவு வெண்டிங்க ளுதயஞ்செயக்,
கானளா வுந்தாட் சிலம்புஞ் சதங்கையுங் கலகல வெனக்கலிப்பக் -
கனகமணி மேகலை புலம்பமறை யோலிடக் கடவுளர்கள் வாழ்த்தெடுப்ப,
வானளா வும்பதண மதில்சூழ் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -
மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (1)
442 கண்டோர் பவத்துன்பு காணார்க ளாய்ப்பெருங் களியார் கலிக்கண்மூழ்கிக் -
கற்பகப் பனிமல ரிறைத்தெதி ரிறைஞ்சிவான் கடவுளர்க ளெதிர் நடப்பப்,
பண்டோர் மறைக்குழவி யுண்ணமெய்ஞ் ஞானவின் பாலருள் பிராட்டிவந்தாள் -
பார்பெறச் சுவணரோ மற்குமா றஞ்சுவாட் படையருள்கல் யாணிவந்தாள்,
திண்டோள் வலிச்சிலம் பரசன் றவத்துவரு செல்வக் குமாரிவந்தாள் -
செகமுழுது மீன்றதாய் வந்தா ளெனத்திருச் சின்னங்க ளார்ப்பெடுப்ப,
வண்டோ லிடும்பொழி லுடுத்தொளிர் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -
மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (2)
443 ஒளியார் கருங்களச் செம்மேனி வெண்ணீ றுவந்தமா தேவனெம்மா -
னூடலொழி யப்பணி தொறுஞ்சடிலம் வாழ்நில வொருங்கள வளாவலானுங்,
களியார் கருங்கணஞ் செய்யவாய் வெண்ணகைக் காமரர மாதர்பலருங் -
கனிவினெண் ணியபெறப் பணிதோறு மவர்குழற் காரிரு ளளாவலானு,
மளியார் பெரும்பனி வரைப்பயிற லானுமோ ரணுவளவும் வாட்டமடையா -
வம்டோ ருகத்துணை பெயர்த்துமறை வாழ்த்தொலி யளாவியெங் கும்பரப்ப,
வளியார் பெரும்புவன மேத்துங் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -
மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (3)
444 பாடுவா ராணவம தென்னுமிரு கந்தபப் பாய்கின்ற புண்டரீகம் -
பரவுவினை யாயவிரு காடுமுழு துந்தபப் பதிதருஞ் செய்யமுளரி,
நீடுவார் மாயையென நிகழ்கதிர் நிலாவிதழ் நிரம்பிய செழுந்தாமரை -
நீங்காத சேறாய விம்முன்று மொழிதர நிலாவுமர விந்தமென்று,
கூடுவார் மறைபல வெடுத்தியம் புங்கனக கோகனக மலர்பெயர்த்துக் -
கொண்டாடு மெம்மைவழி வழியடிமை கொண்டுகதி கூட்டுவது முண்மையென்னின்,
மாடுவார் கொடியாடு மாடக் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -
மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (4)
445 விள்ளற் கருஞ்செயலி னுருகியுரு கித்துதிசெய் வித்தகத் தவரிம்மையே -
மேலாய கல்வியுஞ் செல்வமு மொருங்குபெற விழைவிற் கொடுத்தல்கருதி,
யள்ளற் றலைப்படுங் கமலத் தலைப்பொலியு மந்நலா ரிருவர்கையு -
மறங்கள்பல வுங்குடிகொ ளங்கையிற் பற்றலுற் றாங்கமை தரப்பற்றியே,
யெள்ளற் றிறஞ்சிறிது மில்லாத மறைமுடியு மெங்களுளமுங் குடிகொளு -
மெழில்கனிந் தொழுகுசிற் றடிமலர் பெயர்த்துவகை யெண்ணில்புவ னத்துமேவ,
வள்ளற் பெருந்தகையர் பொலியுங் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே -
மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (5)
வேறு
446 ஊன்றோய் சுதரி சனப்படையா னொருமா வுருக்கொண் டும்பர்பிரா
னுபய பதமுங் காண்பான்புக் கொன்றுங் காணா துழிதந்து
மீன்றோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி யிவள்சிற் றடிதொடரின்மேற்
விழைந்து முயன்ற முடிகாணன் மேவு மேவா விடினுமிவ
டேன்றோய் மலர்த்தாட் டொடர்பொன்றே திருந்து மெனவுட் கொடுமலர்
றிகழோ திமமென் னடைகற்பான் செறியோ திமங்க ளொடுந்தொடர
வான்றோ யிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே
மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (6)
447 உதிக்கு முடம்பை யேயாமென் றுள்ளி வினைநா டொறுமுஞற்றி
யோரைந் தவத்தை களினுழிதந் தொழியும் பொறியில் யாங்களுமெய்
பதிக்குங் கருணைப் பரவையிடைப் படிந்து துளையக் கடைக்கணித்த
பரமா னந்தத் திருவுருவப் பாவாய் புகழ்ந்து பாடுநர்பால்
விதிக்கு மயனா தியரிடத்து விரவ விடுக்குங் கருணையினு
மேலாங் கருணை விடுத்தளிக்கும் விமலாய் விண்ணோ ராதியருண்
மதிக்கு மிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே
மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (7)
448 இழியுந் தொழிலிற் புகுத்துமல விருட்டும் விளர்க்குங் கருங்குழலு
மெழில்கொப் புளிக்குந் திருமுகமு மிருகை யுதித்த பெருவெள்ளங்
கழியுந் திவலை யாயொடுங்கக் கச்ச மில்லா வருள்வெள்ளங்
கதிக்கப் பொழியுங் கடைக்கண்ணுங் கருது ஞானம் பொழிதனமும்
பழியு மறமுங் கடந்தன்பர் பற்றத் தகுமோர் பற்றாய
பாதாம் புயமு மிகப்பொலிந்து பரவப் பரவு வெள்ளருவி
வழியு மிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே
மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (8)
449 அஞ்சார் புரங்க ளொருமூன்று மழலோ னுண்டு தேக்கெறிய
வரும்பு சிறுவெண் ணகைபுரிந்த வமலற் குடலா திகளாவாய்
விஞ்சா ரனைய பெருமாற்கு மேவி யுடனீங் காதமர்ந்து
விதித்த லாதி யைந்தொழிலும் விருப்பின் முடிக்குந் திறற்பாவாய
பஞ்சா ரடியிற் சிறுசிலம்பும் பாத சால மெனும்பிறவும்
பற்றா வரையின் மேகலையும் பண்டை மறையாக் கொண்டணிவாய்
மஞ்சா ரிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே
மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (9)
450 தானே தனக்குச் சரியாய தாயே வருக வுரைக்கவினை
தடிவாய் வருக நினைக்கமுத்தி தருவாய் வருக மலர்பொதிந்த
கானே புரையுங் கருங்கூந்தற் கவுரி வருக மெய்ஞ்ஞானக்
கரும்பே வருக வருள்பழுத்த கனியே வருக தெவிட்டாத
தேனே வருக வானந்தத் திருவே வருக பெருவேதச்
செல்வீ வருக வெங்கள்குல தெய்வம் வருக வுருகுநருண்
மானே வருக விமயவரை வனிதாய் வருக வருகவே
மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (10)
441 தேனளா வுங்குழற் சடையலங் காரத் திருப்பணியு மிருள்விழுங்கித் - திகழ்மணிப் பிறையுமொளி யுமிழ்மணித் தோடும்வளர் செஞ்ஞாயி றுதயஞ்செய, மீனளா வுங்கடற் றரளமா லிகையுமொளி மிளிர்குமிழ் விராய முத்தும் - வெள்வயிர கடகசூ டகமதா ணியுமுவவு வெண்டிங்க ளுதயஞ்செயக், கானளா வுந்தாட் சிலம்புஞ் சதங்கையுங் கலகல வெனக்கலிப்பக் - கனகமணி மேகலை புலம்பமறை யோலிடக் கடவுளர்கள் வாழ்த்தெடுப்ப, வானளா வும்பதண மதில்சூழ் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே - மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (1)
442 கண்டோர் பவத்துன்பு காணார்க ளாய்ப்பெருங் களியார் கலிக்கண்மூழ்கிக் - கற்பகப் பனிமல ரிறைத்தெதி ரிறைஞ்சிவான் கடவுளர்க ளெதிர் நடப்பப், பண்டோர் மறைக்குழவி யுண்ணமெய்ஞ் ஞானவின் பாலருள் பிராட்டிவந்தாள் - பார்பெறச் சுவணரோ மற்குமா றஞ்சுவாட் படையருள்கல் யாணிவந்தாள், திண்டோள் வலிச்சிலம் பரசன் றவத்துவரு செல்வக் குமாரிவந்தாள் - செகமுழுது மீன்றதாய் வந்தா ளெனத்திருச் சின்னங்க ளார்ப்பெடுப்ப, வண்டோ லிடும்பொழி லுடுத்தொளிர் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே - மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (2)
443 ஒளியார் கருங்களச் செம்மேனி வெண்ணீ றுவந்தமா தேவனெம்மா - னூடலொழி யப்பணி தொறுஞ்சடிலம் வாழ்நில வொருங்கள வளாவலானுங், களியார் கருங்கணஞ் செய்யவாய் வெண்ணகைக் காமரர மாதர்பலருங் - கனிவினெண் ணியபெறப் பணிதோறு மவர்குழற் காரிரு ளளாவலானு, மளியார் பெரும்பனி வரைப்பயிற லானுமோ ரணுவளவும் வாட்டமடையா - வம்டோ ருகத்துணை பெயர்த்துமறை வாழ்த்தொலி யளாவியெங் கும்பரப்ப, வளியார் பெரும்புவன மேத்துங் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே - மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (3)
444 பாடுவா ராணவம தென்னுமிரு கந்தபப் பாய்கின்ற புண்டரீகம் - பரவுவினை யாயவிரு காடுமுழு துந்தபப் பதிதருஞ் செய்யமுளரி, நீடுவார் மாயையென நிகழ்கதிர் நிலாவிதழ் நிரம்பிய செழுந்தாமரை - நீங்காத சேறாய விம்முன்று மொழிதர நிலாவுமர விந்தமென்று, கூடுவார் மறைபல வெடுத்தியம் புங்கனக கோகனக மலர்பெயர்த்துக் - கொண்டாடு மெம்மைவழி வழியடிமை கொண்டுகதி கூட்டுவது முண்மையென்னின், மாடுவார் கொடியாடு மாடக் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே - மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (4)
445 விள்ளற் கருஞ்செயலி னுருகியுரு கித்துதிசெய் வித்தகத் தவரிம்மையே - மேலாய கல்வியுஞ் செல்வமு மொருங்குபெற விழைவிற் கொடுத்தல்கருதி, யள்ளற் றலைப்படுங் கமலத் தலைப்பொலியு மந்நலா ரிருவர்கையு - மறங்கள்பல வுங்குடிகொ ளங்கையிற் பற்றலுற் றாங்கமை தரப்பற்றியே, யெள்ளற் றிறஞ்சிறிது மில்லாத மறைமுடியு மெங்களுளமுங் குடிகொளு - மெழில்கனிந் தொழுகுசிற் றடிமலர் பெயர்த்துவகை யெண்ணில்புவ னத்துமேவ, வள்ளற் பெருந்தகையர் பொலியுங் குடந்தைநகர் வாழ்வாய பரைவருகவே - மன்னுயிர்ப் பயிரெலாந் தழையவருண் மழைபொழியு மங்களாம் பிகைவருகவே. (5)
வேறு 446 ஊன்றோய் சுதரி சனப்படையா னொருமா வுருக்கொண் டும்பர்பிரா னுபய பதமுங் காண்பான்புக் கொன்றுங் காணா துழிதந்து மீன்றோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி யிவள்சிற் றடிதொடரின்மேற் விழைந்து முயன்ற முடிகாணன் மேவு மேவா விடினுமிவ டேன்றோய் மலர்த்தாட் டொடர்பொன்றே திருந்து மெனவுட் கொடுமலர் றிகழோ திமமென் னடைகற்பான் செறியோ திமங்க ளொடுந்தொடர வான்றோ யிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (6)
447 உதிக்கு முடம்பை யேயாமென் றுள்ளி வினைநா டொறுமுஞற்றி யோரைந் தவத்தை களினுழிதந் தொழியும் பொறியில் யாங்களுமெய் பதிக்குங் கருணைப் பரவையிடைப் படிந்து துளையக் கடைக்கணித்த பரமா னந்தத் திருவுருவப் பாவாய் புகழ்ந்து பாடுநர்பால் விதிக்கு மயனா தியரிடத்து விரவ விடுக்குங் கருணையினு மேலாங் கருணை விடுத்தளிக்கும் விமலாய் விண்ணோ ராதியருண் மதிக்கு மிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (7)
448 இழியுந் தொழிலிற் புகுத்துமல விருட்டும் விளர்க்குங் கருங்குழலு மெழில்கொப் புளிக்குந் திருமுகமு மிருகை யுதித்த பெருவெள்ளங் கழியுந் திவலை யாயொடுங்கக் கச்ச மில்லா வருள்வெள்ளங் கதிக்கப் பொழியுங் கடைக்கண்ணுங் கருது ஞானம் பொழிதனமும் பழியு மறமுங் கடந்தன்பர் பற்றத் தகுமோர் பற்றாய பாதாம் புயமு மிகப்பொலிந்து பரவப் பரவு வெள்ளருவி வழியு மிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (8)
449 அஞ்சார் புரங்க ளொருமூன்று மழலோ னுண்டு தேக்கெறிய வரும்பு சிறுவெண் ணகைபுரிந்த வமலற் குடலா திகளாவாய் விஞ்சா ரனைய பெருமாற்கு மேவி யுடனீங் காதமர்ந்து விதித்த லாதி யைந்தொழிலும் விருப்பின் முடிக்குந் திறற்பாவாய பஞ்சா ரடியிற் சிறுசிலம்பும் பாத சால மெனும்பிறவும் பற்றா வரையின் மேகலையும் பண்டை மறையாக் கொண்டணிவாய் மஞ்சா ரிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (9)
450 தானே தனக்குச் சரியாய தாயே வருக வுரைக்கவினை தடிவாய் வருக நினைக்கமுத்தி தருவாய் வருக மலர்பொதிந்த கானே புரையுங் கருங்கூந்தற் கவுரி வருக மெய்ஞ்ஞானக் கரும்பே வருக வருள்பழுத்த கனியே வருக தெவிட்டாத தேனே வருக வானந்தத் திருவே வருக பெருவேதச் செல்வீ வருக வெங்கள்குல தெய்வம் வருக வுருகுநருண் மானே வருக விமயவரை வனிதாய் வருக வருகவே மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|