LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்

வாரானைப்பருவம்

 

888 உறந்தகதிர் மண்டிலத் துறைவது தெரிப்பதென வொண்மேனி சேயொளிசெய -
      வோங்குமதி மண்டிலத் துறைவது தெரிப்பதென வொளிர்நீறு வெள்ளொளிசெய,
வறந்தலை யெடுப்பவொளி ரிவ்வொளிக ணோக்குதொறு மடியர்மல பந்தமுழுது -
      மடலற வழித்தழி லிலாதபே ரின்பநிலை யருளிற் கொடுத்திடுதலாற்,
பிறந்தபிர தாபமும் புகழுமே யென்றறிஞர் பேசிமகிழ் தூங்கவளவை -
      பேசிய துணர்ந்துநகை செய்தென முகத்துப் பிறங்குபுன் மூரறோன்றச்,
சிறந்ததிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப்பிரான் வருகவே -
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(1)
889 உற்றபெரு மாதவ முஞற்றுநர்க் கல்லா துஞ்ற்றுதவ மொன்றுமில்லா -
      வுவர்வருக வென்றழைத் திடநா மடைந்திடுத லுரிமையன் றென்றுநினையல்,
பொற்றமதி நிலவுநக ரன்றிவெங் காட்டிலும் புணரிவா யுண்டெழுந்த -
      புயன்மழை செழும்பணை நிலத்தன்றி யுவர்பற்று புவியகத் தும்பொழியுமே,
துற்றமலர் தளிர்மெத் தெனப்பரப் பினமுளத் தூயர்கை கொடுக்கநின்றார் -
      தோலாத விருதுகளு மெதிரெடுத் தேநின் றுணைத்தாள் பெயர்த்துவளமே,
செற்றதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே -
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(1)
890 வருந்துத லிலாதுநின் றாள்பெயர்க் குந்தோறும் வயக்கொடுங் கூற்றமுன்போன் - 
      மார்பிடைத் தாக்குங்கொ லென்றஞ்ச நந்தலையில் வைக்குநந் தலையில்வைக்கும், 
பொருந்துவித மென்றுசில ருண்மகிழ் தரச்சிலர் பொருந்து மென் பூத்தூவவப் -
      பூவினை மிதித்தலவேள் கணையடிக் கீழ்ப்படப் போகட் டடர்த்தலேய்ப்பக்,
குருந்துநிழ லாளிவந் தானருட் சயிலாதி குலமணி நமச்சி வாய - 
      குரவன்வந் தானென்று சின்னங்க ணின்பெயர் குறித்தூத வளவிலறமே,
திருந்துதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான் வருகவே -
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(3)
891 பாங்குபெற வீரடி நடந்துநா லடியெனப் படிறுரைத் தனைதக்கதோ - 
      பார்முழுது நின்விடைக் கோரடி யெனப்பகர்தல் பட்டாங்கு நீயுமுணர்வா,
யோங்குமகிழ் வெய்தவினு மோரடிநடந்திடுக வுள்ளடிகள் கன்றுமென்னி -
      லொருநாவ லூர்நம்பி வாட்டந் தவிர்ப்பதற் கோரிராப் பொழுதினாப்பண்,
வீங்கு மிள முலையுடைப் பரவையார் மாளிகை விழைந்துதிரு வாரூர்ப்பெரு - 
      வீதியிற் பலகா லுழன்றதறி யேங்கொலோ வேதா கமத்துநெறியே,
தேங்குதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே - 
      செம்மைதிகழ் சிவ ஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(4)
892 கள்ளுமண மும்பரவு மென்மலரில் வைக்கவுங் கன்றுநம் மடிகளென்னிற் - 
      கல்லுமுரு டும்பொருவு மெங்கடலை வைத்திடல் கருத்திற் பொருத்திலாயென், 
றுள்ளுதொறும் வெய்துயிர்ப் போங்குமது தீர்பொருட் டுன்னடிபெயர்த்துவைக்க -
      வோரடி யெடுத்துவைத் திடுவமெனி லெங்களுக் குதுபோது மிரு திறத்துந்,
துள்ளுமகிழ் கொண்டியா மீரடி முதற்பலடி தொக்கபா மாலையோடு -
      தோன்றவோ ரடியெனு மிலாதபூ மாலையுஞ் சூட்டுவேந் துறைகொள்பலநூ,
றெள்ளுதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே - 
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே. 
(5)
வேறு.
893 ஒருவா ஞானங் கிரியையென்று முடங்கு மறைக்குந் திரோதான
      முவப்பப் பொலியு மனுக்கிரக வுண்மை யென்று மிவ்விரண்டா
மருவா நிறைநின் றிருவடியை வகுப்பர் யாமு மிவ்விரண்டா
      வருக வருக வெனவடுக்கி மகிழ்ந்து விளிப்போ மாமேதி
பெருவாய் பாய விளவாளை பிறங்கு கமுகிற் பாயவதிற்
      பெயர்ந்து கருவா னரமெழுந்து பெருங்கற் பகமேற் பாயவொளிர்
திருவா வடுதண் டுறையமருஞ் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே 
(6)
894 ஒன்று நிறுவி யொன்றெடுத்தே யூழி பலகண் டம்பலத்து
      ளொருவா தொருநீ நின்றமையி னுற்ற வருத்தஞ் சிறிதுயிர்ப்பா
னன்று புகறு மடிகள் சற்று நடத்தல் வேண்டு மதின்வருத்த 
      நண்ணிற் றாயிற் றடையின்றி நாயே முள்ளத் திருந்திடலாந்
துன்று கதிரோன் றேர்ப்பரிக டுனைந்து படர்வான் மணிமாடந்
      தொறுநின் றிலகு துகிற்கொடிக டுளக்கும் வளியி னசைந்தசைந்து
சென்று புடைக்குந் துறைசையமர் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே 
(7)
895 நல்லார் புகழுந் திருநாவ னல்லூ ரகத்தி லவதரித்த
      நம்பி யியற்று திருமணத்தி னாடி நின்னை யழைத்தவரா 
ரல்லார் கண்ட மறைத்தெழுந்தா யழையா திருக்க வடைந்தமையா
      லாங்கு நிகழ்ந்த பெருஞ்சிறப்பு மடியோ மறைய வேண்டுவதோ
வல்லா ராய யாம்பலகால் வருந்தி யழைக்க வாராமை
      வழக்கோ வழைத்த படிவந்தால் வாழ்த்தே பெறலா மையமிலை
செல்லார் பொழில்சூழ் துறைசைவளர் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே 
(8)
896 தந்தைக் கொலைசெய் திட்டவர்க்குந் தாயைக் கொலைசெய் திட்டவர்க்குந்
      தாரக் கொலைசெய் திட்டவர்க்குந் தனயற் கொலைசெய் திட்டவர்க்கு
முந்தைத் தொடர்பி னுறுங்கடும்பு முழுதுங் கொலைசெய் திட்டவர்க்கு
      முந்தி முந்திச் செல்வையெம்பான் முந்தி வருதற் கென்செய்தோங்
கந்தைக் கறுத்த காடமதக் களிற்றீ ருரியுண் மறைந்துகருங்
      கடலுண் மறைந்த கதிர்கடுக்குங் காட்சி கரந்து வெளிவந்து
சிந்தைக் களிப்பார் துறைசையமர் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே 
(9)
897 முத்தன் வருக யாவருக்கு முன்னோன் வருக முப்புவன
      முதல்வன் வருக முன்னாரை முன்னான் வருக மறைமுடிவி
லத்தன் வருக வகரவுயி ரனையன் வருக நமவொழிக்கு
      மையன் வருக வகரமளித் தருள்வான் வருக வாகமநூற்
கத்தன் வருக கருதுநர்தங் கருத்தன் வருக கலப்புணர்த்துங்
      கையன் வருக வருளுருவக் காளைவருக கவின்றுபொலி
சித்தன் வருக கோமுத்திச் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே 
(10)

 

888 உறந்தகதிர் மண்டிலத் துறைவது தெரிப்பதென வொண்மேனி சேயொளிசெய -

      வோங்குமதி மண்டிலத் துறைவது தெரிப்பதென வொளிர்நீறு வெள்ளொளிசெய,

வறந்தலை யெடுப்பவொளி ரிவ்வொளிக ணோக்குதொறு மடியர்மல பந்தமுழுது -

      மடலற வழித்தழி லிலாதபே ரின்பநிலை யருளிற் கொடுத்திடுதலாற்,

பிறந்தபிர தாபமும் புகழுமே யென்றறிஞர் பேசிமகிழ் தூங்கவளவை -

      பேசிய துணர்ந்துநகை செய்தென முகத்துப் பிறங்குபுன் மூரறோன்றச்,

சிறந்ததிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப்பிரான் வருகவே -

      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.

(1)

889 உற்றபெரு மாதவ முஞற்றுநர்க் கல்லா துஞ்ற்றுதவ மொன்றுமில்லா -

      வுவர்வருக வென்றழைத் திடநா மடைந்திடுத லுரிமையன் றென்றுநினையல்,

பொற்றமதி நிலவுநக ரன்றிவெங் காட்டிலும் புணரிவா யுண்டெழுந்த -

      புயன்மழை செழும்பணை நிலத்தன்றி யுவர்பற்று புவியகத் தும்பொழியுமே,

துற்றமலர் தளிர்மெத் தெனப்பரப் பினமுளத் தூயர்கை கொடுக்கநின்றார் -

      தோலாத விருதுகளு மெதிரெடுத் தேநின் றுணைத்தாள் பெயர்த்துவளமே,

செற்றதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே -

      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.

(1)

890 வருந்துத லிலாதுநின் றாள்பெயர்க் குந்தோறும் வயக்கொடுங் கூற்றமுன்போன் - 

      மார்பிடைத் தாக்குங்கொ லென்றஞ்ச நந்தலையில் வைக்குநந் தலையில்வைக்கும், 

பொருந்துவித மென்றுசில ருண்மகிழ் தரச்சிலர் பொருந்து மென் பூத்தூவவப் -

      பூவினை மிதித்தலவேள் கணையடிக் கீழ்ப்படப் போகட் டடர்த்தலேய்ப்பக்,

குருந்துநிழ லாளிவந் தானருட் சயிலாதி குலமணி நமச்சி வாய - 

      குரவன்வந் தானென்று சின்னங்க ணின்பெயர் குறித்தூத வளவிலறமே,

திருந்துதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான் வருகவே -

      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.

(3)

891 பாங்குபெற வீரடி நடந்துநா லடியெனப் படிறுரைத் தனைதக்கதோ - 

      பார்முழுது நின்விடைக் கோரடி யெனப்பகர்தல் பட்டாங்கு நீயுமுணர்வா,

யோங்குமகிழ் வெய்தவினு மோரடிநடந்திடுக வுள்ளடிகள் கன்றுமென்னி -

      லொருநாவ லூர்நம்பி வாட்டந் தவிர்ப்பதற் கோரிராப் பொழுதினாப்பண்,

வீங்கு மிள முலையுடைப் பரவையார் மாளிகை விழைந்துதிரு வாரூர்ப்பெரு - 

      வீதியிற் பலகா லுழன்றதறி யேங்கொலோ வேதா கமத்துநெறியே,

தேங்குதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே - 

      செம்மைதிகழ் சிவ ஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.

(4)

892 கள்ளுமண மும்பரவு மென்மலரில் வைக்கவுங் கன்றுநம் மடிகளென்னிற் - 

      கல்லுமுரு டும்பொருவு மெங்கடலை வைத்திடல் கருத்திற் பொருத்திலாயென், 

றுள்ளுதொறும் வெய்துயிர்ப் போங்குமது தீர்பொருட் டுன்னடிபெயர்த்துவைக்க -

      வோரடி யெடுத்துவைத் திடுவமெனி லெங்களுக் குதுபோது மிரு திறத்துந்,

துள்ளுமகிழ் கொண்டியா மீரடி முதற்பலடி தொக்கபா மாலையோடு -

      தோன்றவோ ரடியெனு மிலாதபூ மாலையுஞ் சூட்டுவேந் துறைகொள்பலநூ,

றெள்ளுதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே - 

      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே. 

(5)

 

வேறு.

893 ஒருவா ஞானங் கிரியையென்று முடங்கு மறைக்குந் திரோதான

      முவப்பப் பொலியு மனுக்கிரக வுண்மை யென்று மிவ்விரண்டா

மருவா நிறைநின் றிருவடியை வகுப்பர் யாமு மிவ்விரண்டா

      வருக வருக வெனவடுக்கி மகிழ்ந்து விளிப்போ மாமேதி

பெருவாய் பாய விளவாளை பிறங்கு கமுகிற் பாயவதிற்

      பெயர்ந்து கருவா னரமெழுந்து பெருங்கற் பகமேற் பாயவொளிர்

திருவா வடுதண் டுறையமருஞ் செல்வன் வருக வருகவே

      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே 

(6)

894 ஒன்று நிறுவி யொன்றெடுத்தே யூழி பலகண் டம்பலத்து

      ளொருவா தொருநீ நின்றமையி னுற்ற வருத்தஞ் சிறிதுயிர்ப்பா

னன்று புகறு மடிகள் சற்று நடத்தல் வேண்டு மதின்வருத்த 

      நண்ணிற் றாயிற் றடையின்றி நாயே முள்ளத் திருந்திடலாந்

துன்று கதிரோன் றேர்ப்பரிக டுனைந்து படர்வான் மணிமாடந்

      தொறுநின் றிலகு துகிற்கொடிக டுளக்கும் வளியி னசைந்தசைந்து

சென்று புடைக்குந் துறைசையமர் செல்வன் வருக வருகவே

      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே 

(7)

895 நல்லார் புகழுந் திருநாவ னல்லூ ரகத்தி லவதரித்த

      நம்பி யியற்று திருமணத்தி னாடி நின்னை யழைத்தவரா 

ரல்லார் கண்ட மறைத்தெழுந்தா யழையா திருக்க வடைந்தமையா

      லாங்கு நிகழ்ந்த பெருஞ்சிறப்பு மடியோ மறைய வேண்டுவதோ

வல்லா ராய யாம்பலகால் வருந்தி யழைக்க வாராமை

      வழக்கோ வழைத்த படிவந்தால் வாழ்த்தே பெறலா மையமிலை

செல்லார் பொழில்சூழ் துறைசைவளர் செல்வன் வருக வருகவே

      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே 

(8)

896 தந்தைக் கொலைசெய் திட்டவர்க்குந் தாயைக் கொலைசெய் திட்டவர்க்குந்

      தாரக் கொலைசெய் திட்டவர்க்குந் தனயற் கொலைசெய் திட்டவர்க்கு

முந்தைத் தொடர்பி னுறுங்கடும்பு முழுதுங் கொலைசெய் திட்டவர்க்கு

      முந்தி முந்திச் செல்வையெம்பான் முந்தி வருதற் கென்செய்தோங்

கந்தைக் கறுத்த காடமதக் களிற்றீ ருரியுண் மறைந்துகருங்

      கடலுண் மறைந்த கதிர்கடுக்குங் காட்சி கரந்து வெளிவந்து

சிந்தைக் களிப்பார் துறைசையமர் செல்வன் வருக வருகவே

      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே 

(9)

897 முத்தன் வருக யாவருக்கு முன்னோன் வருக முப்புவன

      முதல்வன் வருக முன்னாரை முன்னான் வருக மறைமுடிவி

லத்தன் வருக வகரவுயி ரனையன் வருக நமவொழிக்கு

      மையன் வருக வகரமளித் தருள்வான் வருக வாகமநூற்

கத்தன் வருக கருதுநர்தங் கருத்தன் வருக கலப்புணர்த்துங்

      கையன் வருக வருளுருவக் காளைவருக கவின்றுபொலி

சித்தன் வருக கோமுத்திச் செல்வன் வருக வருகவே

      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே 

(10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.