|
||||||||
வாரானைப்பருவம் |
||||||||
888 உறந்தகதிர் மண்டிலத் துறைவது தெரிப்பதென வொண்மேனி சேயொளிசெய -
வோங்குமதி மண்டிலத் துறைவது தெரிப்பதென வொளிர்நீறு வெள்ளொளிசெய,
வறந்தலை யெடுப்பவொளி ரிவ்வொளிக ணோக்குதொறு மடியர்மல பந்தமுழுது -
மடலற வழித்தழி லிலாதபே ரின்பநிலை யருளிற் கொடுத்திடுதலாற்,
பிறந்தபிர தாபமும் புகழுமே யென்றறிஞர் பேசிமகிழ் தூங்கவளவை -
பேசிய துணர்ந்துநகை செய்தென முகத்துப் பிறங்குபுன் மூரறோன்றச்,
சிறந்ததிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப்பிரான் வருகவே -
செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(1)
889 உற்றபெரு மாதவ முஞற்றுநர்க் கல்லா துஞ்ற்றுதவ மொன்றுமில்லா -
வுவர்வருக வென்றழைத் திடநா மடைந்திடுத லுரிமையன் றென்றுநினையல்,
பொற்றமதி நிலவுநக ரன்றிவெங் காட்டிலும் புணரிவா யுண்டெழுந்த -
புயன்மழை செழும்பணை நிலத்தன்றி யுவர்பற்று புவியகத் தும்பொழியுமே,
துற்றமலர் தளிர்மெத் தெனப்பரப் பினமுளத் தூயர்கை கொடுக்கநின்றார் -
தோலாத விருதுகளு மெதிரெடுத் தேநின் றுணைத்தாள் பெயர்த்துவளமே,
செற்றதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே -
செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(1)
890 வருந்துத லிலாதுநின் றாள்பெயர்க் குந்தோறும் வயக்கொடுங் கூற்றமுன்போன் -
மார்பிடைத் தாக்குங்கொ லென்றஞ்ச நந்தலையில் வைக்குநந் தலையில்வைக்கும்,
பொருந்துவித மென்றுசில ருண்மகிழ் தரச்சிலர் பொருந்து மென் பூத்தூவவப் -
பூவினை மிதித்தலவேள் கணையடிக் கீழ்ப்படப் போகட் டடர்த்தலேய்ப்பக்,
குருந்துநிழ லாளிவந் தானருட் சயிலாதி குலமணி நமச்சி வாய -
குரவன்வந் தானென்று சின்னங்க ணின்பெயர் குறித்தூத வளவிலறமே,
திருந்துதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான் வருகவே -
செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(3)
891 பாங்குபெற வீரடி நடந்துநா லடியெனப் படிறுரைத் தனைதக்கதோ -
பார்முழுது நின்விடைக் கோரடி யெனப்பகர்தல் பட்டாங்கு நீயுமுணர்வா,
யோங்குமகிழ் வெய்தவினு மோரடிநடந்திடுக வுள்ளடிகள் கன்றுமென்னி -
லொருநாவ லூர்நம்பி வாட்டந் தவிர்ப்பதற் கோரிராப் பொழுதினாப்பண்,
வீங்கு மிள முலையுடைப் பரவையார் மாளிகை விழைந்துதிரு வாரூர்ப்பெரு -
வீதியிற் பலகா லுழன்றதறி யேங்கொலோ வேதா கமத்துநெறியே,
தேங்குதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே -
செம்மைதிகழ் சிவ ஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(4)
892 கள்ளுமண மும்பரவு மென்மலரில் வைக்கவுங் கன்றுநம் மடிகளென்னிற் -
கல்லுமுரு டும்பொருவு மெங்கடலை வைத்திடல் கருத்திற் பொருத்திலாயென்,
றுள்ளுதொறும் வெய்துயிர்ப் போங்குமது தீர்பொருட் டுன்னடிபெயர்த்துவைக்க -
வோரடி யெடுத்துவைத் திடுவமெனி லெங்களுக் குதுபோது மிரு திறத்துந்,
துள்ளுமகிழ் கொண்டியா மீரடி முதற்பலடி தொக்கபா மாலையோடு -
தோன்றவோ ரடியெனு மிலாதபூ மாலையுஞ் சூட்டுவேந் துறைகொள்பலநூ,
றெள்ளுதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே -
செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(5)
வேறு.
893 ஒருவா ஞானங் கிரியையென்று முடங்கு மறைக்குந் திரோதான
முவப்பப் பொலியு மனுக்கிரக வுண்மை யென்று மிவ்விரண்டா
மருவா நிறைநின் றிருவடியை வகுப்பர் யாமு மிவ்விரண்டா
வருக வருக வெனவடுக்கி மகிழ்ந்து விளிப்போ மாமேதி
பெருவாய் பாய விளவாளை பிறங்கு கமுகிற் பாயவதிற்
பெயர்ந்து கருவா னரமெழுந்து பெருங்கற் பகமேற் பாயவொளிர்
திருவா வடுதண் டுறையமருஞ் செல்வன் வருக வருகவே
திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே
(6)
894 ஒன்று நிறுவி யொன்றெடுத்தே யூழி பலகண் டம்பலத்து
ளொருவா தொருநீ நின்றமையி னுற்ற வருத்தஞ் சிறிதுயிர்ப்பா
னன்று புகறு மடிகள் சற்று நடத்தல் வேண்டு மதின்வருத்த
நண்ணிற் றாயிற் றடையின்றி நாயே முள்ளத் திருந்திடலாந்
துன்று கதிரோன் றேர்ப்பரிக டுனைந்து படர்வான் மணிமாடந்
தொறுநின் றிலகு துகிற்கொடிக டுளக்கும் வளியி னசைந்தசைந்து
சென்று புடைக்குந் துறைசையமர் செல்வன் வருக வருகவே
திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே
(7)
895 நல்லார் புகழுந் திருநாவ னல்லூ ரகத்தி லவதரித்த
நம்பி யியற்று திருமணத்தி னாடி நின்னை யழைத்தவரா
ரல்லார் கண்ட மறைத்தெழுந்தா யழையா திருக்க வடைந்தமையா
லாங்கு நிகழ்ந்த பெருஞ்சிறப்பு மடியோ மறைய வேண்டுவதோ
வல்லா ராய யாம்பலகால் வருந்தி யழைக்க வாராமை
வழக்கோ வழைத்த படிவந்தால் வாழ்த்தே பெறலா மையமிலை
செல்லார் பொழில்சூழ் துறைசைவளர் செல்வன் வருக வருகவே
திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே
(8)
896 தந்தைக் கொலைசெய் திட்டவர்க்குந் தாயைக் கொலைசெய் திட்டவர்க்குந்
தாரக் கொலைசெய் திட்டவர்க்குந் தனயற் கொலைசெய் திட்டவர்க்கு
முந்தைத் தொடர்பி னுறுங்கடும்பு முழுதுங் கொலைசெய் திட்டவர்க்கு
முந்தி முந்திச் செல்வையெம்பான் முந்தி வருதற் கென்செய்தோங்
கந்தைக் கறுத்த காடமதக் களிற்றீ ருரியுண் மறைந்துகருங்
கடலுண் மறைந்த கதிர்கடுக்குங் காட்சி கரந்து வெளிவந்து
சிந்தைக் களிப்பார் துறைசையமர் செல்வன் வருக வருகவே
திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே
(9)
897 முத்தன் வருக யாவருக்கு முன்னோன் வருக முப்புவன
முதல்வன் வருக முன்னாரை முன்னான் வருக மறைமுடிவி
லத்தன் வருக வகரவுயி ரனையன் வருக நமவொழிக்கு
மையன் வருக வகரமளித் தருள்வான் வருக வாகமநூற்
கத்தன் வருக கருதுநர்தங் கருத்தன் வருக கலப்புணர்த்துங்
கையன் வருக வருளுருவக் காளைவருக கவின்றுபொலி
சித்தன் வருக கோமுத்திச் செல்வன் வருக வருகவே
திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே
(10)
888 உறந்தகதிர் மண்டிலத் துறைவது தெரிப்பதென வொண்மேனி சேயொளிசெய - வோங்குமதி மண்டிலத் துறைவது தெரிப்பதென வொளிர்நீறு வெள்ளொளிசெய, வறந்தலை யெடுப்பவொளி ரிவ்வொளிக ணோக்குதொறு மடியர்மல பந்தமுழுது - மடலற வழித்தழி லிலாதபே ரின்பநிலை யருளிற் கொடுத்திடுதலாற், பிறந்தபிர தாபமும் புகழுமே யென்றறிஞர் பேசிமகிழ் தூங்கவளவை - பேசிய துணர்ந்துநகை செய்தென முகத்துப் பிறங்குபுன் மூரறோன்றச், சிறந்ததிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப்பிரான் வருகவே - செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே. (1) 889 உற்றபெரு மாதவ முஞற்றுநர்க் கல்லா துஞ்ற்றுதவ மொன்றுமில்லா - வுவர்வருக வென்றழைத் திடநா மடைந்திடுத லுரிமையன் றென்றுநினையல், பொற்றமதி நிலவுநக ரன்றிவெங் காட்டிலும் புணரிவா யுண்டெழுந்த - புயன்மழை செழும்பணை நிலத்தன்றி யுவர்பற்று புவியகத் தும்பொழியுமே, துற்றமலர் தளிர்மெத் தெனப்பரப் பினமுளத் தூயர்கை கொடுக்கநின்றார் - தோலாத விருதுகளு மெதிரெடுத் தேநின் றுணைத்தாள் பெயர்த்துவளமே, செற்றதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே - செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே. (1) 890 வருந்துத லிலாதுநின் றாள்பெயர்க் குந்தோறும் வயக்கொடுங் கூற்றமுன்போன் - மார்பிடைத் தாக்குங்கொ லென்றஞ்ச நந்தலையில் வைக்குநந் தலையில்வைக்கும், பொருந்துவித மென்றுசில ருண்மகிழ் தரச்சிலர் பொருந்து மென் பூத்தூவவப் - பூவினை மிதித்தலவேள் கணையடிக் கீழ்ப்படப் போகட் டடர்த்தலேய்ப்பக், குருந்துநிழ லாளிவந் தானருட் சயிலாதி குலமணி நமச்சி வாய - குரவன்வந் தானென்று சின்னங்க ணின்பெயர் குறித்தூத வளவிலறமே, திருந்துதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான் வருகவே - செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே. (3) 891 பாங்குபெற வீரடி நடந்துநா லடியெனப் படிறுரைத் தனைதக்கதோ - பார்முழுது நின்விடைக் கோரடி யெனப்பகர்தல் பட்டாங்கு நீயுமுணர்வா, யோங்குமகிழ் வெய்தவினு மோரடிநடந்திடுக வுள்ளடிகள் கன்றுமென்னி - லொருநாவ லூர்நம்பி வாட்டந் தவிர்ப்பதற் கோரிராப் பொழுதினாப்பண், வீங்கு மிள முலையுடைப் பரவையார் மாளிகை விழைந்துதிரு வாரூர்ப்பெரு - வீதியிற் பலகா லுழன்றதறி யேங்கொலோ வேதா கமத்துநெறியே, தேங்குதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே - செம்மைதிகழ் சிவ ஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே. (4) 892 கள்ளுமண மும்பரவு மென்மலரில் வைக்கவுங் கன்றுநம் மடிகளென்னிற் - கல்லுமுரு டும்பொருவு மெங்கடலை வைத்திடல் கருத்திற் பொருத்திலாயென், றுள்ளுதொறும் வெய்துயிர்ப் போங்குமது தீர்பொருட் டுன்னடிபெயர்த்துவைக்க - வோரடி யெடுத்துவைத் திடுவமெனி லெங்களுக் குதுபோது மிரு திறத்துந், துள்ளுமகிழ் கொண்டியா மீரடி முதற்பலடி தொக்கபா மாலையோடு - தோன்றவோ ரடியெனு மிலாதபூ மாலையுஞ் சூட்டுவேந் துறைகொள்பலநூ, றெள்ளுதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே - செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே. (5)
வேறு. 893 ஒருவா ஞானங் கிரியையென்று முடங்கு மறைக்குந் திரோதான முவப்பப் பொலியு மனுக்கிரக வுண்மை யென்று மிவ்விரண்டா மருவா நிறைநின் றிருவடியை வகுப்பர் யாமு மிவ்விரண்டா வருக வருக வெனவடுக்கி மகிழ்ந்து விளிப்போ மாமேதி பெருவாய் பாய விளவாளை பிறங்கு கமுகிற் பாயவதிற் பெயர்ந்து கருவா னரமெழுந்து பெருங்கற் பகமேற் பாயவொளிர் திருவா வடுதண் டுறையமருஞ் செல்வன் வருக வருகவே திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே (6) 894 ஒன்று நிறுவி யொன்றெடுத்தே யூழி பலகண் டம்பலத்து ளொருவா தொருநீ நின்றமையி னுற்ற வருத்தஞ் சிறிதுயிர்ப்பா னன்று புகறு மடிகள் சற்று நடத்தல் வேண்டு மதின்வருத்த நண்ணிற் றாயிற் றடையின்றி நாயே முள்ளத் திருந்திடலாந் துன்று கதிரோன் றேர்ப்பரிக டுனைந்து படர்வான் மணிமாடந் தொறுநின் றிலகு துகிற்கொடிக டுளக்கும் வளியி னசைந்தசைந்து சென்று புடைக்குந் துறைசையமர் செல்வன் வருக வருகவே திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே (7) 895 நல்லார் புகழுந் திருநாவ னல்லூ ரகத்தி லவதரித்த நம்பி யியற்று திருமணத்தி னாடி நின்னை யழைத்தவரா ரல்லார் கண்ட மறைத்தெழுந்தா யழையா திருக்க வடைந்தமையா லாங்கு நிகழ்ந்த பெருஞ்சிறப்பு மடியோ மறைய வேண்டுவதோ வல்லா ராய யாம்பலகால் வருந்தி யழைக்க வாராமை வழக்கோ வழைத்த படிவந்தால் வாழ்த்தே பெறலா மையமிலை செல்லார் பொழில்சூழ் துறைசைவளர் செல்வன் வருக வருகவே திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே (8) 896 தந்தைக் கொலைசெய் திட்டவர்க்குந் தாயைக் கொலைசெய் திட்டவர்க்குந் தாரக் கொலைசெய் திட்டவர்க்குந் தனயற் கொலைசெய் திட்டவர்க்கு முந்தைத் தொடர்பி னுறுங்கடும்பு முழுதுங் கொலைசெய் திட்டவர்க்கு முந்தி முந்திச் செல்வையெம்பான் முந்தி வருதற் கென்செய்தோங் கந்தைக் கறுத்த காடமதக் களிற்றீ ருரியுண் மறைந்துகருங் கடலுண் மறைந்த கதிர்கடுக்குங் காட்சி கரந்து வெளிவந்து சிந்தைக் களிப்பார் துறைசையமர் செல்வன் வருக வருகவே திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே (9) 897 முத்தன் வருக யாவருக்கு முன்னோன் வருக முப்புவன முதல்வன் வருக முன்னாரை முன்னான் வருக மறைமுடிவி லத்தன் வருக வகரவுயி ரனையன் வருக நமவொழிக்கு மையன் வருக வகரமளித் தருள்வான் வருக வாகமநூற் கத்தன் வருக கருதுநர்தங் கருத்தன் வருக கலப்புணர்த்துங் கையன் வருக வருளுருவக் காளைவருக கவின்றுபொலி சித்தன் வருக கோமுத்திச் செல்வன் வருக வருகவே திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|