LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- சத்யானந்தன்

வாசம்

 

“நீ இன்னாத்துக்குடா நாயே எம்மவனோட கார்டை வாங்கினே….” சரோஜாவின் குரல் ஓங்கிக் கேட்டது.
” இன்னாம்மா நீ… உன் பையன் சொல்லிக்கினா அந்த சிம் கார்டு நான் வாங்கினேன்னு ஆயிருமா?” பதில் சொல்வது தன் மகன் டில்லிபாபுதான்..தெரு முனை திரும்பி என்ன என்று விசாரிக்கும் வரை பொறுக்காது போல் தோன்றியது. பெட்டிக்கடை வழியே ஒரு இடைவெளி உண்டு. அதில் நுழைய முடியாமல் தலையை கழுத்து வலிக்க நீட்டி எட்டிப் பார்த்தாள். டில்லி பாபுவைச் சுற்றி சரோஜா, அவள் மகன் மாணிக்கம், எலெக்ட்ரீஷியன் செல்வா, டீக்கடைப் பையன் தினேஷு இன்னும் பல தலைகள் தெரிந்தன.
“டேய்…மூவாயிரம் ரூபா டெலிபோன் ஆபீஸ்காரங்க வந்து ஓலை வெச்சுட்டுப் போயிக்கிறாங்க.. எங்க செண்பகா வேலை செய்யுற வுட்டு அய்யிரு அத்தப் படிச்சுப் பாத்துட்டு பணம் கட்டலேன்னா கோர்ட்டு போலீஸுன்னு பேஜாராவுன்றாரு…”
‘இன்னாம்மா.. அத்தையே சொல்லிக்கினு.. உங்க பையன் லோகு என் கிட்டே ஒரு கார்டு குத்தான்.. ஆனா இரு நூறு ரூபா வாங்கிக்கினு தான் குத்தான். அது கூப்பன் போடுற கார்டு. அப்பப்போ கூப்பன் போட்டு பேசினேன். இப்போ என் கிட்டே இருக்கிறது வேறே.. எங்க முதலாளி குத்தது…”
“இன்னாடா நாயே நூலு நூக்கறே.. ” சரோஜா டில்லியின் சட்டையைப் பிடிப்பதைப் பார்த்து சுசீலாவால் சகிக்க இயலவில்லை.
“ஆருடி என் பையன் சட்டையிலே கையை வெக்கிறவ?” என்றபடி சந்தைத் தாண்டி விரைந்து சுசீலா காலனிக்குள் நுழைந்தாள். ரேசன் கார்டு பற்றி சண்டை இல்லை என்று புரிந்தது. டெலிபோன் ஆபீஸில் என்ன கார்டு தருகிறார்கள்?
“நீ கம்முனு இரும்மா..உனக்கு இன்னா தெரியும்?” டில்லி சுசீலாவை விலக்கினான். சரோஜாவைப் பார்த்து “சேட்டு இரு நூறு ரூபா குத்து என் கைலே வாங்கினான்..அவன் கைலேப் போய்க் கேளு”என்றான்.
“ராத்திரி லோகு வரட்டும்டா…தேவுடியாப் பையா.. உனக்கு இருக்கு..” என்றாள் சரோஜா.
“இன்னாடீ சொன்னே.. நீ பண்ணுடீ தொளிலு..உன் பையனை அனுப்பி ஆளை இட்டா..” சுசீலா சரோஜாவின் தலை முடியைப் பற்றினாள். ‘இது ஏதோ சரக்கு அடிச்சிட்டி ஒளருது’ என்று தன் தாய் சுசீலாவைப் பற்றி இழுத்தவாறு வீடு நோக்கி நகர்ந்தான். சரோஜாவின் வாயிலிருந்து மேலும் மேலும் வசவுகள் தாறு மாறாகத் தொடர்ந்தன.
முந்தா நாள் இரவு ட்யூட்டிக்குப் போனவன் டில்லி. திருப்பதிக்கு ஒரு குடும்பத்தை அழைத்துச் சென்று விட்டு இப்போது தான் வருகிறான். அவன் கொடுத்த லட்டை ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடியபடி “சோறு கீது.. மீன் கொளம்பு வாங்கியாறட்டா?” என்றாள் “வோணாம். அந்தப் பார்ட்டி ஓட்டல்ல வாங்கித் தந்தாங்க.. சட்டையைக் கழற்றி விட்டு அடி பம்புக்கு பக்கெட்டுடன் குளிக்கக் கிளம்பி விட்டான்.
டெலிபோன் கார்டு பற்றி யாரிடமாவது விசாரிக்க வேண்டும். இவன் எதையும் சொல்ல மாட்டான். ஆனால் அடுத்தவளான சாந்தி அப்படியில்லை. வாக்காளர் அட்டைக்கு போட்டோ எடுக்க வருகிறார்கள் என்று விளக்கி அழைத்துப் போனாள். இவனைப் போல ஒன்பதாம் கிளாஸில் படிப்பை நிறுத்தாமல் பன்னிரண்டு கிளாஸும் படித்தாள். அப்பா அம்மா என்ற மரியாதை தெரிந்தவள். பெருங்குடி வரை நடந்தே போய் வருகிறாள். ஷேர் ஆட்டோவுக்கு “அஞ்சு ரூபாய்” கொடுக்காமல் மீதம் பிடிப்பாள்.
சரோஜாவின் கெட்ட வார்த்தை வசவு தாங்க இயலாமையில் தான் கபாலி கட்சியில் சேர்ந்து வீட்டருகே கொடியை நாட்டினான் குப்பமே வயிரெறிய. லோகு தனக்கும் கட்சியில் ஒரு வேலை கிடைக்குமா என்று டில்லியிடம் கேட்டான். “தோடா.. என்னையே என் நைனா இட்டுக்கல. அவரு கொட்டிவாக்கமின்னு நெனெக்காத.. ராயபுரத்தில தான் பார்ட்டி வேலை செய்யிறாரு…”
“யக்காவ்..” பக்கத்து வீட்டு மல்லிகா உலுக்கி எழுப்பும் போது வெய்யில் தாழும் நேரம். “இன்னாக்கா ஊட்டைத் தொறந்து போட்டுக்கினு தூங்குறே?”
“இங்கே இன்னாக் கீது?… கட்சி ஆபீஸு போஸ்டரும் கார்டுந்தான் கீது…”
“திருவான்மியூர் கோயில்ல தேரு… வர்றியா பாத்துட்டு வரலாம்..”
“கொஞ்ச நேரத்தில சாந்தி வந்திரும்.. அத்தே இஸ்திக்கினு வாரேன்..”
மதியம் படுக்கும் போதே வயிற்றை சுருக்கென வலித்தது.இப்பொஓது கொக்கி போட்டு இழுப்பது போல வலிக்கிறது. நாளை காலை முதல் வேலையாக கார்ப்பொரேஸன் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும். வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன்பு சாந்தி நடக்கும் தூரமோ ஷேர் ஆட்டோ தூரமோ ஏதேனும் டாக்டர் இருபது ரூபாய்க்குள் வாங்குகிற ‘பொம்பள டாக்டர்’ இடம் அழைத்துச் செல்வாள். துணி தைக்கிற பாக்டரி வேலை வந்ததும் காலையில் போனால் இருட்டுவதற்குள் வேகு வேகு என ஓடி வந்து சேரவே சரியாக இருக்கிறது. அவள் வந்ததும் டீ வாங்கி வரச் சொல்ல வேண்டும்.
வயிற்று வலி சொடுக்கி சொடுக்கி இழுத்தது. சாந்திக்கு முன் பிறந்த ஒன்று வயிற்றில் தங்காமல் கலைந்து போனது. மாதா மாதம் என்றே ஒரு கணக்கு இல்லாமல் உதிரப் போக்கு. வயிற்று வலியும் அவ்வப் போது சுருக் சுருக்கென்று கொல்லுகிறது. சாந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கோ ராயப் பேட்டைக்கோ அழைத்துப் போவதாகச் சொல்லி இருக்கிறாள்.
இருட்டி விட்டது. எழுந்து மின் விளக்கை எரியச் செய்தாள். மணி என்ன இருக்கும்? வாசல் நிலைப் படியில் அமர்ந்து கொண்டாள். சாந்தி வந்தால் பசி பசி என்று பறப்பாள். எழுந்து சோறாக்க வேண்டும். எழுந்தால் இன்னும் வலிக்குமோ என பயமாக இருந்தது. பேப்பர் போடுகிற ராஜா கண்ணில் பட்டான். “டேய்.. மணி இன்னாடா?”
“ஏழரை ” வண்டியில் விரைந்தான்.
மணி ஏழரை ஆகி விட்டதா? என்ன ஆனாலும் சாந்தி இருட்டிய பிறகு வேலை முடித்து வர மாட்டாள்.
என்ன ஆகியிருக்கும்? நடந்து தானே வருகிறாள்? ஏனோ மீன் கூடையோடு அன்று ஒரு நாள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிணமாகக் கிடந்த பெண் நினைவுக்கு வந்தாள். அவளும் நடந்து தான் போய்க் கொண்டிருந்தவள்.
எப்படியும் சாந்தி வந்து விடுவாள். கூட வந்தவள் எவளாவது கடைவீதி, தேரு என்று இழுத்துப் போயிருப்பாள்.
தேக்ஸாவில் அரிசியைக் கழுவி அடுப்பில் சோறு வைத்தாள். டில்லி காஸ் வாங்கித் தந்ததில் சீக்கிரமே, கொதிக்க ஆரம்பித்தது. மறுபடி வாயிற்படியில் அமர்ந்து கொண்டாள்.
சினிமாப் பாட்டுச் சத்தம் பெரிதாகக் கேட்டது. ஹவுஸிங் போர்டு பக்கம் தேர்தல் கூட்டமாக இருக்க வேண்டும். ராயபுரத்தில் செய்கிற வேலையை கபாலி இங்கே செய்யக் கூடாதா? நாட் கணக்கில் வீட்டையே எட்டிப் பார்க்காமல் இருப்பதை விட அவ்வப் போது வந்து போகலாமே?
சோறு வெந்து விட்டது. கதவை மூடி விட்டு வெளியே நடந்தாள். வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது. மாட வீதியை நெருங்க நெருங்க நடை பாதைக் கடைக்காரர்கள் கூவி விற்கும் சத்தம் நெருங்கி வந்தது. இருப்பிலிருந்த சுருக்குப் பையைத் திறந்து காசு எடுத்து ஒரு கடையில் டீ சாப்பிட்டாள். டீக்கடை கடிகாரத்தில் மணி எட்டரையானது தெரிந்தது.
திரும்பி வீட்டை நெருங்க நெருங்க கால் துவண்டது. வீடு பூட்டியே இருந்தது. சாந்தி இன்னும் வரவில்லை. பாயை விரித்துப் படுத்தாள்.
சாந்தியுடன் வேலை பார்க்கிறவர்களில் இருவர் இந்த வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள். ஒருத்தி நீலாங்கரை. இன்னொருத்தி கேளம்பாக்கம். ஒருவர் டெலிபோன் நம்பரோ அட்ரஸோ தெரியாது. இது போல் அவள் தாமதமாக வந்ததுமில்லை. குப்பத்தில் இது பெரிய ரகளை ஆகி விடுமே? என்ன சொல்லி சமாளிக்கலாம் ? டில்லியை போன் பண்ணி வரச் சொல்லலாமா? வலி வெட்டி வெட்டி இழுத்தது. எவ்வளவு நேரம் தூங்கி இருப்பாள்? பின்னிரவில் புரண்டு படுத்த போது சாந்தி அருகில் இருந்தாள். அவள் தலையிலிருந்து மல்லிகைப்பூ வாசனையாய்.

“நீ இன்னாத்துக்குடா நாயே எம்மவனோட கார்டை வாங்கினே….” சரோஜாவின் குரல் ஓங்கிக் கேட்டது.

 

” இன்னாம்மா நீ… உன் பையன் சொல்லிக்கினா அந்த சிம் கார்டு நான் வாங்கினேன்னு ஆயிருமா?” பதில் சொல்வது தன் மகன் டில்லிபாபுதான்..தெரு முனை திரும்பி என்ன என்று விசாரிக்கும் வரை பொறுக்காது போல் தோன்றியது. பெட்டிக்கடை வழியே ஒரு இடைவெளி உண்டு. அதில் நுழைய முடியாமல் தலையை கழுத்து வலிக்க நீட்டி எட்டிப் பார்த்தாள். டில்லி பாபுவைச் சுற்றி சரோஜா, அவள் மகன் மாணிக்கம், எலெக்ட்ரீஷியன் செல்வா, டீக்கடைப் பையன் தினேஷு இன்னும் பல தலைகள் தெரிந்தன.

 

“டேய்…மூவாயிரம் ரூபா டெலிபோன் ஆபீஸ்காரங்க வந்து ஓலை வெச்சுட்டுப் போயிக்கிறாங்க.. எங்க செண்பகா வேலை செய்யுற வுட்டு அய்யிரு அத்தப் படிச்சுப் பாத்துட்டு பணம் கட்டலேன்னா கோர்ட்டு போலீஸுன்னு பேஜாராவுன்றாரு…”

 

‘இன்னாம்மா.. அத்தையே சொல்லிக்கினு.. உங்க பையன் லோகு என் கிட்டே ஒரு கார்டு குத்தான்.. ஆனா இரு நூறு ரூபா வாங்கிக்கினு தான் குத்தான். அது கூப்பன் போடுற கார்டு. அப்பப்போ கூப்பன் போட்டு பேசினேன். இப்போ என் கிட்டே இருக்கிறது வேறே.. எங்க முதலாளி குத்தது…”

 

“இன்னாடா நாயே நூலு நூக்கறே.. ” சரோஜா டில்லியின் சட்டையைப் பிடிப்பதைப் பார்த்து சுசீலாவால் சகிக்க இயலவில்லை.

 

“ஆருடி என் பையன் சட்டையிலே கையை வெக்கிறவ?” என்றபடி சந்தைத் தாண்டி விரைந்து சுசீலா காலனிக்குள் நுழைந்தாள். ரேசன் கார்டு பற்றி சண்டை இல்லை என்று புரிந்தது. டெலிபோன் ஆபீஸில் என்ன கார்டு தருகிறார்கள்?

 

“நீ கம்முனு இரும்மா..உனக்கு இன்னா தெரியும்?” டில்லி சுசீலாவை விலக்கினான். சரோஜாவைப் பார்த்து “சேட்டு இரு நூறு ரூபா குத்து என் கைலே வாங்கினான்..அவன் கைலேப் போய்க் கேளு”என்றான்.

 

“ராத்திரி லோகு வரட்டும்டா…தேவுடியாப் பையா.. உனக்கு இருக்கு..” என்றாள் சரோஜா.

 

“இன்னாடீ சொன்னே.. நீ பண்ணுடீ தொளிலு..உன் பையனை அனுப்பி ஆளை இட்டா..” சுசீலா சரோஜாவின் தலை முடியைப் பற்றினாள். ‘இது ஏதோ சரக்கு அடிச்சிட்டி ஒளருது’ என்று தன் தாய் சுசீலாவைப் பற்றி இழுத்தவாறு வீடு நோக்கி நகர்ந்தான். சரோஜாவின் வாயிலிருந்து மேலும் மேலும் வசவுகள் தாறு மாறாகத் தொடர்ந்தன.

 

முந்தா நாள் இரவு ட்யூட்டிக்குப் போனவன் டில்லி. திருப்பதிக்கு ஒரு குடும்பத்தை அழைத்துச் சென்று விட்டு இப்போது தான் வருகிறான். அவன் கொடுத்த லட்டை ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடியபடி “சோறு கீது.. மீன் கொளம்பு வாங்கியாறட்டா?” என்றாள் “வோணாம். அந்தப் பார்ட்டி ஓட்டல்ல வாங்கித் தந்தாங்க.. சட்டையைக் கழற்றி விட்டு அடி பம்புக்கு பக்கெட்டுடன் குளிக்கக் கிளம்பி விட்டான்.

 

டெலிபோன் கார்டு பற்றி யாரிடமாவது விசாரிக்க வேண்டும். இவன் எதையும் சொல்ல மாட்டான். ஆனால் அடுத்தவளான சாந்தி அப்படியில்லை. வாக்காளர் அட்டைக்கு போட்டோ எடுக்க வருகிறார்கள் என்று விளக்கி அழைத்துப் போனாள். இவனைப் போல ஒன்பதாம் கிளாஸில் படிப்பை நிறுத்தாமல் பன்னிரண்டு கிளாஸும் படித்தாள். அப்பா அம்மா என்ற மரியாதை தெரிந்தவள். பெருங்குடி வரை நடந்தே போய் வருகிறாள். ஷேர் ஆட்டோவுக்கு “அஞ்சு ரூபாய்” கொடுக்காமல் மீதம் பிடிப்பாள்.

 

சரோஜாவின் கெட்ட வார்த்தை வசவு தாங்க இயலாமையில் தான் கபாலி கட்சியில் சேர்ந்து வீட்டருகே கொடியை நாட்டினான் குப்பமே வயிரெறிய. லோகு தனக்கும் கட்சியில் ஒரு வேலை கிடைக்குமா என்று டில்லியிடம் கேட்டான். “தோடா.. என்னையே என் நைனா இட்டுக்கல. அவரு கொட்டிவாக்கமின்னு நெனெக்காத.. ராயபுரத்தில தான் பார்ட்டி வேலை செய்யிறாரு…”

 

“யக்காவ்..” பக்கத்து வீட்டு மல்லிகா உலுக்கி எழுப்பும் போது வெய்யில் தாழும் நேரம். “இன்னாக்கா ஊட்டைத் தொறந்து போட்டுக்கினு தூங்குறே?”

 

“இங்கே இன்னாக் கீது?… கட்சி ஆபீஸு போஸ்டரும் கார்டுந்தான் கீது…”

 

“திருவான்மியூர் கோயில்ல தேரு… வர்றியா பாத்துட்டு வரலாம்..”

 

“கொஞ்ச நேரத்தில சாந்தி வந்திரும்.. அத்தே இஸ்திக்கினு வாரேன்..”

 

மதியம் படுக்கும் போதே வயிற்றை சுருக்கென வலித்தது.இப்பொஓது கொக்கி போட்டு இழுப்பது போல வலிக்கிறது. நாளை காலை முதல் வேலையாக கார்ப்பொரேஸன் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும். வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன்பு சாந்தி நடக்கும் தூரமோ ஷேர் ஆட்டோ தூரமோ ஏதேனும் டாக்டர் இருபது ரூபாய்க்குள் வாங்குகிற ‘பொம்பள டாக்டர்’ இடம் அழைத்துச் செல்வாள். துணி தைக்கிற பாக்டரி வேலை வந்ததும் காலையில் போனால் இருட்டுவதற்குள் வேகு வேகு என ஓடி வந்து சேரவே சரியாக இருக்கிறது. அவள் வந்ததும் டீ வாங்கி வரச் சொல்ல வேண்டும்.

 

வயிற்று வலி சொடுக்கி சொடுக்கி இழுத்தது. சாந்திக்கு முன் பிறந்த ஒன்று வயிற்றில் தங்காமல் கலைந்து போனது. மாதா மாதம் என்றே ஒரு கணக்கு இல்லாமல் உதிரப் போக்கு. வயிற்று வலியும் அவ்வப் போது சுருக் சுருக்கென்று கொல்லுகிறது. சாந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கோ ராயப் பேட்டைக்கோ அழைத்துப் போவதாகச் சொல்லி இருக்கிறாள்.

 

இருட்டி விட்டது. எழுந்து மின் விளக்கை எரியச் செய்தாள். மணி என்ன இருக்கும்? வாசல் நிலைப் படியில் அமர்ந்து கொண்டாள். சாந்தி வந்தால் பசி பசி என்று பறப்பாள். எழுந்து சோறாக்க வேண்டும். எழுந்தால் இன்னும் வலிக்குமோ என பயமாக இருந்தது. பேப்பர் போடுகிற ராஜா கண்ணில் பட்டான். “டேய்.. மணி இன்னாடா?”

 

“ஏழரை ” வண்டியில் விரைந்தான்.

 

மணி ஏழரை ஆகி விட்டதா? என்ன ஆனாலும் சாந்தி இருட்டிய பிறகு வேலை முடித்து வர மாட்டாள்.

 

என்ன ஆகியிருக்கும்? நடந்து தானே வருகிறாள்? ஏனோ மீன் கூடையோடு அன்று ஒரு நாள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிணமாகக் கிடந்த பெண் நினைவுக்கு வந்தாள். அவளும் நடந்து தான் போய்க் கொண்டிருந்தவள்.

 

எப்படியும் சாந்தி வந்து விடுவாள். கூட வந்தவள் எவளாவது கடைவீதி, தேரு என்று இழுத்துப் போயிருப்பாள்.

 

தேக்ஸாவில் அரிசியைக் கழுவி அடுப்பில் சோறு வைத்தாள். டில்லி காஸ் வாங்கித் தந்ததில் சீக்கிரமே, கொதிக்க ஆரம்பித்தது. மறுபடி வாயிற்படியில் அமர்ந்து கொண்டாள்.

 

சினிமாப் பாட்டுச் சத்தம் பெரிதாகக் கேட்டது. ஹவுஸிங் போர்டு பக்கம் தேர்தல் கூட்டமாக இருக்க வேண்டும். ராயபுரத்தில் செய்கிற வேலையை கபாலி இங்கே செய்யக் கூடாதா? நாட் கணக்கில் வீட்டையே எட்டிப் பார்க்காமல் இருப்பதை விட அவ்வப் போது வந்து போகலாமே?

 

சோறு வெந்து விட்டது. கதவை மூடி விட்டு வெளியே நடந்தாள். வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது. மாட வீதியை நெருங்க நெருங்க நடை பாதைக் கடைக்காரர்கள் கூவி விற்கும் சத்தம் நெருங்கி வந்தது. இருப்பிலிருந்த சுருக்குப் பையைத் திறந்து காசு எடுத்து ஒரு கடையில் டீ சாப்பிட்டாள். டீக்கடை கடிகாரத்தில் மணி எட்டரையானது தெரிந்தது.

 

திரும்பி வீட்டை நெருங்க நெருங்க கால் துவண்டது. வீடு பூட்டியே இருந்தது. சாந்தி இன்னும் வரவில்லை. பாயை விரித்துப் படுத்தாள்.

 

சாந்தியுடன் வேலை பார்க்கிறவர்களில் இருவர் இந்த வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள். ஒருத்தி நீலாங்கரை. இன்னொருத்தி கேளம்பாக்கம். ஒருவர் டெலிபோன் நம்பரோ அட்ரஸோ தெரியாது. இது போல் அவள் தாமதமாக வந்ததுமில்லை. குப்பத்தில் இது பெரிய ரகளை ஆகி விடுமே? என்ன சொல்லி சமாளிக்கலாம் ? டில்லியை போன் பண்ணி வரச் சொல்லலாமா? வலி வெட்டி வெட்டி இழுத்தது. எவ்வளவு நேரம் தூங்கி இருப்பாள்? பின்னிரவில் புரண்டு படுத்த போது சாந்தி அருகில் இருந்தாள். அவள் தலையிலிருந்து மல்லிகைப்பூ வாசனையாய்.

 

by Swathi   on 04 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.