நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு, தெனாலிராமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
இந்த படத்தை யுவராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ஓராளவுக்கு ஓடியது. இதனைத் தொடர்ந்து ‘எலி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறாராம் நம்ம வைகை புயல். இப்படத்தையும் யுவராஜே இயக்குகிறார்.
எலி படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை எழுதும் பணியை இயக்குனர் யுவராஜ் முடித்துவிட்டார். இந்த கதை வடிவேலுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டதாம்.
1960-களில் நடக்கும் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் வடிவேலு உளவாளியாக நடிக்கிறாராம். தற்போது, இந்த படத்திற்கு கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வும் நடைபெற்று வருகிறது.
ஓஹோ பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராம்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
|