LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

வகர ஆகார வருக்கம்

 

வார மென்பெயர் மலைச்சார்பும் பகுத்தலும்
கடலு நீர்க்கரை யுங்கரு ஏழ்கிழமையும்
புரிவுறு மன்பையும் புகலுவர் புலவர். ....1353
வானெனும் பெயரே வானமும் பெருமையும்
மேகமும் மழையும் விளம்பப் பெறுமே. ....1354
வாருண மெனும்பெயர் நீருங் கடலும்
மேற்கு மெனவே விளம்புவர் புலவர். ....1355
வாடை யென்பெயர் வடகாற்றும் வீதியும்
சிற்றூர்ப் பெயரையுஞ் செப்பப் பெறுமே. ....1356
வாரி யெனும்பெயர் கடலு நீர் மிகுதியும்
நீரும் விளைவுங் கதவின் விகற்பமும்
மதிலின் சுற்றும் வருபுனல் மடையும்
வாய்தலுஞ் செல்வ வரத்தும் வழியும்
ஆனை படுக்கு மிடமு மாமே. ....1357
வாமன மெனும்பெயர் குறளுமோர் சமயமும்
திசைநிலைக் குஞ்சரத் தொன்றும் செப்புவர். ....1358
வான மெனும்பெயர் மழையு மாகாயமும்
உலர்மரப் பெயரதன் கனியையு முணர்த்துவர். ....1359
வாணி யெனும்பெயர் வார்த்தையின் பெயரும்
பாரதி பெயரும் பகழியு நடமுமாம். ....1360
வாச மெனும்பெயர் புள்ளின் சிறகும்
பூவின் மணமும் புடைவையின் பெயரும்
இருப்பிட முமென வியம்புவர் புலவர். ....1361
வாயி லென்பெயர் ஐம்புலனு மேதுவும்
கதவின் விகற்பமும் இடமும் கருதுவர். ....1362
வானி யெனும்பெயர் சேனையும் துவசமும்
மேற்கட்டி யுமென விளம்பப் பெறுமே. ....1363
வாளெனும் பெயரே வாளா யுதமும்
ஒளியு மெனவே யுரைத்தனர் புலவர். ....1364
வாலெனும் பெயரே பெருமையுஞ் சுத்தமும்
விலங்கின் வாலும் வெண்மை நிறமுமாம். ....1365
வாரணம் எனும்பெயர் மதகரிப் பெயரும்
சங்கும் கவசமும் தடுத்தலும் கோழியும்
கடலு மெனவே கருதப் பெறுமே. ....1366
வாங்கல் லெனும்பெயர் வளைத்தலுங் 
கொளலுமாம். ....1367
வாசி யெனும்பெயர் குழலிசை விகற்பமும்
குதிரையின் பெயரும் கூறப் பெறுமே. ....1368
வாலி யெனும்பெய ரலாயுதன் பெயரும்
கிட்கிந்தை யரசன் பெயரும் கிளத்துவர். ....1369
வாத மெனும்பெயர் தர்க்கமும் காற்றுமாம். ....1370
வாம மென்பெய ரிடப்பாலு மழகும்
குறளு மோர்சமையப் பெயருங் கூறுவர். ....1371
வாரெனும் பெயர்முலைக் கச்சு நெடுமையு
நீரு நேர்மையும் வகிர்தலும் நிகழ்த்துவர். ....1372
வாயெனும் பெயர்வரு வாயும் வாய்மையும்
வாய்தலும் வாயின் பெயரு மிடமுமாம். ....1373
வாகை யெனும்பெய ரொழுக்கமும் தவமும்
தருமக் கருமமுஞ் சால்பு மிகுதியும்
ஆள்வினை முதலாஞ் செய்கை நலமும்
கைவல முதலாங் கல்வி ஆண்மையும்
ஒருவரி லொருவர் வென்றியுமோர் மரமும்
பண்பு மிகையும் பகரப் பெறுமே. ....1374
வாழி யெனும்பெயர் வாழ்கவென் சொல்லும்
இடைச்சொலின் பெயரும் இயம்புவர் புலவர். ....1375

 

வார மென்பெயர் மலைச்சார்பும் பகுத்தலும்

கடலு நீர்க்கரை யுங்கரு ஏழ்கிழமையும்

புரிவுறு மன்பையும் புகலுவர் புலவர். ....1353

 

வானெனும் பெயரே வானமும் பெருமையும்

மேகமும் மழையும் விளம்பப் பெறுமே. ....1354

 

வாருண மெனும்பெயர் நீருங் கடலும்

மேற்கு மெனவே விளம்புவர் புலவர். ....1355

 

வாடை யென்பெயர் வடகாற்றும் வீதியும்

சிற்றூர்ப் பெயரையுஞ் செப்பப் பெறுமே. ....1356

 

வாரி யெனும்பெயர் கடலு நீர் மிகுதியும்

நீரும் விளைவுங் கதவின் விகற்பமும்

மதிலின் சுற்றும் வருபுனல் மடையும்

வாய்தலுஞ் செல்வ வரத்தும் வழியும்

ஆனை படுக்கு மிடமு மாமே. ....1357

 

வாமன மெனும்பெயர் குறளுமோர் சமயமும்

திசைநிலைக் குஞ்சரத் தொன்றும் செப்புவர். ....1358

 

வான மெனும்பெயர் மழையு மாகாயமும்

உலர்மரப் பெயரதன் கனியையு முணர்த்துவர். ....1359

 

வாணி யெனும்பெயர் வார்த்தையின் பெயரும்

பாரதி பெயரும் பகழியு நடமுமாம். ....1360

 

வாச மெனும்பெயர் புள்ளின் சிறகும்

பூவின் மணமும் புடைவையின் பெயரும்

இருப்பிட முமென வியம்புவர் புலவர். ....1361

 

வாயி லென்பெயர் ஐம்புலனு மேதுவும்

கதவின் விகற்பமும் இடமும் கருதுவர். ....1362

 

வானி யெனும்பெயர் சேனையும் துவசமும்

மேற்கட்டி யுமென விளம்பப் பெறுமே. ....1363

 

வாளெனும் பெயரே வாளா யுதமும்

ஒளியு மெனவே யுரைத்தனர் புலவர். ....1364

 

வாலெனும் பெயரே பெருமையுஞ் சுத்தமும்

விலங்கின் வாலும் வெண்மை நிறமுமாம். ....1365

 

வாரணம் எனும்பெயர் மதகரிப் பெயரும்

சங்கும் கவசமும் தடுத்தலும் கோழியும்

கடலு மெனவே கருதப் பெறுமே. ....1366

 

வாங்கல் லெனும்பெயர் வளைத்தலுங் 

கொளலுமாம். ....1367

 

வாசி யெனும்பெயர் குழலிசை விகற்பமும்

குதிரையின் பெயரும் கூறப் பெறுமே. ....1368

 

வாலி யெனும்பெய ரலாயுதன் பெயரும்

கிட்கிந்தை யரசன் பெயரும் கிளத்துவர். ....1369

 

வாத மெனும்பெயர் தர்க்கமும் காற்றுமாம். ....1370

 

வாம மென்பெய ரிடப்பாலு மழகும்

குறளு மோர்சமையப் பெயருங் கூறுவர். ....1371

 

வாரெனும் பெயர்முலைக் கச்சு நெடுமையு

நீரு நேர்மையும் வகிர்தலும் நிகழ்த்துவர். ....1372

 

வாயெனும் பெயர்வரு வாயும் வாய்மையும்

வாய்தலும் வாயின் பெயரு மிடமுமாம். ....1373

 

வாகை யெனும்பெய ரொழுக்கமும் தவமும்

தருமக் கருமமுஞ் சால்பு மிகுதியும்

ஆள்வினை முதலாஞ் செய்கை நலமும்

கைவல முதலாங் கல்வி ஆண்மையும்

ஒருவரி லொருவர் வென்றியுமோர் மரமும்

பண்பு மிகையும் பகரப் பெறுமே. ....1374

 

வாழி யெனும்பெயர் வாழ்கவென் சொல்லும்

இடைச்சொலின் பெயரும் இயம்புவர் புலவர். ....1375

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.