|
||||||||
வகர அகர வருக்கம் |
||||||||
வலவை யெனும்பெயர் வஞ்சப் பெண்ணொடு
வெறியாட் டாளனும் வல்லோன் பெயருமாம். ....1303
வருட மெனும்பெயர் மழையும் யாண்டுமாம். ....1304
வன்னி யெனும்பெயர் ஒருமரப் பெயரும்
நெருப்புங் கிளியும் பிரம சாரியுமாம். ....1305
வயலெனும் பெயரே செய்யும் வெளியும்
மருத நன்னிலமும் வழங்கப் பெறுமே. ....1306
வசியெ னும்பெயர் வாளும் வடுவும்
வசிகமுங் கூர்மையும் வழங்கப் பெறுமே. ....1307
வடவை யெனும்பெயர் வடவா வனலும்
குதிரைப் பெட்டையு மதகரிப் பிடியும்
பெண்பா லெருமைப் பெயரும் பேசுவர். ....1308
வயமெனும் பெயரே வலிமையும் புனலும்
புட்பொதுப் பெயரும் புகலுவர் புலவர். ....1309
வழியெனும் பெயரே மரபுந் தொடர்ச்சியும்
தருமமு மிடமுந் தனையனும் நடவையும். ....1310
வஞ்சனை யெனும்பெயர் மாயையும் பொய்யும்
வஞ்சகப் பெயரும் வழங்கப் பெறுமே. ....1311
வரையெனும் பெயரே மலையு மூங்கிலும்
அளவுங் கைவரையு மாகு மென்ப. ....1312
வசதி யெனும்பெயர் மனையு மூரும்
சிறப்புறு மிடமும் செப்புவர் புலவர். ....1313
வயவன் எனும்பெயர் வலிமான் குருவியும்
விறலோன் காதலன் பெயரும் விளம்புவர். ....1314
வயாவெனும் பெயரே வருத்தமும் விருப்பமும்
நோயும் கருப்பமும் நுவலுவர் புலவர். ....1315
வள்ளெனும் பெயரே வல்லி பற்றிரும்பும்
கூர்மையுங் காதும் வகிர்தலும் கூறுவர். ....1316
வண்டெனும் பெயர்கை வளையும் குற்றமும்
பூசமும் சுரும்பும் புரியும் வெண்பணிலமும்
மாதர் விளையாடலும் அம்பும் வழங்கும். ....1317
வட்ட மெனும்பெயர் பாரா வளையமும்
பரிசையுந் திகிரியும் பரந்த கைமணியும்
வட்ட வடிவுந் தடாகமு நீர்ச்சாலுந்
துகிலு மூர்கோளுஞ் சொல்லுவர் புலவர். ....1318
வஞ்சி யெனும்பெயர் மாதுமோர் கொடியும்
பாவின் விகற்பமும் போர்மேற் செலவும்
மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. ....1319
வடுகெனும் பெயரே யிந்தள விசையும்
மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. ....1320
வஞ்சக மெனும்பெயர் வாளுங் கபடுமாம். ....1321
வயிர மெனும்பெயர் வச்சிர மணியும்
மரத்தின் வயிரமும் வச்சிரா யுதமும்
சினமும் கூர்மையும் செப்புவர் புலவர். ....1322
வறிதெனும் பெயரே பயனில் வார்த்தையும்
சிறிதும் அறியாமையு மருகலுஞ் செப்புவர். ....1323
வம்பெனும் பெயரே மணமு மிடாவும்
நிலையின் மையு முலைக்கச்சும் புதுமையும். ....1324
வதுவை யெனும்பெயர் மணமும் கலியாணமும். ....1325
வழங்க லெனும்பெய ருலாவலு முரைத்தலும்
கொடுத்தலு மெனவே யறைந்தனர் புலவர். ....1326
வலித்த லெனும்பெயர் நினைத்தலும் பேசலும். ....1327
வலம்புரி யெனும்பெயர் சலஞ்சலப் பெயரும்
நந்தியா வத்தமு நவிலப் பெறுமே. ....1328
வலவ னெனும்பெயர் வெற்றி யாளனும்
தேர்ப்பா கனுமெனச் செப்புவர் புலவர். ....1329
வள்ள மென்பெயர் மரக்காலும் வட்டிலும். ....1330
வக்கிர மெனும்பெயர் மடங்கலும் கொடுமையும்
வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. ....1331
வசந்த னெனும்பெயர் மதனுந் தென்காலுமாம். ....1332
வரியெனும் பெயர்நெற் பொதுவும் வாரியும்
எழுத்துஞ் சுணங்கு மின்னிசைப் பாடலும்
குடியிறைப் பெயரும் சந்தித் தெருவும்
நீளமு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....1333
வனமெனும் பெயரே யூர்சூழ் சோலையும்
நீருந் துழாயும் காடு மிகுதியும்
ஈரமு மெனவே யியம்பப் பெறுமே. ....1334
வடக மெனும்பெயர் வடக வுடையும்
தோலின் பெயரும் சொல்லப் பெறுமே. ....1335
வங்க மெனும்பெயர் வழுதுணைப் பெயரும்
வெள்ளீ யத்தினொடு தோணியும் விளம்புவர். ....1336
வசந்த மெனும்பெயர் வசந்த காலமும்
புரந்தரன் மாளிகை மணமும் புகலுவர். ....1337
வல்லி யெனும்பெயர் கொடியும் ஆய்ப்பாடியும்
நிகளமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....1338
வல்லெனும் பெயரே வலிமையும் விரைவும்
சூது மெனவே சொல்லுவர் புலவர். ....1339
வடுவெனும் பெயரே குற்றமும் சிறுமையும்
தழும்புஞ் சுரும்பொடு சோம்புங் காய்ப்
பிஞ்சுமாம். ....1340
வண்ண மெனும்பெயர் வடிவு மோசையும்
நிறங்களின் விகற்பமு நிகழ்த்தப் பெறுமே. ....1341
வயினெனும் பெயரே வயிறிட மனையுமாம். ....1342
வண்மை யெனும்பெயர் வளமையும் கொடுத்தலும்
வலிமையும் புகழும் வாய்மையும் வழங்கும். ....1343
வசுவெனும் பெயரே பொன்னும் கனலும்
எண்வகை யமரரும் பசுவின் கன்றுமாம். ....1344
வலமெனும் பெயரே கனமும் வெற்றியும்
இடமும் வலப்பாற் பெயரு மியம்புவர். ....1345
வன்மை யெனும்பெயர் வன்மையுங் காடும்
விரைவு மெனவே விளம்புவர் புலவர். ....1346
வளமெனும் பெயரே வனப்பும் பலவகை
வளமும் பதவியும் வழங்கப் பெறுமே. ....1347
வள்ளி யென்பெயர் கைவளையுங் கொடியுமாம். ....1348
வட்க லெனும்பெயர் நாணமும் கேடுமாம். ....1349
வரைதல் எனும்பெயர் நீக்கமும் கொளலுமாம். ....1350
வடமெனும் பெயரால மரமும் கயிறும்
மணிவடப் பெயரும் வழங்குவர் புலவர். ....1351
வயமா வெனும்பெயர் வாசியும் யானையும்
சிங்கமும் புலியும் செப்பப் பெறுமே. ....1352
வலவை யெனும்பெயர் வஞ்சப் பெண்ணொடு வெறியாட் டாளனும் வல்லோன் பெயருமாம். ....1303
வருட மெனும்பெயர் மழையும் யாண்டுமாம். ....1304
வன்னி யெனும்பெயர் ஒருமரப் பெயரும் நெருப்புங் கிளியும் பிரம சாரியுமாம். ....1305
வயலெனும் பெயரே செய்யும் வெளியும் மருத நன்னிலமும் வழங்கப் பெறுமே. ....1306
வசியெ னும்பெயர் வாளும் வடுவும் வசிகமுங் கூர்மையும் வழங்கப் பெறுமே. ....1307
வடவை யெனும்பெயர் வடவா வனலும் குதிரைப் பெட்டையு மதகரிப் பிடியும் பெண்பா லெருமைப் பெயரும் பேசுவர். ....1308
வயமெனும் பெயரே வலிமையும் புனலும் புட்பொதுப் பெயரும் புகலுவர் புலவர். ....1309
வழியெனும் பெயரே மரபுந் தொடர்ச்சியும் தருமமு மிடமுந் தனையனும் நடவையும். ....1310
வஞ்சனை யெனும்பெயர் மாயையும் பொய்யும் வஞ்சகப் பெயரும் வழங்கப் பெறுமே. ....1311
வரையெனும் பெயரே மலையு மூங்கிலும் அளவுங் கைவரையு மாகு மென்ப. ....1312
வசதி யெனும்பெயர் மனையு மூரும் சிறப்புறு மிடமும் செப்புவர் புலவர். ....1313
வயவன் எனும்பெயர் வலிமான் குருவியும் விறலோன் காதலன் பெயரும் விளம்புவர். ....1314
வயாவெனும் பெயரே வருத்தமும் விருப்பமும் நோயும் கருப்பமும் நுவலுவர் புலவர். ....1315
வள்ளெனும் பெயரே வல்லி பற்றிரும்பும் கூர்மையுங் காதும் வகிர்தலும் கூறுவர். ....1316
வண்டெனும் பெயர்கை வளையும் குற்றமும் பூசமும் சுரும்பும் புரியும் வெண்பணிலமும் மாதர் விளையாடலும் அம்பும் வழங்கும். ....1317
வட்ட மெனும்பெயர் பாரா வளையமும் பரிசையுந் திகிரியும் பரந்த கைமணியும் வட்ட வடிவுந் தடாகமு நீர்ச்சாலுந் துகிலு மூர்கோளுஞ் சொல்லுவர் புலவர். ....1318
வஞ்சி யெனும்பெயர் மாதுமோர் கொடியும் பாவின் விகற்பமும் போர்மேற் செலவும் மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. ....1319
வடுகெனும் பெயரே யிந்தள விசையும் மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. ....1320
வஞ்சக மெனும்பெயர் வாளுங் கபடுமாம். ....1321
வயிர மெனும்பெயர் வச்சிர மணியும் மரத்தின் வயிரமும் வச்சிரா யுதமும் சினமும் கூர்மையும் செப்புவர் புலவர். ....1322
வறிதெனும் பெயரே பயனில் வார்த்தையும் சிறிதும் அறியாமையு மருகலுஞ் செப்புவர். ....1323
வம்பெனும் பெயரே மணமு மிடாவும் நிலையின் மையு முலைக்கச்சும் புதுமையும். ....1324
வதுவை யெனும்பெயர் மணமும் கலியாணமும். ....1325
வழங்க லெனும்பெய ருலாவலு முரைத்தலும் கொடுத்தலு மெனவே யறைந்தனர் புலவர். ....1326
வலித்த லெனும்பெயர் நினைத்தலும் பேசலும். ....1327
வலம்புரி யெனும்பெயர் சலஞ்சலப் பெயரும் நந்தியா வத்தமு நவிலப் பெறுமே. ....1328
வலவ னெனும்பெயர் வெற்றி யாளனும் தேர்ப்பா கனுமெனச் செப்புவர் புலவர். ....1329
வள்ள மென்பெயர் மரக்காலும் வட்டிலும். ....1330
வக்கிர மெனும்பெயர் மடங்கலும் கொடுமையும் வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. ....1331
வசந்த னெனும்பெயர் மதனுந் தென்காலுமாம். ....1332
வரியெனும் பெயர்நெற் பொதுவும் வாரியும் எழுத்துஞ் சுணங்கு மின்னிசைப் பாடலும் குடியிறைப் பெயரும் சந்தித் தெருவும் நீளமு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....1333
வனமெனும் பெயரே யூர்சூழ் சோலையும் நீருந் துழாயும் காடு மிகுதியும் ஈரமு மெனவே யியம்பப் பெறுமே. ....1334
வடக மெனும்பெயர் வடக வுடையும் தோலின் பெயரும் சொல்லப் பெறுமே. ....1335
வங்க மெனும்பெயர் வழுதுணைப் பெயரும் வெள்ளீ யத்தினொடு தோணியும் விளம்புவர். ....1336
வசந்த மெனும்பெயர் வசந்த காலமும் புரந்தரன் மாளிகை மணமும் புகலுவர். ....1337
வல்லி யெனும்பெயர் கொடியும் ஆய்ப்பாடியும் நிகளமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....1338
வல்லெனும் பெயரே வலிமையும் விரைவும் சூது மெனவே சொல்லுவர் புலவர். ....1339
வடுவெனும் பெயரே குற்றமும் சிறுமையும் தழும்புஞ் சுரும்பொடு சோம்புங் காய்ப் பிஞ்சுமாம். ....1340
வண்ண மெனும்பெயர் வடிவு மோசையும் நிறங்களின் விகற்பமு நிகழ்த்தப் பெறுமே. ....1341
வயினெனும் பெயரே வயிறிட மனையுமாம். ....1342
வண்மை யெனும்பெயர் வளமையும் கொடுத்தலும் வலிமையும் புகழும் வாய்மையும் வழங்கும். ....1343
வசுவெனும் பெயரே பொன்னும் கனலும் எண்வகை யமரரும் பசுவின் கன்றுமாம். ....1344
வலமெனும் பெயரே கனமும் வெற்றியும் இடமும் வலப்பாற் பெயரு மியம்புவர். ....1345
வன்மை யெனும்பெயர் வன்மையுங் காடும் விரைவு மெனவே விளம்புவர் புலவர். ....1346
வளமெனும் பெயரே வனப்பும் பலவகை வளமும் பதவியும் வழங்கப் பெறுமே. ....1347
வள்ளி யென்பெயர் கைவளையுங் கொடியுமாம். ....1348
வட்க லெனும்பெயர் நாணமும் கேடுமாம். ....1349
வரைதல் எனும்பெயர் நீக்கமும் கொளலுமாம். ....1350
வடமெனும் பெயரால மரமும் கயிறும் மணிவடப் பெயரும் வழங்குவர் புலவர். ....1351
வயமா வெனும்பெயர் வாசியும் யானையும் சிங்கமும் புலியும் செப்பப் பெறுமே. ....1352
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|