|
||||||||
வகர இகர வருக்கம் |
||||||||
விண்டெனும் பெயரே மேகமும் மூங்கிலும்
மாயனும் காற்றும் மலையும் விளம்புவர். ....1376
விசும்பெனும் பெயரே விண்ணுஞ் சுவர்க்கமும்
மேகமுந் திசையும் விளம்பப் பெறுமே. ....1377
விசைய மெனும்பெயர் வென்றியி னொடுசர்க்
கரையுங் கதிர்மண் டலமுங் கருதுவர். ....1378
விழவெனும் பெயரே மிதுன ராசியும்
உத்சவப் பெயரு முரைக்கப் பெறுமே. ....1379
விடமெனும் பெயரே நஞ்சுந் தேளும்
ஒருமரப் பெயரு முரைத்தனர் புலவர். ....1380
விடரெனும் பெயரே வெற்பின் முழையும்
கமருந் தவத்தோ ரிடமும் காடுமாம். ....1381
விளவெனும் பெயரே விளமரமும் கமருமாம். ....1382
விடங்க மெனும்பெயர் வீதிக் கொடியும்
ஆண்மையு மழகும் கொடுங்கையு மனையின்
முகடு மெனவே மொழிந்தனர் புலவர். ....1383
விடலை யெனும்பெயர் விறலோன் பெயரும்
தலைவன் பெயரும் சாற்றுவர் புலவர். ....1384
விழைந்தோ னெனும்பெயர் வேட்டோ ன் பெயரும்
கொண்கனு மெனவே கூறப் பெறுமே. ....1385
விலோத மெனும்பெயர் பெண்பான் மயிரும்
மியிர்ச்சுரு ளும்மென வழங்குவர் புலவர். ....1386
விறலெனும் பெயரே வென்றியும் பலமுமாம். ....1387
விதப்பெனும் பெயரே மிகுதியும் பெலமுமாம். ....1388
விறப்பெனும் பெயரே யச்சமும் பெலமும்
செறிவு மெனவே செப்புவர் புலவர். ....1389
வியப்பெனும் பெயர்சினக் குறிப்புஞ் சினமும்
அதிசயப் பெயரு மாகு மென்ப. ....1390
விழைச்செனும் பெயரே விருப்பு நல்லிளமையும்
புணர்ச்சி யனுபோகப் பெயரும் புகலுவர். ....1391
விடையெனும் பெயரெதிர் மொழியு மெருது
மேவுதற் பெயரும் இயம்புவர் புலவர். ....1392
விந்த மென்பெயர் தாமரையு மோர்கிரியுமாம். ....1393
விம்ம லெனும்பெயர் ஒலித்தலும் அழுகையும். ....1394
வியலெனும் பெயரே பெருமையும் அகலமும். ....1395
விபுல மெனும்பெயர் பெருமையும் அகலமும். ....1396
வில்லெனும் பெயரே மூல நாளும்
ஒளியும் வார்சிலையு முரைக்கப் பெறுமே. ....1397
விதியெனும் பெயரே பிரமனுந் தொழிலும்
இயல்புமூழ் முறையு மியம்பப் பெறுமே. ....1398
விருகோ தரனெனும் பெயர்யம ராயனும்
வீமன் பெயரும் விளம்பப் பெறுமே. ....1339
வித்த மெனும்பெயர் அறிவும் கனகமும்
பழித்தலு மெனவே பகரப் பெறுமே. ....1400
விளிவெனும் பெயரே வீதலும் கேடுமாம். ....1401
விருத்தி யெனும்பெயர் விரித்திடு பொருளும்
தன்றொழி லிலாபமும் ஆக்கத்தின் பெயருமாம். ....1402
விபூதி யெனும்பெயர் செல்வமு நீறும்
கொடுமையுந் தசையுங் குற்றமு நரகுமாம். ....1403
விடப மெனும்பெயர் மரக்கொம்புங் காளையும்
இடப ராசியும் இயம்புவர் புலவர். ....1404
விளரி யெனும்பெயர் வேட்கையின் மிகுதியும்
இளமையும் யாழிலோர் நரம்பும் யாழுமாம். ....1405
விழும மெனும்பெயர் சீர்மையும் சிறப்பும்
இடும்பையு மெனவே யியம்பப் பெறுமே. ....1406
விளரெனும் பெயரே வெளுப்பு மிளமையுங்
கொழுப்பு மெனவே கூறுவர் புலவர். ....1407
விண்ணெனும் பெயரே விசும்பு மேகமுமாம். ....1408
விரையெனும் பெயரே சாந்தும் தூமமும்
மணமு மெனவே வழங்கப் பெறுமே. ....1409
வியாள மெனும்பெயர் அரவும் புலியுமாம். ....1410
விலங்கெனும் பெயரே மிருகமுந் தளையுமாம். ....1411
விநாயக னெனும்பெயர் விறற்கரி முகனும்
அருகனும் புத்தனு மாகு மென்ப. ....1412
விண்டெனும் பெயரே மேகமும் மூங்கிலும் மாயனும் காற்றும் மலையும் விளம்புவர். ....1376
விசும்பெனும் பெயரே விண்ணுஞ் சுவர்க்கமும் மேகமுந் திசையும் விளம்பப் பெறுமே. ....1377
விசைய மெனும்பெயர் வென்றியி னொடுசர்க் கரையுங் கதிர்மண் டலமுங் கருதுவர். ....1378
விழவெனும் பெயரே மிதுன ராசியும் உத்சவப் பெயரு முரைக்கப் பெறுமே. ....1379
விடமெனும் பெயரே நஞ்சுந் தேளும் ஒருமரப் பெயரு முரைத்தனர் புலவர். ....1380
விடரெனும் பெயரே வெற்பின் முழையும் கமருந் தவத்தோ ரிடமும் காடுமாம். ....1381
விளவெனும் பெயரே விளமரமும் கமருமாம். ....1382
விடங்க மெனும்பெயர் வீதிக் கொடியும் ஆண்மையு மழகும் கொடுங்கையு மனையின் முகடு மெனவே மொழிந்தனர் புலவர். ....1383
விடலை யெனும்பெயர் விறலோன் பெயரும் தலைவன் பெயரும் சாற்றுவர் புலவர். ....1384
விழைந்தோ னெனும்பெயர் வேட்டோ ன் பெயரும் கொண்கனு மெனவே கூறப் பெறுமே. ....1385
விலோத மெனும்பெயர் பெண்பான் மயிரும் மியிர்ச்சுரு ளும்மென வழங்குவர் புலவர். ....1386
விறலெனும் பெயரே வென்றியும் பலமுமாம். ....1387
விதப்பெனும் பெயரே மிகுதியும் பெலமுமாம். ....1388
விறப்பெனும் பெயரே யச்சமும் பெலமும் செறிவு மெனவே செப்புவர் புலவர். ....1389
வியப்பெனும் பெயர்சினக் குறிப்புஞ் சினமும் அதிசயப் பெயரு மாகு மென்ப. ....1390
விழைச்செனும் பெயரே விருப்பு நல்லிளமையும் புணர்ச்சி யனுபோகப் பெயரும் புகலுவர். ....1391
விடையெனும் பெயரெதிர் மொழியு மெருது மேவுதற் பெயரும் இயம்புவர் புலவர். ....1392
விந்த மென்பெயர் தாமரையு மோர்கிரியுமாம். ....1393
விம்ம லெனும்பெயர் ஒலித்தலும் அழுகையும். ....1394
வியலெனும் பெயரே பெருமையும் அகலமும். ....1395
விபுல மெனும்பெயர் பெருமையும் அகலமும். ....1396
வில்லெனும் பெயரே மூல நாளும் ஒளியும் வார்சிலையு முரைக்கப் பெறுமே. ....1397
விதியெனும் பெயரே பிரமனுந் தொழிலும் இயல்புமூழ் முறையு மியம்பப் பெறுமே. ....1398
விருகோ தரனெனும் பெயர்யம ராயனும் வீமன் பெயரும் விளம்பப் பெறுமே. ....1339
வித்த மெனும்பெயர் அறிவும் கனகமும் பழித்தலு மெனவே பகரப் பெறுமே. ....1400
விளிவெனும் பெயரே வீதலும் கேடுமாம். ....1401
விருத்தி யெனும்பெயர் விரித்திடு பொருளும் தன்றொழி லிலாபமும் ஆக்கத்தின் பெயருமாம். ....1402
விபூதி யெனும்பெயர் செல்வமு நீறும் கொடுமையுந் தசையுங் குற்றமு நரகுமாம். ....1403
விடப மெனும்பெயர் மரக்கொம்புங் காளையும் இடப ராசியும் இயம்புவர் புலவர். ....1404
விளரி யெனும்பெயர் வேட்கையின் மிகுதியும் இளமையும் யாழிலோர் நரம்பும் யாழுமாம். ....1405
விழும மெனும்பெயர் சீர்மையும் சிறப்பும் இடும்பையு மெனவே யியம்பப் பெறுமே. ....1406
விளரெனும் பெயரே வெளுப்பு மிளமையுங் கொழுப்பு மெனவே கூறுவர் புலவர். ....1407
விண்ணெனும் பெயரே விசும்பு மேகமுமாம். ....1408
விரையெனும் பெயரே சாந்தும் தூமமும் மணமு மெனவே வழங்கப் பெறுமே. ....1409
வியாள மெனும்பெயர் அரவும் புலியுமாம். ....1410
விலங்கெனும் பெயரே மிருகமுந் தளையுமாம். ....1411
விநாயக னெனும்பெயர் விறற்கரி முகனும் அருகனும் புத்தனு மாகு மென்ப. ....1412
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|