LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

வகர ஏகார வருக்கம்

 

வேளெனும் பெயரே வேற்கும ரேசனும்
வில்வேளுஞ் சழுக்கி வேந்தரு மாமே. ....1429
வேட்டுவ னெனும்பெயர் வேடனு மகமும்
குழவிச் சிறுபுட் பெயருங் கூறுவர். ....1430
வேலை யெனும்பெயர் கடலுடன் கடற்கரை
பொழுது மெனவே புகன்றனர் புலவர். ....1431
வேணி யெனும்பெயர் விசும்புங் கோடீரமும். ....1432
வேள்வி யெனும்பெயர் வேள்விக் குண்டமும்
கொடுத்தலும் யாகமும் குறைவில் பூசனையும்
மகாநாட் பெயரும் வழங்குவர் புலவர். ....1433
வேலி யெனும்பெயர் ஊருங் காவலும்
விளைநில மும்பயிர் வேலியு மதிலுமாம். ....1434
வேய்த லெனும்பெயர் வேயுள் சூடுதலுமாம். ....1435
வேதிகை யெனும்பெயர் பலகையுந் திண்ணையும். ....1436
வேளாள ரென்பெயர் தனவசியர் பேரும்
தியாகியர் பெயருடன் சிறந்த காராளரும். ....1437
வேங்கை யெனும்பெயர் புலியுமோர் தருவும்
பொன்னு மெனவே புகன்றனர் புலவர். ....1438
வேலெனும் பெயரே மரத்தின் விகற்பமும்
படைக்கலப் பொதுவும் வேற்படையும் பகருவர். ....1439
வேளாண்மை யெனும்பெயர் மெய்யும் கொடையுமாம். ....1440
வேயெனும் பெயரே யொற்று மூங்கிலும்
உட்டுளை வடிவு முரைத்தனர் புலவர்.
வேணு வெனும்பெய ருட்டுளைப் பொருளும்
மூங்கிலும் வில்லும் வாளு மொழிகுவர். ....1441
வேழ மெனும்பெயர் வேழப் பூச்சியுங்
கரும்பு மூங்கிலுங் கொறுக்கச்சியும் யானையும். ....1442
வேசரி யெனும்பெயர் கோவேறு கழுதையும்
மூதேவி யூர்தியும் மொழியப் பெறுமே. ....1444
வேந்த னெனும்பெயர் வியாழமு மரசனும்
சந்திரன் பெயரும் தருகதி ரிரவியும்
இந்திரன் பெயரு மியம்புவர் புலவர். ....1445
வேலா வலய மெனும்பெயர் கடலும்
பூமியு மெனவே புகன்றனர் புலவர். ....1446
வேரெனும் பெயர்மர வேரும் வெயர்வுமாம். ....1447
வேதண்ட மென்பெயர் வெள்ளி மலையும்
பொருப்பின் பொதுவும் புகலப் பெறுமே. ....1448
வேல னெனும்பெயர் செவ்வேள் பெயரும்
வெறியாட் டாளன் பெயரு மியம்புவர். ....1449

 

வேளெனும் பெயரே வேற்கும ரேசனும்

வில்வேளுஞ் சழுக்கி வேந்தரு மாமே. ....1429

 

வேட்டுவ னெனும்பெயர் வேடனு மகமும்

குழவிச் சிறுபுட் பெயருங் கூறுவர். ....1430

 

வேலை யெனும்பெயர் கடலுடன் கடற்கரை

பொழுது மெனவே புகன்றனர் புலவர். ....1431

 

வேணி யெனும்பெயர் விசும்புங் கோடீரமும். ....1432

 

வேள்வி யெனும்பெயர் வேள்விக் குண்டமும்

கொடுத்தலும் யாகமும் குறைவில் பூசனையும்

மகாநாட் பெயரும் வழங்குவர் புலவர். ....1433

 

வேலி யெனும்பெயர் ஊருங் காவலும்

விளைநில மும்பயிர் வேலியு மதிலுமாம். ....1434

 

வேய்த லெனும்பெயர் வேயுள் சூடுதலுமாம். ....1435

 

வேதிகை யெனும்பெயர் பலகையுந் திண்ணையும். ....1436

 

வேளாள ரென்பெயர் தனவசியர் பேரும்

தியாகியர் பெயருடன் சிறந்த காராளரும். ....1437

 

வேங்கை யெனும்பெயர் புலியுமோர் தருவும்

பொன்னு மெனவே புகன்றனர் புலவர். ....1438

 

வேலெனும் பெயரே மரத்தின் விகற்பமும்

படைக்கலப் பொதுவும் வேற்படையும் பகருவர். ....1439

 

வேளாண்மை யெனும்பெயர் மெய்யும் கொடையுமாம். ....1440

 

வேயெனும் பெயரே யொற்று மூங்கிலும்

உட்டுளை வடிவு முரைத்தனர் புலவர்.

 

வேணு வெனும்பெய ருட்டுளைப் பொருளும்

மூங்கிலும் வில்லும் வாளு மொழிகுவர். ....1441

 

வேழ மெனும்பெயர் வேழப் பூச்சியுங்

கரும்பு மூங்கிலுங் கொறுக்கச்சியும் யானையும். ....1442

 

வேசரி யெனும்பெயர் கோவேறு கழுதையும்

மூதேவி யூர்தியும் மொழியப் பெறுமே. ....1444

 

வேந்த னெனும்பெயர் வியாழமு மரசனும்

சந்திரன் பெயரும் தருகதி ரிரவியும்

இந்திரன் பெயரு மியம்புவர் புலவர். ....1445

 

வேலா வலய மெனும்பெயர் கடலும்

பூமியு மெனவே புகன்றனர் புலவர். ....1446

 

வேரெனும் பெயர்மர வேரும் வெயர்வுமாம். ....1447

 

வேதண்ட மென்பெயர் வெள்ளி மலையும்

பொருப்பின் பொதுவும் புகலப் பெறுமே. ....1448

 

வேல னெனும்பெயர் செவ்வேள் பெயரும்

வெறியாட் டாளன் பெயரு மியம்புவர். ....1449

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.