|
||||||||
வகர ஏகார வருக்கம் |
||||||||
வேளெனும் பெயரே வேற்கும ரேசனும்
வில்வேளுஞ் சழுக்கி வேந்தரு மாமே. ....1429
வேட்டுவ னெனும்பெயர் வேடனு மகமும்
குழவிச் சிறுபுட் பெயருங் கூறுவர். ....1430
வேலை யெனும்பெயர் கடலுடன் கடற்கரை
பொழுது மெனவே புகன்றனர் புலவர். ....1431
வேணி யெனும்பெயர் விசும்புங் கோடீரமும். ....1432
வேள்வி யெனும்பெயர் வேள்விக் குண்டமும்
கொடுத்தலும் யாகமும் குறைவில் பூசனையும்
மகாநாட் பெயரும் வழங்குவர் புலவர். ....1433
வேலி யெனும்பெயர் ஊருங் காவலும்
விளைநில மும்பயிர் வேலியு மதிலுமாம். ....1434
வேய்த லெனும்பெயர் வேயுள் சூடுதலுமாம். ....1435
வேதிகை யெனும்பெயர் பலகையுந் திண்ணையும். ....1436
வேளாள ரென்பெயர் தனவசியர் பேரும்
தியாகியர் பெயருடன் சிறந்த காராளரும். ....1437
வேங்கை யெனும்பெயர் புலியுமோர் தருவும்
பொன்னு மெனவே புகன்றனர் புலவர். ....1438
வேலெனும் பெயரே மரத்தின் விகற்பமும்
படைக்கலப் பொதுவும் வேற்படையும் பகருவர். ....1439
வேளாண்மை யெனும்பெயர் மெய்யும் கொடையுமாம். ....1440
வேயெனும் பெயரே யொற்று மூங்கிலும்
உட்டுளை வடிவு முரைத்தனர் புலவர்.
வேணு வெனும்பெய ருட்டுளைப் பொருளும்
மூங்கிலும் வில்லும் வாளு மொழிகுவர். ....1441
வேழ மெனும்பெயர் வேழப் பூச்சியுங்
கரும்பு மூங்கிலுங் கொறுக்கச்சியும் யானையும். ....1442
வேசரி யெனும்பெயர் கோவேறு கழுதையும்
மூதேவி யூர்தியும் மொழியப் பெறுமே. ....1444
வேந்த னெனும்பெயர் வியாழமு மரசனும்
சந்திரன் பெயரும் தருகதி ரிரவியும்
இந்திரன் பெயரு மியம்புவர் புலவர். ....1445
வேலா வலய மெனும்பெயர் கடலும்
பூமியு மெனவே புகன்றனர் புலவர். ....1446
வேரெனும் பெயர்மர வேரும் வெயர்வுமாம். ....1447
வேதண்ட மென்பெயர் வெள்ளி மலையும்
பொருப்பின் பொதுவும் புகலப் பெறுமே. ....1448
வேல னெனும்பெயர் செவ்வேள் பெயரும்
வெறியாட் டாளன் பெயரு மியம்புவர். ....1449
வேளெனும் பெயரே வேற்கும ரேசனும் வில்வேளுஞ் சழுக்கி வேந்தரு மாமே. ....1429
வேட்டுவ னெனும்பெயர் வேடனு மகமும் குழவிச் சிறுபுட் பெயருங் கூறுவர். ....1430
வேலை யெனும்பெயர் கடலுடன் கடற்கரை பொழுது மெனவே புகன்றனர் புலவர். ....1431
வேணி யெனும்பெயர் விசும்புங் கோடீரமும். ....1432
வேள்வி யெனும்பெயர் வேள்விக் குண்டமும் கொடுத்தலும் யாகமும் குறைவில் பூசனையும் மகாநாட் பெயரும் வழங்குவர் புலவர். ....1433
வேலி யெனும்பெயர் ஊருங் காவலும் விளைநில மும்பயிர் வேலியு மதிலுமாம். ....1434
வேய்த லெனும்பெயர் வேயுள் சூடுதலுமாம். ....1435
வேதிகை யெனும்பெயர் பலகையுந் திண்ணையும். ....1436
வேளாள ரென்பெயர் தனவசியர் பேரும் தியாகியர் பெயருடன் சிறந்த காராளரும். ....1437
வேங்கை யெனும்பெயர் புலியுமோர் தருவும் பொன்னு மெனவே புகன்றனர் புலவர். ....1438
வேலெனும் பெயரே மரத்தின் விகற்பமும் படைக்கலப் பொதுவும் வேற்படையும் பகருவர். ....1439
வேளாண்மை யெனும்பெயர் மெய்யும் கொடையுமாம். ....1440
வேயெனும் பெயரே யொற்று மூங்கிலும் உட்டுளை வடிவு முரைத்தனர் புலவர்.
வேணு வெனும்பெய ருட்டுளைப் பொருளும் மூங்கிலும் வில்லும் வாளு மொழிகுவர். ....1441
வேழ மெனும்பெயர் வேழப் பூச்சியுங் கரும்பு மூங்கிலுங் கொறுக்கச்சியும் யானையும். ....1442
வேசரி யெனும்பெயர் கோவேறு கழுதையும் மூதேவி யூர்தியும் மொழியப் பெறுமே. ....1444
வேந்த னெனும்பெயர் வியாழமு மரசனும் சந்திரன் பெயரும் தருகதி ரிரவியும் இந்திரன் பெயரு மியம்புவர் புலவர். ....1445
வேலா வலய மெனும்பெயர் கடலும் பூமியு மெனவே புகன்றனர் புலவர். ....1446
வேரெனும் பெயர்மர வேரும் வெயர்வுமாம். ....1447
வேதண்ட மென்பெயர் வெள்ளி மலையும் பொருப்பின் பொதுவும் புகலப் பெறுமே. ....1448
வேல னெனும்பெயர் செவ்வேள் பெயரும் வெறியாட் டாளன் பெயரு மியம்புவர். ....1449
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|