|
||||||||
வைகாசி விசாகம் |
||||||||
வைகாசி விசாகம் ஜோதிடர் பலராமன்
தமிழ் மாதங்களின் பெயர் அமைந்ததே சில காரணங்களின் அடிப்படையில் தான். ஒவ்வொரு மாதத்தின் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயர் ஆகும். உதாரணமாக சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரம் சித்திரை ஆகும். இதைப்போலவே வைகாசி மாதம் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரம் விசாகம் ஆகும். வைசாகம் என்பது மருவி விசாகம் என்றும் வைகாசி என்றும் அழைக்கப்படுகிறது. விசாகம் நட்சத்திர நாளில் தான் சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளை அக்னி தேவன் கங்கை ஆற்றில் சேர்க்க கிருத்திகைப்பெண்கள் ஆறு பேர் அந்த ஆறு தீப்பொறிகளையும் ஒன்று சேர்த்து வளர்க்க ஆறுமுகனாக வளர்ந்தார். விசாகம் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரக்கூட்டம் ஆகும். இந்த நட்சத்திர நாள் முருகனை வணங்கி அவனருளைப்பெற மிகச் சிறந்த நாளாகும். இந்த வருடம் ஜூன் மாதம் 3-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று வைகாசி விசாகம் ஆகும். இந்தத் திருநாளில் தேவராய சுவாமிகள் இயற்றிய "கந்த சஷ்டி கவசம்" படிப்பது அளவற்ற நற்பலன்கள் தரும். "ஓம் சரவண பவ" என்று 108 முறை சொல்வதும் நன்மை தரும். இந்தத் திருநாளில் புதுமணத் தம்பதியர் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து, உடன் தேனும் தினை மாவும் நிவேதனம் செய்தால் அறிவும் அழகும் வீரமும் நிறைந்த குழந்தை பிறக்கும். மேலும் இந்த அர்ச்சனை செய்வதால் எதிர்ப்புக்களையும் எதிரிகளையும் வெல்லும் திறனும் தைரியமும் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் யோகமும் ஏற்படும். மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும். அறிவு பெருகும். ஞானம் கிடைக்கும். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிடைக்கும்.
வைகாசி விசாகத்தில் ஆறுமுகனை வணங்குவோம்! முருகனின் திருவருளைப் பெறுவோம்!!
வைகாசி விசாகம் ஜோதிடர் பலராமன்
தமிழ் மாதங்களின் பெயர் அமைந்ததே சில காரணங்களின் அடிப்படையில் தான். ஒவ்வொரு மாதத்தின் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயர் ஆகும். உதாரணமாக சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரம் சித்திரை ஆகும். இதைப்போலவே வைகாசி மாதம் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரம் விசாகம் ஆகும். வைசாகம் என்பது மருவி விசாகம் என்றும் வைகாசி என்றும் அழைக்கப்படுகிறது. விசாகம் நட்சத்திர நாளில் தான் சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளை அக்னி தேவன் கங்கை ஆற்றில் சேர்க்க கிருத்திகைப்பெண்கள் ஆறு பேர் அந்த ஆறு தீப்பொறிகளையும் ஒன்று சேர்த்து வளர்க்க ஆறுமுகனாக வளர்ந்தார். விசாகம் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரக்கூட்டம் ஆகும். இந்த நட்சத்திர நாள் முருகனை வணங்கி அவனருளைப்பெற மிகச் சிறந்த நாளாகும். இந்த வருடம் ஜூன் மாதம் 3-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று வைகாசி விசாகம் ஆகும். இந்தத் திருநாளில் தேவராய சுவாமிகள் இயற்றிய "கந்த சஷ்டி கவசம்" படிப்பது அளவற்ற நற்பலன்கள் தரும். "ஓம் சரவண பவ" என்று 108 முறை சொல்வதும் நன்மை தரும். இந்தத் திருநாளில் புதுமணத் தம்பதியர் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து, உடன் தேனும் தினை மாவும் நிவேதனம் செய்தால் அறிவும் அழகும் வீரமும் நிறைந்த குழந்தை பிறக்கும். மேலும் இந்த அர்ச்சனை செய்வதால் எதிர்ப்புக்களையும் எதிரிகளையும் வெல்லும் திறனும் தைரியமும் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் யோகமும் ஏற்படும். மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும். அறிவு பெருகும். ஞானம் கிடைக்கும். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிடைக்கும்.வைகாசி விசாகத்தில் ஆறுமுகனை வணங்குவோம்! முருகனின் திருவருளைப் பெறுவோம்!!
|
||||||||
by Swathi on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|