உலக தாராள மயம், புவி வெப்பமடைதல், பருவ நிலை மாற்றங்களால், தமிழக விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், விவசாயிகள் படும்பாடு, அவர்களின் தற்கொலை உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துகிறது, மூன்றாம் உலகப் போர்' நாவல். இதனால், இலக்கியச் சிந்தனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏப்.,12ம் தேதி நடக்கும் விழாவில், விருது அளிக்கப்படும். இவ்வாறு இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ப.லட்சுமணன் கூறியுள்ளார்.
கடன் சுமையால், தற்கொலை செய்துகொண்ட 11 தமிழக விவசாயிகளின் குடும்பங்களுக்கு, விருது வழங்கும் நாளில், ஒரு லட்சம் வழங்கப்படும், என்று தெரிவித்துள்ளார், வைரமுத்து.
|