LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

டெல்டாவில்  பசுமை தீபாவளி

டெல்டாவில்  பசுமை தீபாவளி

சோமு இரவிச்சந்திரன்,சிங்கப்பூர்



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவிலுள்ள மூவாநல்லூர், ராஜாளிக்குடிக்காடு, அமரபாகம், வெட்டிக்காடு, பருத்திக்கோட்டை, எட கீழையூர், எட மேலையூர், எட அன்னவாசல், புள்ளவராயன்குடிக்காடு மற்றும் வடுவூர் கிராமங்களில்  கடந்த அக்டோபர் 28-ம் தேதி “பாதை” அறக்கட்டளை உதவியுடன் “நமது கிராமம்” இளைஞர்கள் சமீபத்தில் புனரமைக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகள் மற்றும் வாய்க்கால் கரைகளில் 2000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு தீபாவளி பண்டிகையைப் பசுமை தீபாவளியாகக் கொண்டாடினார்கள். 

 

கடந்த கோடைக்காலத்தில் இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நமது கிராமம் என்ற அமைப்பை உருவாக்கிப் பொதுமக்கள் ஆதரவுடன்  குளம், குட்டை, வாய்க்கால்களைத் தூர்வாரி, கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு 25-க்கும் மேற்பட்ட குளங்களைக் காவிரி நீரால் நிரப்பினார்கள்.

 

“நமது கிராமம்” இளைஞர்களின் இந்தச் செயலை வியந்து பார்த்த சிங்கப்பூரைச் சேர்ந்த “பாதை” அறக்கட்டளை இயக்குநர்கள் திரு.இரவிச்சந்திரன் மற்றும் திருமதி.கீதா ரவிச்சந்திரன் ஆகியோர் மீண்டும் இந்த நீர் நிலைகள் வடிவம் மாறாமலும், ஆக்கிரமிக்கப்படாமலும் காக்க உருவாக்கிய திட்டமே “பசுமை தீபாவளி 

 

மூவாநல்லூரில் தொடங்கி வடுவூர் வரை உள்ள பத்துக் கிராமங்களிலுள்ள நீர் நிலைகளைச் சுற்றி “நமது கிராமம்” இளைஞர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு குளக்கரையிலும் நன்கு வளர்ந்த இரண்டு ஆலமரக்கன்றுகள், இரண்டு அரசமரக்கன்றுகள் மேலும் வேங்கை, நீர்மருது, புளியம், வாதாம், சென்பகம், மகிழம் என 15 வகையான 2000 மரக்கன்றுகள் ரூ 5 லட்சம் செலவில் நடப்பட்டன. மரக்கன்றைச் சுற்றி நான்கு உயரமான மரக்கம்புகள் நட்டு, பின்னர் அதைச் சுற்றி அழுத்தமான பாதுகாப்புக்  கூண்டுகள் என மிக பாதுகாப்பான முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளுக்கு ஒரு வருடம் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி, மரக்கன்றுகளைக்  கவாத்து செய்து பராமரிக்க மாத ஊதியத்தில் பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

 

இந்தத் தீபாவளிக்குக் குளக்கரைகளும், கண்மாய்களும் புத்தாடை கட்டி நிற்பது போல் அழகாகக் காட்சி தருகிறது. தீபாவளி கொண்டாடச் சொந்த ஊருக்கு வந்திருந்த மக்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாது இப்பணியில் மகிழ்வுடன் பங்கேற்று மன நிறைவுடன்  தீபாவளியைப் பசுமை தீபாவளியாகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். 

 

இந்த நற்பணிக்கு “பாதை” அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு  “நமது கிராமம்” இளைஞர்கள் மற்றும் கிராமவாசிகள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள்.

by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.