|
|||||
மதுரை மாநகரில் முதல் உலகத் தமிழிசை மாநாடு... |
|||||
மதுரை மாநகரில் முதல் உலகத் தமிழிசை மாநாடு... டிசம்பர் 14,15 தேதிகளில் மதுரையில் நடைபெறவிருக்கும் முதல் உலகத் தமிழிசை மாநாட்டின் திட்டமிடல் , ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர்.கோ.விசயராகவன் தலைமையில் , இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலரும், இணைப் பேராசிரியருமான முனைவர்.கு.சிதம்பரம் அவர்கள் ஒருங்கிணைப்பில் மிகச்சிறப்பாக நடந்துவருகிறது. இதற்காகத் தமிழிசை குறித்த தலைப்புகளில் உலகெங்கிலுமிருந்து வந்துள்ள ஆய்வுக்கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து நூலாக வெளியிடும் பணிகள் மிகவும் துரிதமாக நடந்துவருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பழக்கத்தில் இருந்த தொன்மையான இசை வடிவங்கள், கருவிகள், கலைஞர்கள், இசை நடனங்கள், ஆய்வு நூல்கள், ஆய்வாளர்கள், இசைக்கலைஞர்கள் என்று பல்வேறு கோணங்களில் அடையாளம் கண்டு தொகுக்கக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதற்காகத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன் அவர்கள் முன்னிலையில் ஒரு ஆலோசனைக்கூட்டமும், திரு.வி.ஜி.சந்தோசம் , முனைவர்.சீர்காழி சிவசிதம்பரம் உள்ளிட்ட பலரை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டமும், கவிஞர்.அறிவுமதி, இன்னிசையேந்தல் திருபுவனம் குரு.ஆத்மநாதன், இசைக்கல்லூரி முதல்வர்கள், வலைத்தமிழ் ஆசிரியர் திரு.ச.பார்த்தசாரதி, பத்திரிகையாளர் திரு.அக்கினி பாரதி, இசை அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரை அழைத்து மற்றொரு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் இயக்குநர் முனைவர்.கோ.விசயராகவன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சிதம்பரம் குப்புசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முனைவர்.சிதம்பரம் குப்புசாமி, திரு.அக்கினி பாரதி ஆகியோர் கொண்ட குழு பல இசை ஆர்வலர்கள், புரவலர்களைச் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் பெருமைமிகு விழா மதுரையில் ஒரு மிகப்பெரிய வெற்றிவிழாவாக, அரசு விழாவாக நடந்து இசைத்தமிழுக்கு ஏற்றம் கொடுக்கும் என்பதில் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு வெற்றிபெறுவதற்குக் கடுமையாக உழைத்துவரும் , திட்டமிட்டுவரும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர்.கோ.விசயராகவன் , ஒருங்கிணைப்பு செயலர் முனைவர்.கு.சிதம்பரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு அனைவரும் இசைவரலாற்றில் இடம்பெறுவார்கள்.
உலகம் முழுதும் தமிழிசை வளர்ச்சியில் ஊக்கம் கொண்டுள்ள, முத்தமிழை போற்றும் தமிழ்ச்சங்கங்களும், தமிழ்த்தொண்டு செய்யும் அனைவரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குத் தங்கள் வாழ்த்துகளையும் , ஒத்துழைப்பையும் நேரடியாகத் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்... |
|||||
by Swathi on 11 Dec 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|