தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் சித்தா இருக்கை
பிற நாடுகளில் குறிப்பாகத் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் சித்தா இருக்கை அமைப்பதற்கு அரசு ஏதேனும் முயற்சி மேற்கொண்டுள்ளதா? அல்லது முன்மொழிவு ஏதேனும் உள்ளதா?அப்படி ஏதேனும் இருந்தால் அது குறித்த விபரங்களையும் எந்தக் காலத்திற்குள் சித்தா இருக்கை அமைக்க அரசு விரும்புகிறது என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் கேள்விக்கு ஆயுஷ் அமைச்சர் அளித்த பதிலின் சாரம் என்னவெனில் ITEC எனும் மத்தியத் தொழினுட்ப மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் மூலம் மத்திய ஆயுஷ் துறை சித்த மருத்துவத்தை மலேசியாவில் மேம்படுத்த , மலேசியாவில் "சுங்காய் பூலோ மருத்துவமனையில்" ஒரு சித்த மருத்துவரை நியமித்து, வர்ம சிகிச்சை அளிக்கிறது. மத்திய அரசின் ஆயுஷ் துறையின் கீழ் இயங்கும் மத்திய சித்த ஆராய்ச்சி கழகம் சிங்கப்பூர் தேசிய நல ஆய்வுக்கழகத்திலும், சிங்கப்பூர் சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பிலும், மலேசியா "மாக்சா" பல்கலைக்கழகத்திலும் தொடர்பு கொண்டு, "சித்தா இருக்கை" அமைக்க விவரங்கள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து விருப்ப கோரிக்கை வந்ததும் மத்திய சித்தா கவுன்சில் அதற்கான நடவடிக்கையில் இறங்கும்.
மேலும் இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்தா பிரிவிற்கு நிதி உதவி அளிக்கிறதோடு மட்டுமல்லாமல் மலேசிய அரசுடன்செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பத்தம் படி , சித்த மருந்துகளை அங்கு பதிவு செய்து விற்பனை செய்யவும்,மலேசிய மாணவர்களைச் சித்த மருத்துவம் படிக்க முழு உதவியும் செய்கிறது.அதன் மூலம் வருடத்திற்கு 5 மாணவர்களைப் படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ் நிறுவனங்கள்,மற்றும் ஆயுஷ் மருந்து செய் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை சர்வதேசக் கண்காட்சிகள் / மாநாடுகள் / பட்டறைகள் / கருத்தரங்குகள் / சாலை காட்சிகள் / வர்த்தக கண்காட்சிகள் மேலும் பலவற்றில் பங்கேற்கவும் , மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆயுஷ் துறை முனைப்பெடுத்து வருகிறது. கூடவே வெளி நாடுகளில் சித்த மருந்துகளை ஆயுஷ் மருத்துவமுறைகளைப் பதியவும், வெளிநாட்டிலுள்ள மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களான யு.எஸ்.எஃப்.டி.ஏ / ஈ.எம்.இ.ஏ / யுகே-எம்.எச்.ஆர்.ஏ / என்.எச்.பி.டி (கனடா) / டிஜிஏ. போன்றவற்றுடன் கலந்து சித்தா தயாரிப்புகள் பதிவு செய்திட முனைப்பு எடுப்பதற்கும் சித்தா உள்ளிட்ட ஆயுஷ் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் சலுகைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மத்திய அரசின் ஆயுஷ் துறை உலகெங்கும் ஆயுஷ் இருக்கைகளை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. "சித்தா இருக்கை"க்கான விருப்பக் கோரிக்கை, இன்னும் பிற நாடுகளிடம் இருந்து இதுவரை வரவில்லை. மத்திய அரசு அதற்குத் தொடர்ந்து முயன்று வருகிறது என்பது தான்
|