மாமன்னன் இராஜராஜ சோழனின் 1034-வது சதய விழா
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1034 ஆவது சதய விழா தஞ்சையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது . ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிடக் கலையிலும் இராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாகத் திகழ்கிறது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்படப் பலர் பங்கேற்றனர். அதன் பின், ராஜராஜசோழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சிகள், பட்டிமன்றங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆட்சியர் துவக்கி வைத்தார். இராஜராஜ சோழனின் சதய விழாவால் தஞ்சை நகரமே விழாக் கோலம் பூண்டது.
|