வானூர்திகளில் தமிழ் அறிவிப்பு இருக்க வேண்டும் என்பது பலரது ஏக்கம்! நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்ற திரு.வைகோ
விமான சேவை என்பது சாதாரண மக்களும், விவசாயிகளும், தொழிலாளிகளாகப் பல நாடுகளுக்குச் செல்பவர்களும் பயன்படுத்தும் நிலையில் இன்று வளர்ந்திருப்பதால், இந்திய விமானங்களில் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தியில் இருப்பதும், அந்தந்த மாநில மொழிகளில் இல்லாமல் இருப்பதும் அவர்களுக்கு அறிவிப்பின் நோக்கம் நிறைவேறாமல் போகும் என்றும், சிங்கப்பூர், இலங்கை, லுப்டான்சா, கத்தார் உள்ளிட்ட பல விமான சேவைகள் வந்திறங்கும், புறப்படும் விமான நிலையத்திற்கு ஏற்ப மக்கள் பேசும் மொழிகளில் அறிவிப்புகளைச் செய்யும் நிலையில், இந்திய விமானங்கள் அவ்வாறு செய்வதில்லை என்பதை நாடாளுமன்ற அவையின் கவனத்திற்குக் கொண்டுசென்றார். அதை ஏற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அதை ஏற்றுக்கொண்டு ஆவனசெய்ய உரிய துறைக்கு அறிவுறுத்தினார். இது நீண்டநாள் கோரிக்கையாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுவந்த நிலையில், இது மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது.
|