LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

இணையம்வழி இனி தமிழ்மொழியை கற்பது எளிது.. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக புதிய இணையத் தமிழ்ப்பள்ளி தொடக்கம்..

இன்றைய பன்னாட்டு வாழ்வியல் சூழலில் தமிழர்கள் பல நாடுகளுக்குக் குடிபெயர்கிறார்கள். வாழ்வியல் போக்கில் பல நாட்டினருடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருப்பினும், செம்மொழியான நம் தமிழ்மொழியை குழந்தைகள் பேசவேண்டும், படிக்கவேண்டும், அதன் தொன்மையை அறியவேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். ஹார்வார்ட் உள்ளிட்ட தமிழ் ஆய்வு இருக்கைகள் உலகெங்கும் அமைந்துவரும் சூழலில், உலகின் பிறமொழி பேசுவோர் பலரும் தமிழைக் கற்க முன்வருகிறார்கள்.


பறந்து விரிந்த இந்த உலகின் பல திசைகளிலும் பயணிக்கும் அனைவருக்கும் அருகில் தமிழாசிரியரோ, தமிழ்ப்பள்ளியோ இருப்பதில்லை. இதனால் அவர்களின் குழந்தைகள் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல தமிழ் மொழியிடமிருந்தும் விலகி, தமிழ் கற்க ஆர்வம் இருந்தாலும், வாய்ப்புகள் இல்லாத சூழல் உள்ளது.


சில தலைமுறைகளுக்கு முன்பு பல தீவுகளுக்கு வியாபாரம், பணி நோக்கங்களுக்காகச் சென்ற தமிழர்கள் இன்றும் தமிழில் பெயர் வைத்துள்ளார்கள், ஆனால் தமிழ் பேசத்தெரிவதில்லை. இதற்கு என்ன தீர்வு என்று வலைத்தமிழ் ஆசிரியர் குழுவும், தமிழ் அறிஞர் குழுவும் ஆராய்ந்து, நமக்கு வந்த பல மின்னஞ்சல்களைப் பரிசீலித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இணையவழியில் தமிழ் சொல்லிக்கொடுக்க ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதை மேலும் மேம்படுத்தி, எளிமையாக்கி அந்தந்த நாட்டின் நேரங்களுக்கு ஏற்ப, தமிழகத்திலிருந்து ஆசிரியர்கள் வகுப்பு எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பாளராக திருமதி. உமா தென்னரசு என்ற தமிழ் ஆசிரியரையும், அவருக்கு உறுதுணையாக ஒரு தமிழ்க்கல்வி ஆலோசனைக் குழுவையும் வலைத்தமிழ் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டமைப்பு புதிய பாடத்திட்டத்தினை உருவாக்காமல், இதுவரை உருவாகியுள்ள பாடத்திட்ட அமைப்புகளுடன் தொடர்புகொண்டு அந்தந்த நாட்டிற்கு உகந்த தமிழ் பாடத்திட்டத்தினையே நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தந்த நாடுகளில் அருகில் தமிழ்ப்பள்ளிகள் இருந்தால் அங்கே நேரில் சென்று படிக்கவும், வாய்ப்பிருந்தால் தன்னார்வலர்கள் இணைந்து பள்ளியாக கட்டமைந்து சொல்லிக்கொடுக்கவும், எந்த வாய்ப்பும் இல்லாதவர்கள் இணையம் வழி கற்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


இனி, தமிழ் கற்பது என்பது எளிது. தனி மனிதராகவோ, குழுவாகவோ, அமைப்புகளோ தமிழ் கற்க விரும்பினால் www.LearnTamil.ValaiTamil.com -ல் சென்று தகவல்களை பதிவுசெய்யலாம் அல்லது LearnTamil@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளலாம். உடனடியாக இலவச சோதனை வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, நாள், நேரம் முடிவுசெய்யப்பட்டு, தனி ஆசிரியர் ஒதுக்கப்படுவார்.

 

நன்றி,
வலைத்தமிழ்.காம் 
www.LearnTamil.ValaiTamil.Com

by Swathi   on 14 Feb 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
10-Feb-2020 06:38:56 அ‌.மா.முனியப்பன் said : Report Abuse
ஐயா வணக்கம்....நான் அரசு பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறேன்....நான் வலைத்தமிழ் வலைதலம் மூலமாக உலகம் முழுக்க உள்ள நமது தமிழை கற்பித்தல் பணி செய்ய ஆவலாக உள்ளேன்...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.