|
|||||
காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் வாழ்த்து அட்டைகள் விற்பனை மந்தம்! |
|||||
காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் வாழ்த்து அட்டைகள் விற்பனை மந்தமாக உள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மாநில அளவிலும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவை நாடு முழுவதும் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய கலச்சார பரவலின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் காதலர் தின கொண்டாட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. இக்கொண்டாட்டத்தின் ஆரம்ப காலங்களில் இளைஞர்கள் தங்களது ஜோடிகளுக்கு பரிசளிப்பதற்காக வாழ்த்து அட்டை கடைகளை நோக்கி படையெடுத்து வந்தனர். ஆனால் தற்போது இதுபோன்ற கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக கணிசமாக குறைந்து உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைவரது கைகளிலும் அலைபேசிகள் தவழ்கின்றன. மேலும் இளைஞர்கள் கவனம் இணையத்தின் மீதும் திரும்பி உள்ளது. இதன்மூலம் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள முடிகிறது. மேலும் செலவினமும் குறைவு. மிக முக்கியமாக இதன் பரிமாற்றங்கள் பிறர் கவனத்திற்கு செல்லும் வாய்ப்பின்றி ரகசியமாகவே இருக்கும் என்பது போன்ற காரணங்களால் வாழ்த்து அட்டை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இருந்த போதிலும், வாழ்த்து அட்டைகள் பல ஆண்டுகளை கடந்து ஞாபகங்களை தாங்கி நிற்கும் நினைவு சின்னமாக இருப்பதால் வாழ்த்து அட்டைகளை வாங்கி தங்களது காதலை வெளிப்படுத்தும் காதலர்களின் எண்ணிக்கை இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. வாழ்த்து அட்டை பிரியர்களுக்காக வாழ்த்து அட்டையை திறந்தால் இசை ஒலிப்பது, பொம்மை நடனமாடுவது உள்ளிட்ட பல்வேறு வகையான வாழ்த்து அட்டைகள் ரூ.50ல் துவங்கி ரூ.600 வரை விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தது. |
|||||
by Mani Bharathi on 06 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|