LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் வாழ்த்து அட்டைகள் விற்பனை மந்தம்!

காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் வாழ்த்து அட்டைகள் விற்பனை மந்தமாக உள்ளது. 

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மாநில அளவிலும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவை நாடு முழுவதும் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறது. 

மேற்கத்திய கலச்சார பரவலின்  காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் காதலர் தின கொண்டாட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. 

இக்கொண்டாட்டத்தின் ஆரம்ப காலங்களில் இளைஞர்கள் தங்களது ஜோடிகளுக்கு பரிசளிப்பதற்காக வாழ்த்து அட்டை கடைகளை நோக்கி படையெடுத்து வந்தனர். ஆனால் தற்போது இதுபோன்ற கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக கணிசமாக குறைந்து உள்ளது. 

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைவரது கைகளிலும் அலைபேசிகள் தவழ்கின்றன. மேலும் இளைஞர்கள் கவனம் இணையத்தின் மீதும் திரும்பி உள்ளது.  இதன்மூலம் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள முடிகிறது. மேலும் செலவினமும் குறைவு. மிக முக்கியமாக இதன் பரிமாற்றங்கள் பிறர் கவனத்திற்கு செல்லும் வாய்ப்பின்றி ரகசியமாகவே இருக்கும் என்பது போன்ற காரணங்களால் வாழ்த்து அட்டை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இருந்த போதிலும், வாழ்த்து அட்டைகள் பல ஆண்டுகளை கடந்து ஞாபகங்களை தாங்கி நிற்கும் நினைவு சின்னமாக இருப்பதால் வாழ்த்து அட்டைகளை வாங்கி தங்களது காதலை வெளிப்படுத்தும் காதலர்களின் எண்ணிக்கை இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. 

வாழ்த்து அட்டை பிரியர்களுக்காக வாழ்த்து அட்டையை திறந்தால் இசை ஒலிப்பது, பொம்மை நடனமாடுவது உள்ளிட்ட பல்வேறு வகையான வாழ்த்து அட்டைகள் ரூ.50ல் துவங்கி ரூ.600 வரை விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தது.

by Mani Bharathi   on 06 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.