LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் தலைப்பானது வடிவேலுவின் வசனம் !!

சமீப காலமாக பிரபலமாக வசனங்களை படத்திற்கு பெயராக வைப்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து விட்டது. 


ஆல் இன் ஆல் அழகு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கண்ணா லட்டு தின்ன ஆசையா..  போன்றவை இந்த வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய சில படங்களாகும். 


இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபலமான வசனம் தற்போது படத்தின் தலைப்பாகியுள்ளது. அதுதான்.... பகவதி படத்தில் வடிவேலு பேசிய வந்துட்டாயா வந்துட்டாயா என்ற வசனம் தான் தற்போது திரைப்படத்தின் தலைப்பாக உருவெடுத்துள்ளது.  


இந்த படத்தில் புதுமுகங்கள் நடித்தபோதும், இயக்குனர்கள் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்களாம்.


கதைப்படி, ஒரு காட்சியில் வயதான தோற்றத்தில் தோன்றும் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் இருவரும் நாம் மீண்டும் இளமையாக மாறினால் எப்படி இருககும் என்று நினைத்துப்பார்ப்பது போன்று ஒரு பாடல் காட்சி இடம்பெற்றிருக்கிறதாம். 


அந்த காட்சியில் இன்றைய இளைஞர்கள் அணிந்து செல்வது போன்ற ஜீன்ஸ் டீசர்ட் அணிந்தபடி பீட்சா, பர்கர் என சாப்பிட்டபடி லேப்டாப், செல்போன் என்று அலைவது போன்ற அந்த பாடலில் நடித்துள்ளார்களாம். இநத பாடலிலும் வந்துட்டான்யா வந்துட்டான்யா என்ற வார்த்தை அடிக்கடி ரிப்பீட்டு செய்யப்படுகிறதாம்.

by Swathi   on 30 Sep 2014  0 Comments
Tags: Vanthutanya Vanthutanya   Famous Vadivelu Dialogues   Vadivelu Dialogue as Movie Title   வடிவேலு டையலாக்   வந்துட்டாயா வந்துட்டாயா        
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் தலைப்பானது வடிவேலுவின் வசனம் !! மீண்டும் தலைப்பானது வடிவேலுவின் வசனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.