சமீப காலமாக பிரபலமாக வசனங்களை படத்திற்கு பெயராக வைப்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து விட்டது.
ஆல் இன் ஆல் அழகு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கண்ணா லட்டு தின்ன ஆசையா.. போன்றவை இந்த வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய சில படங்களாகும்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபலமான வசனம் தற்போது படத்தின் தலைப்பாகியுள்ளது. அதுதான்.... பகவதி படத்தில் வடிவேலு பேசிய வந்துட்டாயா வந்துட்டாயா என்ற வசனம் தான் தற்போது திரைப்படத்தின் தலைப்பாக உருவெடுத்துள்ளது.
இந்த படத்தில் புதுமுகங்கள் நடித்தபோதும், இயக்குனர்கள் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்களாம்.
கதைப்படி, ஒரு காட்சியில் வயதான தோற்றத்தில் தோன்றும் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் இருவரும் நாம் மீண்டும் இளமையாக மாறினால் எப்படி இருககும் என்று நினைத்துப்பார்ப்பது போன்று ஒரு பாடல் காட்சி இடம்பெற்றிருக்கிறதாம்.
அந்த காட்சியில் இன்றைய இளைஞர்கள் அணிந்து செல்வது போன்ற ஜீன்ஸ் டீசர்ட் அணிந்தபடி பீட்சா, பர்கர் என சாப்பிட்டபடி லேப்டாப், செல்போன் என்று அலைவது போன்ற அந்த பாடலில் நடித்துள்ளார்களாம். இநத பாடலிலும் வந்துட்டான்யா வந்துட்டான்யா என்ற வார்த்தை அடிக்கடி ரிப்பீட்டு செய்யப்படுகிறதாம்.
|