தமிழகத்தில் காலியாக உள்ள 813 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிக்கை எண் - 19/2015
விளம்பர எண் - 425
தேதி - 12.11.2015
பதவியின் பெயர் - கிராம நிர்வாக அலுவலர்
மொத்த காலிப்பணியிடங்கள் - 813
பதவிக் குறியீட்டு எண் - 2015
பணி குறியீட்டு எண் - 050
சம்பளம் - மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
கல்வித் தகுதி : 12.11.2015 தேதியின்படி பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும்.
கட்டணம் விவரம் : நிரந்தரப்பதிவுக் கட்டணம்: ரூ.50. தேர்வுக் கட்டணம்: ரூ.75.
வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 16.12.2015
நிரந்தர பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பி.வ.(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு 21 - 40க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இடஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி : 14.12.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 14.02.2016
இந்த தேர்வு பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.
|