கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் கூறியுள்ளார்.தமிழகத்தில் உள்ள 1,870 கிராம நிர்வாக அலுவலர் காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.இத்தேர்வை சுமார் பத்து இலட்சம் பேர் எழுதினர்.சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் கூறுகையில் இம்மாத இறுதிக்குள் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு,முடிவுகளும் அடுத்த மாதம் குருப் 2 தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
|