LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

வரைவுகடாதல்

வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்.
243.
இச்சிக்கு மன்ன கலைசைத் தியாகரை யேத்தலர்போல்
இச்சிறு மைக்கிட மாயினை யென்னெனு மெம்மனைக்குப்
பச்சிள நொச்சியிற் பந்தரிட் டோமந்தப் பந்தர்முற்றும்
பச்சிமக் காலெடுத் தோடிற்றென் றாள்வல்லி பார்த்துக்கொள்ளே. 1

அலரறிவுறுத்தல்.
244.

நளிசேர் மதிச்செஞ் சடையார் சிதம்பர நாதர்வைகும்
நளிசேர் வயற்றண் கலைசைவெற் பாவெங்க ணாயகிக்கன்
றளிசே ரலர்தொடுத் தைம்பாற் கணிந்தவுன் னாரருளால்
அளிசேர் கிலாவலர் வாயாற் றொடுப்ப ரனைவருமே. 2

தாயறிவுறுத்தல்.
245.
மதத்தானை யீருரி யங்கியங் கத்தர் மயங்குபர
மதத்தார்க் கரியர் கலைசைத் தியாகர் வயக்கியதா
மதத்தா மிருள்போற் குழலிக்கு நீயிட்ட வாசனைமான்
மதத்தாற் களவையெல் லாமறிந் தாளன்னை மன்னவனே. 3

வெறியச்சுறுத்தல்.
246.
களக்கந் தரரெங் கலைசைத் தியாகர்செங் கண்ணொளிபோல்
விளக்கஞ்செய் வேலன்ப நீதணி யாமையின் வேற்றுருக்கண்
டிளக்கங்கொண் டுள்ளத்தெம் மன்னையும் யாயுமென் னேந்திழைபாற்
றுளக்கஞ்செய் நோய்தணிப் பான்வெறி யாட றொடங்கினரே. 4

பிறர்வரைவுணர்த்தல்.
247.
நான்மே லுனக்கென்ன சொல்வலின் றேயன்ப நற்றுணிவு
தான்மேல்கொண் டாட்கொள் கலைசைத் தியாகர் சரணமலர்த்
தேன்மேவு தொண்டர் மனவண்டு போலெந் திருவை நசைஇ
மேன்மேற் கருதுகின் றாரய லாரொற்று விட்டுவிட்டே. 5

வரைவெதிர்வுணர்த்தல்.
248.
வண்டாடுஞ் சோலைக் கலைசைத் தியாகர் வரையன்பநீ
பண்டா ரணந்தெரிந் தாரொடெம் மூர்வரிற் பாய்ந்தெமர்கள்
கொண்டாடி யுன்றன் மொழிவழி யேநிற்பர் கோலமதி
கண்டாற் குமுத மலரா தொழியுங் கயமில்லையே. 6

வரையுநாள் உணர்த்தல்.
249.
வேர்கோடி கொண்ட பவக்கா டழித்தென்னை மீட்டருளும்
கார்கோணஞ் சுண்ட கலசத் தியாகர் கலைசை வெற்பா
பார்கோணை யங்கணி யேந்துபொன் மாலை பரிமளிக்கும்
ஊர்கோ ணடுவ ணுழைகொண்ட திங்க ளுழை கொண்டதே. 7

தலைமகளறிவு தலைமகற்கு அறிவுறுத்தல்.
250.
என்னான் வியப்பல் கலைசைச் சிதம்பர வீசர்வெற்பா
உன்னா னிகழ்ந்த வுறுபழி நாணி யொருங்கனையும்
பின்னாய மும்பயில் சீறூரு மன்றிப் பிறங்கறிவால்
வன்னாண் முலையவ ளென்னையுங் கூட மறைத்தனளே. 8

குறிபெயர்த்திடுதல்.
251.
கற்றவர் வாழுங் கலைசைத் தியாகர் கனகிரிமேல்
மற்றவம் பார்க்கும் வனமுலை யாரிந்த வண்பொ ழில்வாய்
உற்றவர் பக்கங் களவலர் தூற்ற லொழிவிலையால்
கொற்றவ நீயினி வேறோர் குறியிடங் கொண்டருளே. 9

பகல் வருவானை இரவு வருகென்றல்.
252.
எற்பக லாளி கலைசைச் சிதம்பர வீசனந்தி
வெற்ப கலாப மயிலனை யாள்வெம் முலைத்தடத்தில்
வற்பக லாநெஞ்ச வஞ்சத் தவரெந்த வைப்புமுளார்
நற்பக லாட வரேல்வரு வாயிங்கு நள்ளிரவே. 10

இரவு வருவானைப் பகல்வருகென்றல்.
253.
ஏத்துமெய் யன்புடை யார்கண் களிப்ப வெழுந்தருளிக்
கூத்துகந் தாடுங் கலைசைத் தியாகர் குவட்டிலிருள்
சீத்து வரும்பொன் னெனச்செம் மணிக டிகழ்புனம்போய்க்
காத்து மினியுன் பொருட்டாங்கு நீயருள் காவலனே. 11

பகலினும் இரவினும் பயின்றுவருகென்றல்.
254.
வெல்லும் படைமதன் வெங்கணை யாற்படு மின்கலக்கம்
சொல்லுந் தரமல்ல வேயிவட் காகவென் சோரமனக்
கல்லுங் குழைத்த கலைசைத் தியாகர் கயிலைவெற்பா
எல்லுங் கனையிரு ளல்லுங் குறிக்க ணெழுந்தருளே. 10

பகலினும் இரவினும் அகலிவணென்றல்.
255.
தேங்காவுங் கைதை கலசத் தியாகர் திருக்கலைசைப்
பாங்காற் கடற்சங்க முத்திட்டுப் பச்சென்று கொங்கைமுகை
தாங்காநெய் தற்பெண்ண தாயுமை போனிற்குந் தண்டுறைவா
தீங்கா வலருற லால்வர னீயிரு செவ்வியுமே. 13

உரவோன்நாடும் ஊருங் குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறல்.
256.
தென்றிருத் தொட்டிக் கலைவாழ் கலசத் தியாகரைப்போற்
றுன்றிரு நாட்டிற்கு மூர்க்குங் குலத்திற்கு மோங்குமர
பன்றிவெண் குன்றன்ன கீர்த்திக்கும் வாய்மைக்கு மாய்ந்திடுங்கால்
வென்றிகொள் வேலன்ப வேலாது நின்னடை வேற்றுமையே. 14

ஆறுபார்த்துற்ற அச்சங் கூறல்.
257.
சீறா டரவந் தரிக்குங் கலைசைத் தியாகர் வெற்பில்
ஏறாத சானுவி லேறி யிழிந்தெல்லி யெங்கடவப்
பேறான நீவருங் கால்வரைத் தேவொன்று பின்றொடர்ந்து
வேறா நிகழ்த்திய தேல்வல்ல ளோவுய்ய மென்கொடியே. 15

ஆற்றாத்தன்மை ஆற்றக் கூறல்.
258.
கருந்தும்பி மும்மதங் கார்போற் சொரியக் கருந்தும்பிசூழ்ந்
தருந்தும் பொருப்ப கலைசைத் தியாகருக் கன்பிலர்போல்
வருந்துங் கலங்கிக் கனன்மூச் செறிய மலரணைவிட்
டிருந்துங் கிடந்து மெழுந்துஞ் சுழன்றழு மிட்டிடையே. 16

காவல் மிகவுரைத்தல்.
259.
குயின்றாலு வாயுற வாரும் பரவைக் குரவைநஞ்சம்
அயின்றா லுகந்த கலைசைத் தியாகர்வெற் பாரரவம்
பயின்றாலுங் கானிலெங் கோமான் வரல்கைப் பறைபடுப்போர்
துயின்றாலு மன்னை யொருகணப் போதுந் துயின்றிலளே. 17

காமமிகவுரைத்தல்.
260.
வெண்ணந்தின் முத்தும் புனையரும் பாமுத்தும் வேறறியாத்
தண்ணந் துறைவ கலைசைத் தியாகரைச் சார்கிலர்போல்
வண்ணங் கருக மெலிவாள்வெங் காம வடவையந்தீ
அண்ணனின் பேரருள் வெள்ளங்கொள் ளாம லடங்கரிதே. 18

கனவு நலிபுரைத்தல்.
261.
குனித்தருள் கூத்துங் கலைசைத் தியாகர் கொடையுமெண்ணா
தனித்தத்தை நித்தமென் றெண்ணிக் கைவிட்டயராதரைப் போல்
தனித்தங்கு நீ வந்து கையாற் றழுவத் தருங்கனவை
இனித்தவள் சாக்கிர மென்றே விழித்தழு தேங்கினளே. 19

கவின் அழிபுரைத்தல்.
262.
எனைப்பாது காக்குங் கலைசைச் சிதம்பர வீசர்வெற்பா
உனைப்பான லுள்ளு மனப்போதி லும்வைத் துருகுமவள்
தனைப்பார்த் தருளுந் தகவொன்றி லாமையிற் றையல்வணம்
சினைப்பாட லத்தின் பழம்பூவ தாகிச் சிதைகின்றதே. 20

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.