LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

பல்வகைப் பாடல்கள் - தனிப் பாடல்கள் பகுதி - 2

 

6. பிழைத்த தென்னந்தோப்பு
வயலிடை யினிலே-செழுநீர்-மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை-தனியே-ஆறுதல் கொள்ள வந்தேன்.
காற்றடித் ததிலே-மரங்கள்-கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே-சிதறி-நாடெங்கும் வீழ்ந்தனவே.
சிறிய திட்டையிலே,உளதோர்-தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை-அதனை-வாயு பொடிக்க வில்லை
வீழ்ந்தன சிலவாம்-மரங்கள்-மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை-வாயு பொறுத்து விட்டான்
தனிமை கண்டதுண்டு;-அதில்-சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில்,-அது தேம்-பாகு மதுர மன்றோ?
இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்பவொளித்திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.
நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.
வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே
7. அக்கினிக் குஞ்சு
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.
8. சாதாரண வருஷத்துத் தூமகேது
தினையின் மீது பனைநின் றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
ழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்
தூம கேதுச் சுடரே,வாராய்!
எண்ணில் பல கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னெடுவால் போவதென் கின்றார்.
மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேதும் இடர்செயா தேநீ
போதி யென்கின்றார்;புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால்.
பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;
உனதியல் அன்னியர் உரைத்தடக் கேட்டே
தெரிந்தனம்;எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.
வாராய்,சுடரே!வார்த்தைசில கேட்பேன்;
தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்திநீ
போவை யென்கின்றார்; பொய்யோ,மெய்யோ?
ஆதித் தலைவி யாணையின் படிநீ
சலித்திடுந் தன்மையால்,தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற் கேயென
விளம்பு கின்றனர் அது மெய்யோ,பொய்யோ?
ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையு மென்கின்றார்;மெய்யோ,பொய்யோ?
சித்திகள் பலவும்,சிறந்திடு ஞானமும
மீட்டும் எம்மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலு கின்றனர்; அது பொய்யோ,மெய்யோ?
9. அழகுத் தெய்வம்
மங்கியதொர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை;
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்.
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்ததேன். 1 
யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?என்றேன்;
யோகமே தவம்,தவமே யோகமென உரைத்தாள்.
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?என்றேன்;
இரண்டுமாம்,ஒன்று மாம்,யாவுமாம்என்றாள்.
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?என்றேன்.
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ?என்றாள்.  2
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?என்றேன்.
காலமே மதியினுக்கோர் கருவியாம்என்றாள்.
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?என்றேன்;
நானிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்என்றாள்
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?என்றேன்;
எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்என்றாள்.
மூலத்தைச் சொல்லவோ?வேண்டாமோ?என்றேன்;
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.  3
10. ஒளியும் இருளும்
வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே! 1
சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே! 2
தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே! 3
நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே! 4
11. சொல்
சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.
தேவர் வருகவென்று சொல்வதோ?-ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்,
ஆவ லறிந்துவரு வீர்கொலோ?-உம்மை
யன்றி யொருபுகலும் இல்லையே. 1
ஓம்என் றுரைத்துவிடிற் போதுமோ?-அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந்தேகுமோ?-என்தன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ?  2
உண்மை ஒளிர்கஎன்று பாடவோ?-அதில்
உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால்-உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம். 3
தீயை அகத்தினிடை மூட்டுவோம்-என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர்-எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர்.  4
வான மழைபொழிதல் போலவே-நித்தம்
வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்;
கானை அழித்து மனை கட்டுவீர்-துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்.  5
விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்-நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.  6
மின்ன லனையதி றல் ஓங்குமே-உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே;
தின்னும் பொருளமுதம் ஆகுமே-இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே. 7
தெய்வக் கனல்விளைந்து காக்குமே-நம்மைச்
சேரும் இருளழியத் தாக்குமே;
கைவைத் ததுபசும்பொன் ஆகுமே-பின்பு
காலன் பயமொழிந்து போகுமே.  8
வலிமை,வலிமைஎன்று பாடுவோம்-என்றும்
வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்-நெஞ்சில்
கவலை யிருளனைத்தும் நீங்கினோம். 9
அமிழ்தம்,அமிழ்தம்என்று கூறுவோம்-நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;
தமிழில் பழமறையைப் பாடுவோம்-என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம். 10
12. கவிதைத் தலைவி
வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி!
தினமும்இவ் வுலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை
வாழ்க்கைப் பாலையில் வளர்பல முட்கள்போல்
பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும்
வெறுங்கதைத் திரளை,வெள்ளறி வுடைய
மாயா சக்தியின் மகளே!மனைக்கண்
வாழ்வினை வகுப்பாய்,வருடம் பலவினும்
ஓர்நாட் போலமற் றோர்நாள் தோன்றாது
பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ
நடத்திடுஞ் சக்தி நிலையமே!நன்மனைத்
தலைவீ!ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன்நிறை அனுபவ மாக்கி,
உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து,
ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து
வான சாத்திரம்,மகமது வீழ்ச்சி,
சின்னப் பையல் சேவகத் திறமை;
எனவரு நிகழ்ச்சி யாவே யாயினும்,
அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து,
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும்
பேதை மாசத்தியின் பெண்ணே!வாழ்க!
காளியின் குமாரி!அறங்காத் திடுக
வாழ்க!மனையகத் தலைவீ வாழ்க!
13. கவிதைக் காதலி
வாராய்!கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன,
நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே
அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள,யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து
எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;
கலந்துயாம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்
பூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்ற
தீங்குரலு டைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்;
மலரினத் துன்தன் வாள்விழி யொப்ப
நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்;குளிர்புனற்
சுனைகளில் உன்மணிச் சொற்கள் போல் தண்ணிய
நீருடைத் தறிகிறேன்;நின்னொடு தமியனாய்
நீயே உயிரெனத் தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்.
வானகத் தமுதம் மடுத்திடும் போழ்து
மற்றத னிடையோர் வஞ்சகத் தொடுமுள்
வீழ்ந்திடைத் தொண்டையில் வேதனை செய்தன.
நின்னொடு களித்து நினைவிழந் திருந்த
எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற்
கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை
அடிநா முள்ளினை அயல்சிறி தேகிக்
களைந்து பின்வந்து காண்பொழுத ஐயகோ!
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்
மிடிமைநோய் தீர்ப்பான் வீணர்தம் முலகப்
புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள்
தென்திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்
திருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து,அவன்
பணிசெய இசைந்தேன்,பதகிநீ!என்னைப்
பிரிந்துமற் றகன்றனை பேசொணா நின்னருள்.
இன்பமத் தனையும் இழந்துநான் உழன்றேன்,
சின்னாள் கழிந்தபின் -யாதெனச் செப்புகேன்!
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது.
கதையிலோர் முனிவன் கடியதாஞ் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடு முன்னர்த்
தன்மக னிடை என் தனயநீ யான்புலைப்
பன்றியாம் போது பார்த்துநில் லாதே!
விரைவிலோர் வாள்கொடு வெறுப்புடை யவ்வுடர்ல
துணித்தெனைக் கொன்று தொலைத்தலுன் கடனாம்.
பாவமிங் கில்லையென் பணிப்பிஃ தாகலின்!
தாதைசொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்.
முனிவனும் பன் றியா முடிந்தபின்,மைந்தன்
முன்னவன் கூறிய மொரீயினை நினைந்தும்,
இரும்புகழ் முனிவனுக்குன இழியதா மிவ்வுடல்
அமைந்தது கண்டுநெஞ் சழன்றிடல் கொண்டும்.
வாள்கொடு பன்றியை மாய்த்திட லுற்றனன்,
ஆயிடை மற்றவ் வருந்தவப் பன்றி
இனையது கூறும்.ஏடா!நிற்க!
நிற்க!நிற்க!முன்னர்யாம் நினைந்தவாறு
அத்துணைத் துன்புடைத் தன்றிவ் வாழ்க்கை
காற்றும் புனலும் கடிப்புற் கிழங்கும்
இனையபல் லின்பம் இதன் கணே யுளவாம்;
ஆறேழ் திங்கள் அகன்றபின் வருதியேல்
பின்னெனைக் கோறலாம்பீழையோ டிவ்வுரை
செவியுறீஈ முடிசாய்த் திளையவன் சென்றனன்.
திங்கள்பல போனபின் முனிமகன் சென்ற
தாதைப் பன்றியோர் தடத்திடைப் பெடையொடும்
போத்தினம் பலவொடும் அன்பினிற் பொருத்தி
ஆடல்கண் டயிர்த்தனன். ஆற்றொணா தருகுசென்று
எந்தாய்!எந்தாய்!யாதரோ மற்றிது!
வேதநூ லறிந்த மேதகு முனிவரர்
போற்றிட வாழ்ந்தநின் புகழ்க்கிது சாலுமோ?
எனப்பல கூறி இரங்கினன்;பின்னர்
வாள்கொடு பன்றியை பாய்ததிடல் விழைந்தான்.
ஆயிடை முனிவன் அகம்பதைக் துரைக்கும்
செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்புடைத் தேயாம்;
நினக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்
இனத்தொடும் ஓடி இன்னுயிர் காத்தது.
இன்னது கண்ட இளையவன் கருதும்.
ஆவா!மானிடர் அருமையின் வீழ்ந்து
புன்னிலை யெய்திய போழ்ததில் நெடுங்கால்
தெரு மரு கின்றிலர் சிலபகல் கழிந்தபின்
புதியதா நீசப் பொய்மைகொள் வாழ்வில்
விருப்புடை யவராய் வேறுதா மென்றும்
அறிந்திலரேபோன் றதிற்களிக் கின்றார்.
என்சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்.
திமிங்கில வுடலும் சிறியபுன் மதியும்
ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன்பணிக் கிசைந்தென் தருக்கெலாம் அழிந்து
வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை!
14. மது
போகி
பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று
பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே
இச்சை தீர மதுவடித் துண்போம்;
இஃது தீதென் றிடையர்கள் சொல்லும்
கொச்சைப் பேச்சிற்கை கொட்டி நகைபோம்;
கொஞ்சு மாரும் கூட்டுணும் கள்ளும்
இச்சகத்தினில் இன்பங்க ளன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறொன்று முண்டோ? 1
யோகி
பச்சை முந்திரி யன்ன துலகம்;
பாட்டுப் பாடடல் சிவக்களி எய்தல்;
இச்சை தீர உலகினைக் கொல்வோம்;
இனிய சாறு சிவமதை உண்போம்;
கொச்சை மக்களுக் கிஃதெளி தாமோ?
கொஞ்சு மாதொரு குண்டலி சக்தி
இச்சகத்தில் இவையின்ப மன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறுளதாமோ? 2
போகி
வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி
வேந்தர் தம்முட் பெரும்புகழ் எய்தி
ஒற்றை வெள்ளைக் கவிதை உயத்தே
உலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்;
சுற்று தேங்கமழ் மென்மலர் மாலை
தோளின் மீதுருப் பெண்கள் குலாவச்
சற்றும் நெஞ்சம் கவலுத லின்றித்
தரணி மீதில் மதுவுண்டு வாழ்வோம். 3
யோகி
வெற்றி ஐந்து புலன்மிசைக் கொள்வோம்;
வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்;
ஒற்றை வெள்ளைக் கவிதைமெய்ஞ் ஞானம்
உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்;
மற்றவர் தம்முட் சீர்பெற வாழ்வோம்;
வண்ம லர்நறு மாலை தெளிவாம்!
சுற்றி மார்பில் அருள்மது வுண்டே
தோகை சக்தியொ டின்புற்று வாழ்வோம். 4
போகி
நல்ல கீதத் தொழிலுணர் பாணர்
நடனம் வல்ல நகைமுக மாதர்
அல்லல் போக இருடன் கூடி
ஆடி யாடிக் களித்தின்பங் கொள்வோம்;
சொல்ல நாவு கனியுத டாநற்
சுதியிலொத்துத் துணையொடும் பாடி
புல்லும் மார்பினோ டாடிக் குதிக்கும்
போகம் போலொரு போகமிங் குண்டோ? 5
யோகி
நல்ல கீதம்,சிவத்தனி நாதம்,
நடன ஞானியர் சிற்கபை யாட்டம்;
அல்லல் போக இவருடன் சேர்ந்தே
ஆடி யாடிப் பெருங்களி கொள்வோம்;
சொல்ல நாவில் இனிக்கு தடா!வான்
சுழலும் அண்டத் திரளின் சுதியில்
செல்லும் பண்ணொடு சிற்சபை யாடும்
செல்வம் போலொரு செல்வமிங் குண்டோ? 6
ஞானி
மாத ரோடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
களில் இன்பம் கலைகளில் இன்பம்,
பூத லத்தினை ஆள்வதில் இன்பம்
பொய்மை யல்ல இவ்வின்பங்க ளெல்லாம்
யாதுஞ் சக்தி இயல்பெனக் கண்டோம்
இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே. 7
இன்பந் துன்பம் அனைத்தும் கலந்தே
இச்ச கத்தின் இயல்வலி யாகி
முன்பு பின்பல தாகியெந் நாளும்
மூண்டு செல்லும் பராசக்தி யோட
அன்பில் ஒன்றிப் பெருஞ்சிவ யோகத்
தறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்,
துன்பு நேரினும் இன்பெனக் கொள்வார்
துய்ப்பர் இன்பம் மிகச்சுவை கொண்டே. 8
இச்சகத்தோர் பொருளையுந் தீரர்
இல்லை யென்று வருந்துவதில்லை;
நச்சி நச்சி உளத்தொண்டு கொண்டு
நானிலத்தின்பம் நாடுவதில்லை;
பிச்சை கேட்பது மில்லை;இன்பத்தில்
பித்துக் கொண்டு மயங்குவ தில்லை;
துச்ச மென்று சுகங்களைக் கொள்ளச்
சொல்லு மூடர்சொற் கேட்பதும் இல்லை. 9
தீது நேர்ந்திடின் அஞ்சுவ தில்லை.
தேறு நெஞ்சினொ டேசிவங் கண்டோர்;
மாதர் இன்பம் முதலிய வெல்லாம்
வைய கத்துச் சிவன் வைத்த வென்றே
ஆத ரித்தவை முற்றிலும் கொள்வார்;
அங்கும் இங்குமொன் றாமெனத் தேர்வார்;
யாது மெங்கள் சிவன்திருக் கேளி;
இன்பம் யாவும் அவனுடை இன்பம். 10
வேத மந்திர நாதம் ஒருபால்
வேயி னின்குழல் மெல்லொலி ஓர்பால்,
காதல் மாதரொ டாடல் ஒருபால்,
களவெம் போரிடை வென்றிடல் ஓர்பால்,
போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்,
பொலியுங் கள்வெறி துய்த்தல்மற் றோர்பால்;
ஏதெ லாம்நமக் கின்புற நிற்கும்
எங்கள் தாய்அருட் பாலது வன்றே. 11
சங்கீர்த்தனம் (மூவரும் சேர்ந்து பாடுதல்)
மதுநமக்கு,மதுநமக்கு,மதுநமக்கு விண்ணெலாம்,
மதுரமிக்க ஹரிநமக்கு,மதுவெனக் கதித்தலால்;
மதுநமக்கு மதியுநாளும்,மதுநமக்கு வானமீன்,
மதுநமக்கு,மண்ணுநீரும் மதுநமக்கு,மலையெலாம்,
மதுநமக்கொர் தோல்விவெற்றி,மதுநமக்கு வினையெலாம்,
மதுநமக்கு,மாதரின்பம்,மதுநமக்கு மதுவகை;
மதுநமக்கு,மதுநமக்கு,மதுமனத்தொடாவியும்
மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால்.
15. சந்திரமதி
ராகம்-ஆனந்த பைரவி  தாளம்-ஆதி
பச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது!;-என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
சோதி வளரு தடீ! 
பேச்சுக் கிடமே தடி!-நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி!-என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த-வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட
தேவி!நினை விழந்தேனடி! 
நீலக் கடலினிலே-நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே-நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே-நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே-நின்தன்
காதல் விளங்குதடி!   (பச்சைக் குழந்தை யடி!)
4. சான்றோர்
1. தாயுமானவர் வாழ்த்து
என்றும் இருக்க உளங்கொண்டாய்!
இன்பத் தமிழுக் கிலக்கியமாய்,
இன்றும் இருத்தல் செய்கின்றாய்!
இறவாய் தமிழோ டிருப்பாய் நீ!
ஒன்று பொருள ஃதின்பமென
உணர்ந்தாய், தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!
2. நிவேதிதா
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய்,இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.
3. அபேதாநந்தா
சுருதியும் அரிய உபநிட தத்ன்
தொகுதியும் பழுதற உணர்ந்தோன்.
கருதிடற் கரிய பிரமநன் னிலையைக்
கண்டுபே ரொளியிடைக் களித்தோன்,
அரிதினிற் காணும் இயல்பொடு புவியின்
அப்புறத் திருந்துநண் பகலில்
பரிதியி னொளியும் சென்றிடா நாட்டில்
மெய்யொளி பரப்பிடச் சென்றோன். 1
வேறு
ஒன்றேமெய்ப் பொருளாகும்;உயிர்களெலாம்
அதன்வடிவாம்,ஓருங்காலை;
என்தேவன் உன்தேவன் என்றுலகர்
பகைப்பதெலாம் இழிவாம் என்று,
நன்றேயிங் கறிவுறுத்தும் பரமகுரு
ஞானமெனும் பயிரை நச்சித்
தின்றேபா ழாக்கிடுமைம் புலன்களெனும்
விலங்கின த்தைச் செகுத்த வீரன். 2
வேறு
வானந் தம்புகழ் மேவி விளங்கிய
மாசி லாதி குரவணச் சங்கரன்
ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும்
நண்ணி னானெனத் தேசுறு மவ்விவே-
கானந் தபெருஞ் சோதி மறைந்தபின்
அவனி ழைத்த பெருந்தொழி லாற்றியே
ஊனந் தங்கிய மானிடர் தீதெலாம்
ஒழிக்கு மாறு பிறந்த பெருந்தவன். 3
வேறு
தூய அபே தாநந்தனெனும் பெயர்கொண்
டொளிர்தருமிச் சுத்த ஞானி,
நேயமுடன் இந்நகரில் திருப்பாதஞ்
சாத்தியருள் நெஞ்சிற் கொண்டு,
மாயமெலாம் நீங்கியினி தெம்மவர்நன்
னெறிசாரும் வண்ணம் ஞானம்
தோயநனி பொழிந்திடமோர் முகில்போன்றான்
இவன்பதங்கள் துதிக்கின் றோமே 4
4. ஓவியர்மணி இரவிவர்மா
சந்திர னொளியை ஈசன் சமைத்து, அது பருகவென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்;அமுதண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை. 1
மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான்,சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி,ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகருமாறே. 2
மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான்,இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போது மென்பான். 3
அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான்!செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பிய கொல்லாம் இன்று விண்ணுல கடைந்து விட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம். 4
காலவான் போக்கில் என்றும் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்,
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ? 5
5. சுப்பராம தீட்சிதர்
அகவல்
கவிதையும் அருஞ்சுவைக் கான நூலும்
புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும்
மற்றுள பெருந்தொழில் வகைகளிற் பலவும்
வெற்றிகொண் டிலங்கிய மேன்மையார் பரத
நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப.
ஈட்டிய செல்வம் இறந்தமை யானனும்
ஆண்டகை யொடுபுகழ் அழிந்தமை யானும்
மாண்டன பழம்பெவரு மாட்சியார் தொழிலெலாம்;
தேவர்கள் வாழ்ந்த சீர்வளர் பூமியில்
மேவிய குரக்கர் விளங்குதல் போல.
நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில்
சீரிலாப் புல்லர் செறிந்துநிற் கின்றார்;
இவரிடை
சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்,
அரக்கர்தங் குலத்திடை வீடண னாகவும்,
சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்,
போற்றதற் குரிய புனிதவான் குலத்தில்
நாரத முனிவன் நமர்மிசை யரளால்
பாரத நாட்டில் பழமாண் புறுகென
மீட்டுமோர் முறைஇவன் மேவினன் என்ன,
நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்
தோமறு சுப்ப ராமனற் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்
இன்னான் தானும் எமையகன் றேகினன்;
என்னே நம்மவர் இயற்றிய பாவம்!
இனியிவ னனையரை எந்நாட் காண்போம்?
கனியறு மரமெனக் கடைநிலை யுற்றோம்
அந்தோ மறலிநம் அமுனைக் கவர்ந்தான்!
நொந்தோ பயனிலை நுவல யா துளதே?
விருத்தம்
கன்னனொடு கொடைபோயிற்று;உயர்கம்ப
நாடனுடன் கவிதை போயிற்று
உன்னரிய புகழ்ப்பார்த்த னொடுவீரம்
அகன்றதென உரைப்பர் ஆன்றோர்;
என்னகநின் றகலாதோன் அருட் சுப்ப
ராமனெனும் இணையி லாவிற்
பன்னனொடு சுவைமிகுந்த பண்வளனும்
அகன் றதெனப் பகர லாமே.  1
கலைவிளக்கே!இளசையெனும் சிற்றூரில்
பெருஞ்சோதி கதிக்கத் தோன்றும்
மலைவிளக்கே!எம்மனையர் மனவிருளை
மாற்றுதற்கு வந்த ஞான
நிலைவிளக்கே!நினைப்பிரிந்த இசைத்தேவி
நெய்யகல நின்ற தட்டின்
உலைவிளக்கே யெனத்தளரும்;அந்தோ!நீ
அகன் றதுயர் உரைக்ற் பாற்றோ? 2
மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்க லாதேன்
தன்னனைய புகழுடையாய்!நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்;
உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம்
எனக்கருதி வந்தேன்;அந்தோ!
இன்னமொரு காலிளசைக் கேகிடின்,இவ்
வெளியன்மனம் என்ப டாதோ?  3
6. மகாமகோபாத்யாயர்
செம்பரிதி ஒளிபெற்றான்;பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது;ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல்,இதற்கென்கொல்
பேருவகை படைக் கின்றீரே?
அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்,
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவுன் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?
நிதிய றியோம்,இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய்,அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.
7. வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
1 (ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மாகராஜ வெங்கடேசு ரெட்பப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதி எழுதும்
சீட்டுக் கவிகள்.)
பாரிவாழ்ந் திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின் கண்ணே
ஆரிய!நீயிந் நாளில் அரசுவீற் றிருக்கின் றாயால்;
காரியங் கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லேயோ? 1
விண்ணள வுயர்ந்த கீர்த்தி வெங்கடேசு ரெட்டமன்னா!
பண்ணள வுயர்ந்த தென்பணி பாவள வுயர்ந்த தென்பா
எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ்க் கவிஞர் வந்தால்,
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகி லாயோ? 2
கல்வியே தொழிலாக் கொண்டாய்!கவிதையே தெய்வமாக
அல்லுநன் பகலும் போற்றி அதைவழி பட்டுநின்றாய்!
சொல்லிலே நிகரி லாத புலவர்நின் சூழ லுற்றால்
எல்லினைக் காணப் பாயும் இடபம்போல் முற்ப டாயோ? 3
-சுப்பிரமணிய பாரதி
2.5.1919, எட்டயபுரம்
2 (ஸ்ரீ எட்டயபுரம் மகாராஜ ராஜேந்த்ர ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ.சி.சுப்பிரமணிய பாரதி எழுதும் ஓலைத் தூக்கு)
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல
சேகரன் ஸ்ரீ ராஜ ராஜன்,
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
டேசுரெட்ட சிங்கன் காண்க.
வாசமிகு துழாய்த் தாரான் கண்ணனடி
மறவாத மனத்தான்,சக்தி
தாசனெனப் புகழ்வளரும் சுப்ரமண்ய
பாரதிதான் சமைத்த தூக்கு.  1
மன்னவனே!தமிழ்நாட்டில் தமிழறிந்த
மன்னரிலை யென்று மாந்தர்
இன்ன லுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்த பொழு திரிந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு,
சுவைகண்டு,துய்த்தத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றே!  2
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
சுவைபுதிது,பொருள்புதிது,வளம்புதிது,
சொற்புதிது சோதி மிக்க
நவகவிதை,எந்நாளும் அழியாத
மகாகவிதை என்று நன்கு.  3
பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறரு மாங்கே
விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவி யென்தன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார்;பாரோ ரேத்துந்
தராதிபனே!இளசை வெங்க டேசுரெட்டா!
நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன். 4
வேறு
வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
கவிதையினை வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட நீகேட்டு
நன்கு போற்றி,
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள்
ஜதிபல் லக்கு,
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழி
வாழ்க நீயே!
-சுப்பிரமணிய பாரதி
2.5.1919, எட்டயபுரம்
8. ஹிந்து மதாபிமான சங்கத்தார்
 
மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
அமரரைப் போல் மடிவில் லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம்,அதற்குரிய
உபாயமிங்கு செப்பக் கேளீர்!
நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச்
செய்கையெலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணியநல் லறிவொளியாய்த் திகழுமொரு
பரம்பொருளை அகத்தில் சேர்த்து, 1
செய்கையெலாம் அதன்செய்கை,நினைவெல்லாம்
அதன்நினைவு,தெய்வ மேநாம்
உய்கையுற நாமாகி நமக்குள்ளே
யொளிர்வ தென உறுதி கொண்டு,
யொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
வீண் விருப்பம்,புழுக்கம்,அச்சம்,
ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும்
வாளாலே அறுத்தத் தள்ளி.  2
எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்
வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்,
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்;சதுர்வே தங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
மெனப்புவியோர் சொல்லு வாரே.  3
அருமையுறு பொருளிலெலாம் மிக அரிதாய்த்
தனைச்சாரும் அன்பர்க் கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்துமதப் பெற்றி தன்னைக்
கருதியதன் சொற்படி யிங் கொழுகாத
மக்களெலாம் கவலை யென்னும்
ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்
தழிகின்றார் ஓய்வி லாமே.  4
இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகந்
தனையுலகில் இசைக்க வல்ல,
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்;
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற்
காரைக்குடியூர் தனிலே சால
உத்தமராந் தனவணிகர் குலத்துதித்த
இளைஞர்பலர்,ஊக்கம் மிக்கார்.  5
உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார்,
அன்பொன்றே உறுதி யென்பார்,
வண்மையே குலதர்ம மெனக்கொண்டார்
தொண்டொன்றே வழியாக் கண்டார்;
ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்;
அவ்வன்பின் ஊற்றத்தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான
சங்கமொன்று சேர்த்திட்டாரே.  6
பலநூல்கள் பதிப்பித்தும்,பல பெரியோர்
பிரசங்கம் பண்ணு வித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசா
லைபலவும் நாட்டி யுந்தம்
குலமுயர நகருயர நாடுயர
உழைக்கின்றார்,கோடி மேன்மை
நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி
வாழ்ந்தொளிர்க,நிலத்தின் மீதே!  7
9. வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு
ஆசிரியப்பா
வருக செல்வ!வாழ்கமன் நீயே!
வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்
பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த
நற்றவக் புதல்வ! நல்வர வுனதே!
மேதக நீயும்நின் காதலங் கிளியும் 5
என்றனைக் காணுமா றித்தனை காதம்
வந்தனிர்!வாழ்திர்!என் மனம்மகிழ்ந் ததுவே
செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன். 10
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில.
போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்?
மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,
அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின. 15
போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்
அமைதிபெற் றுய்வ ராயினர். என்வே,
பாரத தேவி பழமைபோல் திருவருள்
பொழிகர லுற்றனள்,பொருள்செயற் குரிய
தொழிற்கணம் பலப்பல தோன்றின,பின்னும் 20
கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம்,இரதத்
துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,
எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால். 25
மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம் என்
பாலரின் மீது படுதலுற் றனவே.
ஆயினும் என்னை?ஆயிரங் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை. 30
நல்குர வாதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால்
எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால்
நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல.
நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு. 35
மருத்துவ ராக வந்தனர் என்பதூஉம்
பொய்யிலை.ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில
நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே!
என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி
இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி 40
ஒருவரை யொருவர் ஒறுத்திட லிலாது,
செவ்விதின் வாழ்க!அச் சீர்மிகு சாதியின்
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க!
வாழ்க நீ! வாழ்கநின் மனமெனும் இனிய
வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்! 45
மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!

6. பிழைத்த தென்னந்தோப்பு
வயலிடை யினிலே-செழுநீர்-மடுக் கரையினிலேஅய லெவரு மில்லை-தனியே-ஆறுதல் கொள்ள வந்தேன்.
காற்றடித் ததிலே-மரங்கள்-கணக்கிடத் தகுமோ?நாற்றி னைப்போலே-சிதறி-நாடெங்கும் வீழ்ந்தனவே.
சிறிய திட்டையிலே,உளதோர்-தென்னஞ் சிறுதோப்புவறியவ னுடைமை-அதனை-வாயு பொடிக்க வில்லை
வீழ்ந்தன சிலவாம்-மரங்கள்-மீந்தன பலவாம்;வாழ்ந்திருக்க வென்றே-அதனை-வாயு பொறுத்து விட்டான்
தனிமை கண்டதுண்டு;-அதில்-சார மிருக்கு தம்மா!பனிதொலைக்கும் வெயில்,-அது தேம்-பாகு மதுர மன்றோ?
இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்பவொளித்திரளாய்;பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.
நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.
வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே
7. அக்கினிக் குஞ்சு
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதைஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;வெந்து தணிந்தது காடு;-தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.
8. சாதாரண வருஷத்துத் தூமகேது
தினையின் மீது பனைநின் றாங்குமணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்ழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்தூம கேதுச் சுடரே,வாராய்!
எண்ணில் பல கோடி யோசனை யெல்லைஎண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்புனைந்த நின்னெடுவால் போவதென் கின்றார்.
மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டிஏழையர்க் கேதும் இடர்செயா தேநீபோதி யென்கின்றார்;புதுமைகள் ஆயிரம்நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால்.
பாரத நாட்டில் பரவிய எம்மனோர்நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;உனதியல் அன்னியர் உரைத்தடக் கேட்டேதெரிந்தனம்;எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.
வாராய்,சுடரே!வார்த்தைசில கேட்பேன்;தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்திநீபோவை யென்கின்றார்; பொய்யோ,மெய்யோ?
ஆதித் தலைவி யாணையின் படிநீசலித்திடுந் தன்மையால்,தண்டம் நீ செய்வதுபுவியினைப் புனிதமாப் புனைதற் கேயெனவிளம்பு கின்றனர் அது மெய்யோ,பொய்யோ?
ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறைமண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்விளையு மென்கின்றார்;மெய்யோ,பொய்யோ?
சித்திகள் பலவும்,சிறந்திடு ஞானமுமமீட்டும் எம்மிடைநின் வரவினால் விளைவதாப்புகலு கின்றனர்; அது பொய்யோ,மெய்யோ?
9. அழகுத் தெய்வம்
மங்கியதொர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை;பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்.புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்ததேன். 1 
யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?என்றேன்;யோகமே தவம்,தவமே யோகமென உரைத்தாள்.ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?என்றேன்;இரண்டுமாம்,ஒன்று மாம்,யாவுமாம்என்றாள்.தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?என்றேன்.வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்விருப்புடனே பெய்குவது வேறாமோ?என்றாள்.  2
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?என்றேன்.காலமே மதியினுக்கோர் கருவியாம்என்றாள்.ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?என்றேன்;நானிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்என்றாள்ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?என்றேன்;எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்என்றாள்.மூலத்தைச் சொல்லவோ?வேண்டாமோ?என்றேன்;முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.  3
10. ஒளியும் இருளும்
வானமெங்கும் பரிதியின் சோதி;மலைகள் மீதும் பரிதியின் சோதி;தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கேதரையின் மீதும் தருக்களின் மீதும்கான கத்திலும் பற்பல ஆற்றின்கரைகள் மீதும் பரிதியின் சோதி;மானவன்தன் உளத்தினில் மட்டும்வந்து நிற்கும் இருளிது வென்னே! 1
சோதி என்னும் கரையற்ற வெள்ளம்தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்சூறை,மாசறு சோதி யனந்தம்,சோதி என்னும் நிறைவிஃதுலகைச்சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்குமைந்து சோரும் கொடுமையி தென்னே! 2
தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,காம முற்று நிலத்தொடு நீரும்காற்றும் நன்கு தழுவி நகைத்தேதாம யங்கநல் லின்புறுஞ் சோதி,தரணி முற்றும் ததும்பி யிருப்ப,தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே! 3
நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே! 4
11. சொல்
சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளைநம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.
தேவர் வருகவென்று சொல்வதோ?-ஒருசெம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்,ஆவ லறிந்துவரு வீர்கொலோ?-உம்மையன்றி யொருபுகலும் இல்லையே. 1
ஓம்என் றுரைத்துவிடிற் போதுமோ?-அதில்உண்மைப் பொருளறிய லாகுமோ?தீமை யனைத்துமிறந்தேகுமோ?-என்தன்சித்தம் தெளிவுநிலை கூடுமோ?  2
உண்மை ஒளிர்கஎன்று பாடவோ?-அதில்உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?வண்மை யுடையதொரு சொல்லினால்-உங்கள்வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம். 3
தீயை அகத்தினிடை மூட்டுவோம்-என்றுசெப்பும் மொழிவலிய தாகுமோ?ஈயைக் கருடநிலை யேற்றுவீர்-எம்மைஎன்றுந் துயரமின்றி வாழ்த்துவீர்.  4
வான மழைபொழிதல் போலவே-நித்தம்வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்;கானை அழித்து மனை கட்டுவீர்-துன்பக்கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்.  5
விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்குவீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்-நல்லதீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.  6
மின்ன லனையதி றல் ஓங்குமே-உயிர்வெள்ளம் கரையடங்கிப் பாயுமே;தின்னும் பொருளமுதம் ஆகுமே-இங்குச்செய்கை யதனில் வெற்றி யேறுமே. 7
தெய்வக் கனல்விளைந்து காக்குமே-நம்மைச்சேரும் இருளழியத் தாக்குமே;கைவைத் ததுபசும்பொன் ஆகுமே-பின்புகாலன் பயமொழிந்து போகுமே.  8
வலிமை,வலிமைஎன்று பாடுவோம்-என்றும்வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்-நெஞ்சில்கவலை யிருளனைத்தும் நீங்கினோம். 9
அமிழ்தம்,அமிழ்தம்என்று கூறுவோம்-நித்தம்அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;தமிழில் பழமறையைப் பாடுவோம்-என்றும்தலைமை பெருமை புகழ் கூடுவோம். 10
12. கவிதைத் தலைவி
வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி!தினமும்இவ் வுலகில் சிதறியே நிகழும்பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியைவாழ்க்கைப் பாலையில் வளர்பல முட்கள்போல்பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும்
வெறுங்கதைத் திரளை,வெள்ளறி வுடையமாயா சக்தியின் மகளே!மனைக்கண்வாழ்வினை வகுப்பாய்,வருடம் பலவினும்ஓர்நாட் போலமற் றோர்நாள் தோன்றாதுபலவித வண்ணம் வீட்டிடைப் பரவ
நடத்திடுஞ் சக்தி நிலையமே!நன்மனைத்தலைவீ!ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள்அனைத்தையும் பயன்நிறை அனுபவ மாக்கி,உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து,ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து
வான சாத்திரம்,மகமது வீழ்ச்சி,சின்னப் பையல் சேவகத் திறமை;எனவரு நிகழ்ச்சி யாவே யாயினும்,அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து,இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும்
பேதை மாசத்தியின் பெண்ணே!வாழ்க!காளியின் குமாரி!அறங்காத் திடுகவாழ்க!மனையகத் தலைவீ வாழ்க!
13. கவிதைக் காதலி
வாராய்!கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன,நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டேஅந்தநாள் நீயெனை அடிமையாக் கொள,யாம்மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து
எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;கலந்துயாம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்பூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்றதீங்குரலு டைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்;மலரினத் துன்தன் வாள்விழி யொப்ப
நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்;குளிர்புனற்சுனைகளில் உன்மணிச் சொற்கள் போல் தண்ணியநீருடைத் தறிகிறேன்;நின்னொடு தமியனாய்நீயே உயிரெனத் தெய்வமும் நீயெனநின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்.
வானகத் தமுதம் மடுத்திடும் போழ்துமற்றத னிடையோர் வஞ்சகத் தொடுமுள்வீழ்ந்திடைத் தொண்டையில் வேதனை செய்தன.நின்னொடு களித்து நினைவிழந் திருந்தஎனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற்
கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமைஅடிநா முள்ளினை அயல்சிறி தேகிக்களைந்து பின்வந்து காண்பொழுத ஐயகோ!மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்மிடிமைநோய் தீர்ப்பான் வீணர்தம் முலகப்
புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள்தென்திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்திருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து,அவன்பணிசெய இசைந்தேன்,பதகிநீ!என்னைப்பிரிந்துமற் றகன்றனை பேசொணா நின்னருள்.
இன்பமத் தனையும் இழந்துநான் உழன்றேன்,சின்னாள் கழிந்தபின் -யாதெனச் செப்புகேன்!நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது.கதையிலோர் முனிவன் கடியதாஞ் சாபவிளைவினால் பன்றியா வீழ்ந்திடு முன்னர்த்
தன்மக னிடை என் தனயநீ யான்புலைப்பன்றியாம் போது பார்த்துநில் லாதே!விரைவிலோர் வாள்கொடு வெறுப்புடை யவ்வுடர்லதுணித்தெனைக் கொன்று தொலைத்தலுன் கடனாம்.பாவமிங் கில்லையென் பணிப்பிஃ தாகலின்!
தாதைசொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்.முனிவனும் பன் றியா முடிந்தபின்,மைந்தன்முன்னவன் கூறிய மொரீயினை நினைந்தும்,இரும்புகழ் முனிவனுக்குன இழியதா மிவ்வுடல்அமைந்தது கண்டுநெஞ் சழன்றிடல் கொண்டும்.
வாள்கொடு பன்றியை மாய்த்திட லுற்றனன்,ஆயிடை மற்றவ் வருந்தவப் பன்றிஇனையது கூறும்.ஏடா!நிற்க!நிற்க!நிற்க!முன்னர்யாம் நினைந்தவாறுஅத்துணைத் துன்புடைத் தன்றிவ் வாழ்க்கை
காற்றும் புனலும் கடிப்புற் கிழங்கும்இனையபல் லின்பம் இதன் கணே யுளவாம்;ஆறேழ் திங்கள் அகன்றபின் வருதியேல்பின்னெனைக் கோறலாம்பீழையோ டிவ்வுரைசெவியுறீஈ முடிசாய்த் திளையவன் சென்றனன்.
திங்கள்பல போனபின் முனிமகன் சென்றதாதைப் பன்றியோர் தடத்திடைப் பெடையொடும்போத்தினம் பலவொடும் அன்பினிற் பொருத்திஆடல்கண் டயிர்த்தனன். ஆற்றொணா தருகுசென்றுஎந்தாய்!எந்தாய்!யாதரோ மற்றிது!
வேதநூ லறிந்த மேதகு முனிவரர்போற்றிட வாழ்ந்தநின் புகழ்க்கிது சாலுமோ?எனப்பல கூறி இரங்கினன்;பின்னர்வாள்கொடு பன்றியை பாய்ததிடல் விழைந்தான்.ஆயிடை முனிவன் அகம்பதைக் துரைக்கும்
செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!எனக்கிவ் வாழ்க்கை இன்புடைத் தேயாம்;நினக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிகஎன்றிது கூறி இருந்தவப் பன்றிதன்
இனத்தொடும் ஓடி இன்னுயிர் காத்தது.இன்னது கண்ட இளையவன் கருதும்.ஆவா!மானிடர் அருமையின் வீழ்ந்துபுன்னிலை யெய்திய போழ்ததில் நெடுங்கால்தெரு மரு கின்றிலர் சிலபகல் கழிந்தபின்
புதியதா நீசப் பொய்மைகொள் வாழ்வில்விருப்புடை யவராய் வேறுதா மென்றும்அறிந்திலரேபோன் றதிற்களிக் கின்றார்.என்சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்.திமிங்கில வுடலும் சிறியபுன் மதியும்
ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்தன்பணிக் கிசைந்தென் தருக்கெலாம் அழிந்துவாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை!
14. மது
போகி
பச்சை முந்திரித் தேம்பழங் கொன்றுபாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தேஇச்சை தீர மதுவடித் துண்போம்;இஃது தீதென் றிடையர்கள் சொல்லும்கொச்சைப் பேச்சிற்கை கொட்டி நகைபோம்;கொஞ்சு மாரும் கூட்டுணும் கள்ளும்இச்சகத்தினில் இன்பங்க ளன்றோ?இவற்றின் நல்லின்பம் வேறொன்று முண்டோ? 1
யோகி
பச்சை முந்திரி யன்ன துலகம்;பாட்டுப் பாடடல் சிவக்களி எய்தல்;இச்சை தீர உலகினைக் கொல்வோம்;இனிய சாறு சிவமதை உண்போம்;கொச்சை மக்களுக் கிஃதெளி தாமோ?கொஞ்சு மாதொரு குண்டலி சக்திஇச்சகத்தில் இவையின்ப மன்றோ?இவற்றின் நல்லின்பம் வேறுளதாமோ? 2
போகி
வெற்றி கொள்ளும் படைகள் நடத்திவேந்தர் தம்முட் பெரும்புகழ் எய்திஒற்றை வெள்ளைக் கவிதை உயத்தேஉலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்;சுற்று தேங்கமழ் மென்மலர் மாலைதோளின் மீதுருப் பெண்கள் குலாவச்சற்றும் நெஞ்சம் கவலுத லின்றித்தரணி மீதில் மதுவுண்டு வாழ்வோம். 3
யோகி
வெற்றி ஐந்து புலன்மிசைக் கொள்வோம்;வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்;ஒற்றை வெள்ளைக் கவிதைமெய்ஞ் ஞானம்உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்;மற்றவர் தம்முட் சீர்பெற வாழ்வோம்;வண்ம லர்நறு மாலை தெளிவாம்!சுற்றி மார்பில் அருள்மது வுண்டேதோகை சக்தியொ டின்புற்று வாழ்வோம். 4
போகி
நல்ல கீதத் தொழிலுணர் பாணர்நடனம் வல்ல நகைமுக மாதர்அல்லல் போக இருடன் கூடிஆடி யாடிக் களித்தின்பங் கொள்வோம்;சொல்ல நாவு கனியுத டாநற்சுதியிலொத்துத் துணையொடும் பாடிபுல்லும் மார்பினோ டாடிக் குதிக்கும்போகம் போலொரு போகமிங் குண்டோ? 5
யோகி
நல்ல கீதம்,சிவத்தனி நாதம்,நடன ஞானியர் சிற்கபை யாட்டம்;அல்லல் போக இவருடன் சேர்ந்தேஆடி யாடிப் பெருங்களி கொள்வோம்;சொல்ல நாவில் இனிக்கு தடா!வான்சுழலும் அண்டத் திரளின் சுதியில்செல்லும் பண்ணொடு சிற்சபை யாடும்செல்வம் போலொரு செல்வமிங் குண்டோ? 6
ஞானி
மாத ரோடு மயங்கிக் களித்தும்மதுர நல்லிசை பாடிக் குதித்தும்காதல் செய்தும் பெறும்பல இன்பம்,களில் இன்பம் கலைகளில் இன்பம்,பூத லத்தினை ஆள்வதில் இன்பம்பொய்மை யல்ல இவ்வின்பங்க ளெல்லாம்யாதுஞ் சக்தி இயல்பெனக் கண்டோம்இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே. 7
இன்பந் துன்பம் அனைத்தும் கலந்தேஇச்ச கத்தின் இயல்வலி யாகிமுன்பு பின்பல தாகியெந் நாளும்மூண்டு செல்லும் பராசக்தி யோடஅன்பில் ஒன்றிப் பெருஞ்சிவ யோகத்தறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்,துன்பு நேரினும் இன்பெனக் கொள்வார்துய்ப்பர் இன்பம் மிகச்சுவை கொண்டே. 8
இச்சகத்தோர் பொருளையுந் தீரர்இல்லை யென்று வருந்துவதில்லை;நச்சி நச்சி உளத்தொண்டு கொண்டுநானிலத்தின்பம் நாடுவதில்லை;பிச்சை கேட்பது மில்லை;இன்பத்தில்பித்துக் கொண்டு மயங்குவ தில்லை;துச்ச மென்று சுகங்களைக் கொள்ளச்சொல்லு மூடர்சொற் கேட்பதும் இல்லை. 9
தீது நேர்ந்திடின் அஞ்சுவ தில்லை.தேறு நெஞ்சினொ டேசிவங் கண்டோர்;மாதர் இன்பம் முதலிய வெல்லாம்வைய கத்துச் சிவன் வைத்த வென்றேஆத ரித்தவை முற்றிலும் கொள்வார்;அங்கும் இங்குமொன் றாமெனத் தேர்வார்;யாது மெங்கள் சிவன்திருக் கேளி;இன்பம் யாவும் அவனுடை இன்பம். 10
வேத மந்திர நாதம் ஒருபால்வேயி னின்குழல் மெல்லொலி ஓர்பால்,காதல் மாதரொ டாடல் ஒருபால்,களவெம் போரிடை வென்றிடல் ஓர்பால்,போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்,பொலியுங் கள்வெறி துய்த்தல்மற் றோர்பால்;ஏதெ லாம்நமக் கின்புற நிற்கும்எங்கள் தாய்அருட் பாலது வன்றே. 11
சங்கீர்த்தனம் (மூவரும் சேர்ந்து பாடுதல்)
மதுநமக்கு,மதுநமக்கு,மதுநமக்கு விண்ணெலாம்,மதுரமிக்க ஹரிநமக்கு,மதுவெனக் கதித்தலால்;மதுநமக்கு மதியுநாளும்,மதுநமக்கு வானமீன்,மதுநமக்கு,மண்ணுநீரும் மதுநமக்கு,மலையெலாம்,மதுநமக்கொர் தோல்விவெற்றி,மதுநமக்கு வினையெலாம்,
மதுநமக்கு,மாதரின்பம்,மதுநமக்கு மதுவகை;மதுநமக்கு,மதுநமக்கு,மதுமனத்தொடாவியும்மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால்.
15. சந்திரமதி
ராகம்-ஆனந்த பைரவி  தாளம்-ஆதி
பச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்பாவை யடி சந்திரமதி!இச்சைக் கினிய மது!;-என்தன்இருவிழிக்குத் தே நிலவு;நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்லநாகமணி யுள்ளதென்பார்;துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்சோதி வளரு தடீ! 
பேச்சுக் கிடமே தடி!-நீபெண்குலத்தின் வெற்றி யடி!ஆச்சர்ய மாயை யடி!-என்தன்ஆசைக் குமாரி யடி!நீச்சு நிலை கடந்த-வெள்ளநீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,தீச்சுடரை வென்ற வொளி-கொண்டதேவி!நினை விழந்தேனடி! 
நீலக் கடலினிலே-நின்தன்நீண்ட குழல் தோன்றுதடி!கோல மதியினி லே-நின்தன்குளிர்ந்த முகங் காணுதடி!ஞால வெளியினி லே-நின்தன்ஞான வொளி வீசுதடி!கால நடையினி லே-நின்தன்காதல் விளங்குதடி!   (பச்சைக் குழந்தை யடி!)
4. சான்றோர்
1. தாயுமானவர் வாழ்த்து
என்றும் இருக்க உளங்கொண்டாய்!இன்பத் தமிழுக் கிலக்கியமாய்,இன்றும் இருத்தல் செய்கின்றாய்!இறவாய் தமிழோ டிருப்பாய் நீ!ஒன்று பொருள ஃதின்பமெனஉணர்ந்தாய், தாயு மானவனே!நின்ற பரத்து மாத்திரமோ?நில்லா இகத்தும் நிற்பாய் நீ!
2. நிவேதிதா
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்கோயிலாய் அடியேன் நெஞ்சில்இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நாடாம்பயிர்க்கு மழையாய்,இங்குபொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.
3. அபேதாநந்தா
சுருதியும் அரிய உபநிட தத்ன்தொகுதியும் பழுதற உணர்ந்தோன்.கருதிடற் கரிய பிரமநன் னிலையைக்கண்டுபே ரொளியிடைக் களித்தோன்,அரிதினிற் காணும் இயல்பொடு புவியின்அப்புறத் திருந்துநண் பகலில்பரிதியி னொளியும் சென்றிடா நாட்டில்மெய்யொளி பரப்பிடச் சென்றோன். 1
வேறு
ஒன்றேமெய்ப் பொருளாகும்;உயிர்களெலாம்அதன்வடிவாம்,ஓருங்காலை;என்தேவன் உன்தேவன் என்றுலகர்பகைப்பதெலாம் இழிவாம் என்று,நன்றேயிங் கறிவுறுத்தும் பரமகுருஞானமெனும் பயிரை நச்சித்தின்றேபா ழாக்கிடுமைம் புலன்களெனும்விலங்கின த்தைச் செகுத்த வீரன். 2
வேறு
வானந் தம்புகழ் மேவி விளங்கியமாசி லாதி குரவணச் சங்கரன்ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும்நண்ணி னானெனத் தேசுறு மவ்விவே-கானந் தபெருஞ் சோதி மறைந்தபின்அவனி ழைத்த பெருந்தொழி லாற்றியேஊனந் தங்கிய மானிடர் தீதெலாம்ஒழிக்கு மாறு பிறந்த பெருந்தவன். 3
வேறு
தூய அபே தாநந்தனெனும் பெயர்கொண்டொளிர்தருமிச் சுத்த ஞானி,நேயமுடன் இந்நகரில் திருப்பாதஞ்சாத்தியருள் நெஞ்சிற் கொண்டு,மாயமெலாம் நீங்கியினி தெம்மவர்நன்னெறிசாரும் வண்ணம் ஞானம்தோயநனி பொழிந்திடமோர் முகில்போன்றான்இவன்பதங்கள் துதிக்கின் றோமே 4
4. ஓவியர்மணி இரவிவர்மா
சந்திர னொளியை ஈசன் சமைத்து, அது பருகவென்றேவந்திடு சாத கப்புள் வகுத்தனன்;அமுதண் டாக்கிப்பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை. 1
மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம்இலகிய அழகை ஈசன் இயற்றினான்,சீர்த்தி இந்தஉலகினில் எங்கும் வீசி,ஓங்கிய இரவி வர்மன்அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகருமாறே. 2
மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான்,இந்நாள்பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போது மென்பான். 3
அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்விதிறம்பட வகுத்த எம்மான்!செய்தொழில் ஒப்பு நோக்கவிரும்பிய கொல்லாம் இன்று விண்ணுல கடைந்து விட்டாய்?அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம். 4
காலவான் போக்கில் என்றும் கழிகிலாப் பெருமை கொண்டகோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்,சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ? 5
5. சுப்பராம தீட்சிதர்
அகவல்
கவிதையும் அருஞ்சுவைக் கான நூலும்புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும்மற்றுள பெருந்தொழில் வகைகளிற் பலவும்வெற்றிகொண் டிலங்கிய மேன்மையார் பரதநாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப.
ஈட்டிய செல்வம் இறந்தமை யானனும்ஆண்டகை யொடுபுகழ் அழிந்தமை யானும்மாண்டன பழம்பெவரு மாட்சியார் தொழிலெலாம்;தேவர்கள் வாழ்ந்த சீர்வளர் பூமியில்மேவிய குரக்கர் விளங்குதல் போல.
நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில்சீரிலாப் புல்லர் செறிந்துநிற் கின்றார்;இவரிடைசுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்,அரக்கர்தங் குலத்திடை வீடண னாகவும்,
சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்,போற்றதற் குரிய புனிதவான் குலத்தில்நாரத முனிவன் நமர்மிசை யரளால்பாரத நாட்டில் பழமாண் புறுகெனமீட்டுமோர் முறைஇவன் மேவினன் என்ன,
நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்தோமறு சுப்ப ராமனற் பெயரோன்நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்இன்னான் தானும் எமையகன் றேகினன்;என்னே நம்மவர் இயற்றிய பாவம்!
இனியிவ னனையரை எந்நாட் காண்போம்?கனியறு மரமெனக் கடைநிலை யுற்றோம்அந்தோ மறலிநம் அமுனைக் கவர்ந்தான்!நொந்தோ பயனிலை நுவல யா துளதே?
விருத்தம்
கன்னனொடு கொடைபோயிற்று;உயர்கம்பநாடனுடன் கவிதை போயிற்றுஉன்னரிய புகழ்ப்பார்த்த னொடுவீரம்அகன்றதென உரைப்பர் ஆன்றோர்;என்னகநின் றகலாதோன் அருட் சுப்பராமனெனும் இணையி லாவிற்பன்னனொடு சுவைமிகுந்த பண்வளனும்அகன் றதெனப் பகர லாமே.  1
கலைவிளக்கே!இளசையெனும் சிற்றூரில்பெருஞ்சோதி கதிக்கத் தோன்றும்மலைவிளக்கே!எம்மனையர் மனவிருளைமாற்றுதற்கு வந்த ஞானநிலைவிளக்கே!நினைப்பிரிந்த இசைத்தேவிநெய்யகல நின்ற தட்டின்உலைவிளக்கே யெனத்தளரும்;அந்தோ!நீஅகன் றதுயர் உரைக்ற் பாற்றோ? 2
மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்தங்களையும் வணங்க லாதேன்தன்னனைய புகழுடையாய்!நினைக்கண்டபொழுதுதலை தாழ்ந்து வந்தேன்;உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம்எனக்கருதி வந்தேன்;அந்தோ!இன்னமொரு காலிளசைக் கேகிடின்,இவ்வெளியன்மனம் என்ப டாதோ?  3
6. மகாமகோபாத்யாயர்
செம்பரிதி ஒளிபெற்றான்;பைந்நறவுசுவைபெற்றுத் திகழ்ந்தது;ஆங்கண்உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்றுஎவரேகொல் உவத்தல் செய்வார்?கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநாதப்புலவன் குறைவில் கீர்த்திபம்பலுறப் பெற்றனனேல்,இதற்கென்கொல்பேருவகை படைக் கின்றீரே?
அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்இன்றெம்மை ஆள்வோ ரேனும்,பன்னியசீர் மகாமகோ பாத்தியாயப்பதவி பரிவுன் ஈந்துபொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநாதன்றனக்குப் புகழ்செய் வாரேல்,முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்இவன்பெருமை மொழிய லாமோ?
நிதிய றியோம்,இவ்வுலகத் தொருகோடிஇன்பவகை நித்தம் துய்க்கும்கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க;குடந்தைநகர்க் கலைஞர் கோவே!பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்காலமெலாம் புலவோர் வாயில்துதியறிவாய்,அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,இறப்பின்றித் துலங்கு வாயே.
7. வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
1 (ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மாகராஜ வெங்கடேசு ரெட்பப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதி எழுதும்சீட்டுக் கவிகள்.)
பாரிவாழ்ந் திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின் கண்ணேஆரிய!நீயிந் நாளில் அரசுவீற் றிருக்கின் றாயால்;காரியங் கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லேயோ? 1
விண்ணள வுயர்ந்த கீர்த்தி வெங்கடேசு ரெட்டமன்னா!பண்ணள வுயர்ந்த தென்பணி பாவள வுயர்ந்த தென்பாஎண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ்க் கவிஞர் வந்தால்,அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகி லாயோ? 2
கல்வியே தொழிலாக் கொண்டாய்!கவிதையே தெய்வமாகஅல்லுநன் பகலும் போற்றி அதைவழி பட்டுநின்றாய்!சொல்லிலே நிகரி லாத புலவர்நின் சூழ லுற்றால்எல்லினைக் காணப் பாயும் இடபம்போல் முற்ப டாயோ? 3
-சுப்பிரமணிய பாரதி2.5.1919, எட்டயபுரம்
2 (ஸ்ரீ எட்டயபுரம் மகாராஜ ராஜேந்த்ர ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ.சி.சுப்பிரமணிய பாரதி எழுதும் ஓலைத் தூக்கு)
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுலசேகரன் ஸ்ரீ ராஜ ராஜன்,தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்கடேசுரெட்ட சிங்கன் காண்க.வாசமிகு துழாய்த் தாரான் கண்ணனடிமறவாத மனத்தான்,சக்திதாசனெனப் புகழ்வளரும் சுப்ரமண்யபாரதிதான் சமைத்த தூக்கு.  1
மன்னவனே!தமிழ்நாட்டில் தமிழறிந்தமன்னரிலை யென்று மாந்தர்இன்ன லுறப் புகன்றவசை நீமகுடம்புனைந்த பொழு திரிந்த தன்றே!சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு,சுவைகண்டு,துய்த்தத் துய்த்துக்கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றே!  2
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்தமிழ்மொழியைப் புகழி லேற்றும்கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்வசையென்னாற் கழிந்த தன்றே!சுவைபுதிது,பொருள்புதிது,வளம்புதிது,சொற்புதிது சோதி மிக்கநவகவிதை,எந்நாளும் அழியாதமகாகவிதை என்று நன்கு.  3
பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்புலவோரும் பிறரு மாங்கேவிராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்தாமுமிக வியந்து கூறிப்பராவி யென்தன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்போற்றுகின்றார்;பாரோ ரேத்துந்தராதிபனே!இளசை வெங்க டேசுரெட்டா!நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன். 4
வேறு
வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்கவிதையினை வேந்த னே!நின்நயப்படுசந் நிதிதனிலே நான்பாட நீகேட்டுநன்கு போற்றி,ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள்ஜதிபல் லக்கு,வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழிவாழ்க நீயே!
-சுப்பிரமணிய பாரதி2.5.1919, எட்டயபுரம்
8. ஹிந்து மதாபிமான சங்கத்தார் மண்ணுலகின் மீதினிலே எக்காலும்அமரரைப் போல் மடிவில் லாமல்திண்ணமுற வாழ்ந்திடலாம்,அதற்குரியஉபாயமிங்கு செப்பக் கேளீர்!நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச்செய்கையெலாம் நடத்தும் வீறாய்த்திண்ணியநல் லறிவொளியாய்த் திகழுமொருபரம்பொருளை அகத்தில் சேர்த்து, 1
செய்கையெலாம் அதன்செய்கை,நினைவெல்லாம்அதன்நினைவு,தெய்வ மேநாம்உய்கையுற நாமாகி நமக்குள்ளேயொளிர்வ தென உறுதி கொண்டு,யொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,வீண் விருப்பம்,புழுக்கம்,அச்சம்,ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும்வாளாலே அறுத்தத் தள்ளி.  2
எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்,தப்பாதே இவ்வுலகில் அமரநிலைபெற்றிடுவார்;சதுர்வே தங்கள்மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்இவ்வுண்மை விளங்கக் கூறும்துப்பான மதத்தினையே ஹிந்துமதமெனப்புவியோர் சொல்லு வாரே.  3
அருமையுறு பொருளிலெலாம் மிக அரிதாய்த்தனைச்சாரும் அன்பர்க் கிங்குபெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்ஹிந்துமதப் பெற்றி தன்னைக்கருதியதன் சொற்படி யிங் கொழுகாதமக்களெலாம் கவலை யென்னும்ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்தழிகின்றார் ஓய்வி லாமே.  4
இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகந்தனையுலகில் இசைக்க வல்ல,புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்பாரறியப் புகட்டும் வண்ணம்;தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற்காரைக்குடியூர் தனிலே சாலஉத்தமராந் தனவணிகர் குலத்துதித்தஇளைஞர்பலர்,ஊக்கம் மிக்கார்.  5
உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார்,அன்பொன்றே உறுதி யென்பார்,வண்மையே குலதர்ம மெனக்கொண்டார்தொண்டொன்றே வழியாக் கண்டார்;ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்;அவ்வன்பின் ஊற்றத்தாலேதிண்மையுறும் ஹிந்துமத அபிமானசங்கமொன்று சேர்த்திட்டாரே.  6
பலநூல்கள் பதிப்பித்தும்,பல பெரியோர்பிரசங்கம் பண்ணு வித்தும்நலமுடைய கலாசாலை புத்தகசாலைபலவும் நாட்டி யுந்தம்குலமுயர நகருயர நாடுயரஉழைக்கின்றார்,கோடி மேன்மைநிலவுறஇச் சங்கத்தார் பல்லூழிவாழ்ந்தொளிர்க,நிலத்தின் மீதே!  7
9. வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு
ஆசிரியப்பாவருக செல்வ!வாழ்கமன் நீயே!வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்பொற்சிறு தீவகப் புரவலன் பயந்தநற்றவக் புதல்வ! நல்வர வுனதே!மேதக நீயும்நின் காதலங் கிளியும் 5
என்றனைக் காணுமா றித்தனை காதம்வந்தனிர்!வாழ்திர்!என் மனம்மகிழ்ந் ததுவேசெல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடைமுன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன். 10
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில.போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்?மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின. 15
போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்அமைதிபெற் றுய்வ ராயினர். என்வே,பாரத தேவி பழமைபோல் திருவருள்பொழிகர லுற்றனள்,பொருள்செயற் குரியதொழிற்கணம் பலப்பல தோன்றின,பின்னும் 20
கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.யாற்றினிற் பெண்களை எறிவதூஉம்,இரதத்துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால். 25
மேற்றிசை இருளினை வெருட்டிய ஞானஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம் என்பாலரின் மீது படுதலுற் றனவே.ஆயினும் என்னை?ஆயிரங் கோடிதொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை. 30
நல்குர வாதி நவமாம் தொல்லைகள்ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால்எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால்நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல.நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு. 35
மருத்துவ ராக வந்தனர் என்பதூஉம்பொய்யிலை.ஆதலிற் புகழ்பெறும் ஆங்கிலநாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே!என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்திஇருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி 40
ஒருவரை யொருவர் ஒறுத்திட லிலாது,செவ்விதின் வாழ்க!அச் சீர்மிகு சாதியின்இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க!வாழ்க நீ! வாழ்கநின் மனமெனும் இனியவேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்! 45மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.